29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"இந்த நேரத்துல யாரு போன் பண்ணிருப்பா?" என்று யோசித்தவன் எடுப்பதற்குள் நின்று விட்டது.

மீண்டும் அடிக்க, "ஷிவு... டிஸ்டப் பண்ணாத... ஹ்ம்ம்... தூக்கம் வருது..." என்று சிணுங்கியபடி உறங்கினாள் அழகி.

"அய்யோ இவ வேற நேரங்காலம் தெரியாம சிணுங்கி என்னை படுத்துறாளே? ஆமா, யாரை ஷிவுன்னு கூப்பிடறா?" என்று யோசித்தவன் தன்னை தான் அழைக்கிறாள் என்று உணரும் வேளை மீண்டும் கடமை அழைத்தது.

விரைந்து தயாரானாலும் விழிகள் தன்னவளை ஆசையாய் சூழ்ந்திருந்தது.

"எனக்கு செல்ல பேரு வச்சிருக்க, ஆனா கூப்பிட மாட்ட? தூக்கத்துல உன்னையும் அறியாம உளர்ற? உன்னை... என்ன பண்ணலாம்? இப்போ நேரம் இல்லை... இருடி வந்து பேசுக்கிறேன்." என்று புலம்பியபடி கிளம்பினான்.

திடிரென்ற வெளிச்சத்திலும் அவனின் மெலிதான புலம்பலிலும் ஒற்றை விழியை அரைமனதாய் லேசாக திறந்து பார்த்தவள்.

" எதுக்கு இப்போ புலம்புறாரு?"என்று முணுமுணுத்துவிட்டு  முழுதும் விழிக்காமலே மீண்டும் உறங்கி போனாள்.

"என்னது நான் ஏன் புலம்புறேனா? பாவி... என்னை புலம்பவும் வச்சுட்டு ஏன்னு கேள்வியும் கேட்டு தூங்குறா பாரு..." என்று பொறுமியவன் அவள் நெற்றியில் இதழ் பதித்து வேகமாய் வெளியேறினான்.

காலை ஆறு மணி அலாரம் காதிற்குள் அடிப்பது போலிருக்க, "ம்ப்ச்..." என்று விழி திறக்காமல் அதை அணைத்தவள்.

"நான் அலாரம் வைக்கவே இல்லையே? நிம்மதியா ஏழு மணி வரைக்கும் தூங்க முடியுதா? நாம தூங்குறதுல பொறாமை பட்டு  யாருடா இந்த வேலையை பார்த்தது? பக்கத்துல தான் தூங்குறாரு... இவ்ளோ சத்தமா அலாரம் அடிக்குது ஆப் பண்ணுதா பாரு தடி மாடு." என்று முணுமுணுத்து கொண்டே விழி திறந்து கணவனை பார்க்கவும், அங்கே அவன் இல்லாமல் வெற்றிடமாக இருக்கவே, தினமும் அவனறியாமல் அவன் முகத்தில் விழிப்பவளுக்கு இன்று ஏமாற்றம் வந்தது.

"இவ்ளோ காலைல எங்க போனாரு?" என்று யோசித்தவள், "அப்போ அவர் தான் அலாரம் வச்சதா? அடப்பாவி எங்க அம்மா வேலையை நல்லா பாக்குறடா நீ." என்று கணவனை திட்டி கொண்டே வேலைகளை முடித்து  கல்லூரிக்கு தயாராக சென்றாள்.

அவசரமாய் வாசலையும் சுவர் கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்தபடி சாப்பிட்டு கொண்டிருப்பவளை சிரிப்புடன் பார்த்த சிவாவின் அம்மா.

"என்னம்மா என்ன இப்படி பஸ் மிஸ் பண்ண பிள்ளையாட்டம் திரு துருன்னு முழிச்சுட்டு இருக்க? எதுக்கு இவ்ளோ டென்ஷன்? நீ ரெடியாகிட்ட? எங்க உன் புருஷன்?" என்றதும் புரையேறியது அழகிக்கு.

'என்னாது புருஷன் எங்கவா? அப்போ  அவன் போனது இவங்களுக்கும் தெரியாதா? அய்யய்யோ அப்போ ஏதோ வில்லங்கத்தை தேடி தான் போயிருக்கான். கன்பாரம். நல்ல படியா திரும்பி வரணும். இப்போ இவங்களை எப்படி சமாளிக்கிறது?' என்று யோசித்தவள் வாயை திறக்கும் முன் வந்து நின்றான்.

பேந்த பேந்த முழித்தவள் வாயை மூடாமல் பார்க்க, 'செம கியூட்..' என்று உள்ளுக்குள் புன்னகைத்தாலும் காட்டி கொள்ளாமல் அப்பாவி போல் முகத்தை வைத்து கொண்டு, "ஈ... போக போகுது." என்று அவள் வாயை மூடியவன்.

