கனவே - 5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"டேய் ஏங்க டா இப்படி பண்ணனும் நினைச்சீங்க....மறுபடியும் ஒரு உயிர் போகணுமா ?" என்று வெறி கொண்ட வேங்கையைப் போல் கத்திக் கொண்டிருந்தவன் மனமோ ரனகலமாய் கொதித்துக் கொண்டிருக்க அவன் கைகளோ எதிரில் இருந்தவர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தது.

அவனிடம் அடிவாங்கி கிழிந்த நாராய் தொங்கிக் கொண்டிருந்தவர்களிடம்  "அவ உங்களுக்கு என்ன டா பண்ணா...அவளுக்கு ஏன் இப்படி பண்ண நினைச்சீங்க சொல்லுங்க ?" என்றவனிடம் அடுத்த அடி வாங்க கூட திராணி இல்லாமல் விழுந்தவர்களை அவன் விட்டுவிடும் நிலையில் இல்லை...

" டேய் வருண்...ஏன் டா அடிக்கிற அவங்களை " எனக் கத்திக் கொண்டு வந்த விஷ்வாவை அணைத்துக் கொண்டவன் " இவங்க இவங்க...என்னால சொல்ல கூட முடியல டா...இதே இவங்க வீட்டு பொண்ணுக்கு இப்படி ஒரு காரியம் பண்ணுவாங்களா? இல்லை யாராவது பண்ணா தான் சும்மா இருப்பாங்களா? உங்க வீட்டு பெண்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா..." என்று வெறிப் பிடித்துக் கத்திக் கொண்டிருந்தவனை விட்டால் கண்டிப்பாக அந்த மூவரையும் கொலை செய்துவிடுவான் என நினைத்த விஷ்வா அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்க அவனோ அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்து கொண்டிருந்தான்..

" விடு டா அவங்களை கொல்லணும் " என்று கத்தியவனின் கன்னத்தில் அறைந்த விஷ்வா " அமைதியா இரு டா...ஏன் இப்படி நடந்துக்கிற இப்போ என்னாச்சு அதை சொல்லு முதலில் " என்று கேட்டவனிடம் அந்த