"கிளம்பிட்டியா போலாமா? நேரமாச்சு?" என்றான் கைகடிகாரத்தை பார்த்துக்கொண்டே.

'அடப்பாவி என்னமா ஆக்ட் பண்றான்? இவ்ளோ நேரம் மேல தானே இருந்தேன். அப்போ இவன் வரலையே? எப்படி வந்துருப்பான்?' என்று யோசிக்க தொடங்க, அவளின் தலையில் செல்லமாய் குட்டி, "ரொம்ப யோசிக்காதடி பொண்டாட்டி. இப்படி கியூட்டா மூஞ்சிய வச்சிருந்தா காலேஜுக்கு போக மாட்ட... நேரா மேல நம்ம ரூமுக்கு தூக்கிட்டு போயிடுவேன். ஒகேவா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கிசுகிசுத்து கண்ணடித்தான்.

'என்னது?' என்று பதறியவள் நொடி பொழுதில் பையுடன் வந்து நின்றாள்.

"நான் ரெடி." என்று அவசரமாக வாசலுக்கு ஓடினாள்.

அவளின் தவிப்பை அழகாய் ரசித்து தனக்குள் சேமித்து கொண்டே வெளியேறினான் ஷிவா.

வண்டியில் போகும்போதே, "இங்க பாரு மறுபடியும் சொல்றேன். இந்த கேஸ் ரொம்ப பெரிசு... பிரச்னையானதும் கூட... சோ, உன் ஜேம்சபாண்ட் மூளையை இதுல காட்ட நினைக்காத. அப்புறம் எனக்கு பொல்லாத கோபம் வரும். சொல்லிட்டேன்." என்றான் ஷிவா அழுத்தமான குரலில் எச்சரிக்கும் விதமாக.

"ஹுக்கும்..." என்று நொடித்து கொண்டவள்.

"எனக்கு வேற வேலையா இல்ல... எப்போ பாரு உங்களையும் உங்க கேஸையும் பாலோவ் பண்றது தான் எனக்கு வேலையா?" என்றாள் முகத்தை கடுகடுவென்று வைத்து.

"சரி... பார்த்து பத்திரம்டி.." என்று இறக்கி விட்டு அவன் வேலையை கவனிக்க சென்றான்.

அவன் இந்த பக்கம் சென்றதும் இவள் இந்த பக்கம் ஜீவாவுக்கு அழைக்க, "வாசல்ல ரெடி." என்றான்.

முகத்தை மறைத்து கொண்டு வேகமாய் வெளியேறியவள். சற்று தள்ளி இருந்த அவனின் வண்டியில் ஏறினாள்.

"சீக்கிரம்." என்றாள்.

வண்டியை கிளப்பியவன்.

"இது ரிஸ்க். கண்டிப்பா செய்யணுமா அறிவு?" என்றான்.

"நேத்து நடந்தது உனக்கும் ஓகே போல... சரி வண்டியை நிறுத்து நான் இறங்கிக்கிறேன்." என்றாள் கோபமாக.

"எனக்கு ஓகே வா.. ஏய் இறங்கினேன்னா பாரு மூஞ்சிய பேத்துருவேன்." என்றான் கோபமாக.

"அப்போ என் வாயை கிளராம வண்டியை ஒட்டு." என்றாள் அழகி.

இருவரின் நினைவும் நேற்று நடந்த நிகழ்வில் நிலைத்திருந்தது.

*****

"டேய் ஷிவா! நேத்து நைட் பெரிய சம்பவதுக்கு போயிருக்க... என்னை ஏன்டா கூப்பிடலை?" என்று கோபமாய் வந்து நின்றான் கண்ணன்.

"அது மச்சான்... நைட் இருந்த டென்சன்ல எனக்கு எதுவுமே தோனலை டா." என்றான் ஷிவா விழிகள் சிவக்க ருத்ர மூர்த்தியாக.

"சரி இப்போ என்ன பண்ண போற?" என்றான் கண்ணன்.

"எல்லாம் பக்காவா பிளான் போட்டுட்டேன். கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணனும்." என்று நேற்று இரவு சென்ற இடத்தில் நடந்தவைகளை நினைத்து கொதித்து கொண்டிருந்தான்.

***நேற்று இரவு,

"சார் சீக்கிரம் வாங்க. ஹாஸ்ட்டல்லர்ந்து ரெண்டு பொண்ணுங்களை வலுக்காட்டாயமா தூக்கிட்டு போறாங்க. நான் அவங்க கார் டிக்கில இருக்கேன். உங்களுக்கு ஜிபிஎஸ் ல லொகேஷன் ஷேர் பண்ணிருக்கேன் சர். சீக்கிரம் வாங்க." என்றாள் மெதுவாக அந்த பெண்.

"அப்போ மயில்?" என்றான் கேள்வியாக.

"அவ அங்கயே இருக்கா? ஹாஸ்டல் வார்டன் மேல சந்தேகமா இருக்கு. ஏதாவது ஆதாரம் சிக்குதான்னும் வேற என்ன நடக்குதுன்னு பார்க்கவும் அங்கயே இருக்கா." என்றாள் மலர்.

"ஓகே மலர். பீ சேப். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்." என்று அந்த கார் போகும் இடத்திற்கு பின் தொடர்ந்து போக சிட்டாய் பறந்து கொண்டிருந்தான்.

"மலர் நான் அங்க வர்ற வரைக்கும் நீ கார்லர்ந்து வெளிய வர கூடாது." என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.

அரை மணி நேரம் கடந்து அவ்விடத்தை  அடைந்தவன்.

"நான் வந்துட்டேன். நீ எங்க இருக்க?" என்று குறுஞ்செய்தி அனுப்ப, பதிலேதும் வராததால் பதட்டமடைந்தான்.

'நா அவ்ளோ தூரம் சொல்லியும் உள்ள போய்ட்டாளா?' என்று அப்பெண்ணை திட்டியவன் அருகே இருந்த தன் படையிடம், "நான் முதல்ல உள்ள போறேன். பத்து நிமிஷம் கழிச்சு எனக்கு ஒன்னுமில்லைன்னா ஒவ்வொருத்தரா உள்ள வாங்க. உஷாரா வரணும்." என்று நுழைந்தான்.

உள்ளே,

"உன் மேல எனக்கு ஒரு கண்ணு இருந்தது உனக்கே தெரியும். என்ன பண்றது பொறுப்பா உன்னை பிடிச்சிருக்குன்னு உன்கிட்ட வந்து கேட்டேன். ஆனா நீ தான் சம்மதிக்கலை. இப்போ பாரு, நீயா சம்மதிச்சு தான் இங்கே வந்துருக்க. ஒழுங்கா அமைதியா படுத்துரு. உன்கூட கெஞ்சிட்டு இருக்க எங்களுக்கு நேரமில்லை. டாக்டர் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க." என்றான் குரூரமாக சிரித்து.

"ப்ளீஸ்! வேண்டாம் என்னை விட்ரு. நான் என்ன கெடுதல் பண்ணேன் உனக்கு? எதுக்காக இப்படி பண்றிங்க? என்னை விட்டுடுங்க. நீங்கல்லாம் மனுஷங்க தானே? ஒரு பெண்ணை இப்படி பலவந்த படுத்துறது தப்புதானே?" என்று கைகளை விடுவிக்க போராடி கொண்டு கதறினாள்.

ஓங்கி ஒரு அறையை விட்டவன், "என்னடி விட்டா ஓவரா பேசிட்டுருக்க? உனக்கு மட்டும் தான் இவ்ளோ நல்ல இடத்துல ட்ரீட்மெண்ட்... உன் ஹாஸ்டல்லயே இன்னும் அஞ்சு பேர் இருக்காளுங்க. வாரத்துக்கு அஞ்சு பேர்னு மாசத்துக்கு இருபது பேருக்கு இது நடக்குது. இந்த மாதிரி இன்னும் அஞ்சு ஹாஸ்டல் எங்க கண்ட்ரோல்ல இருக்கு. எல்லாரையும் ஒரே ரூம்ல வச்சு தான் எல்லா வேலையும் செய்வோம். ஏதோ எனக்கு உன்னை பிடிச்சத்துக்காக உனக்கு மட்டும் தான் இந்த ஸ்பெஷல்.. என்ன எல்லோருக்கும் மயக்க மருந்து கொடுத்துருவோம். உனக்கு மட்டும் இல்ல. என்னை வேணாம்னு சொன்னல்ல அதுக்கு தண்டனை தான். நீ அணு அணுவா துடிக்கிறதை நான் பார்க்கணும். உன் வாழ்க்கைல இந்த நாளையும் என்னையும் மறக்கவே கூடாது. வாய மூடிட்டு படுடி. இல்ல  இப்போவே என் ஆசையை தீர்த்துகிட்டு வாடகை தாயா மாத்திருவேன். எப்படி வசதி?" என்றான் அதட்டலாக.

"டாக்டர் எனக்கு நேரமாகுது. சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணுங்க." என்று கைகடிகாரத்தை பார்த்தான்.

கைகள் இரண்டும் கட்டிலின் இருபக்கமும் கட்டப்பட்டிருக்க, தப்பிப்பதற்கு வழியே இல்லை என்று முடிவு செய்தவள் விழிகளை அழுந்த மூடி திறந்து, "சரி நான் இதுக்கு சம்மதிக்கிறேன். ப்ளீஸ் நீ வெளிய போ." என்றாள்.

"நான் போய்ட்டா என்ன கிக் இருக்கு? நான் இங்கே இருக்கிறது தான் உனக்கு தண்டனையே. இங்க நடக்குறதை பார்க்க தானே ஆவலா காத்திட்டு இருக்கேன்." என்று கூறவும் அதிர்ச்சியில் உறைந்தன அவள் விழிகள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro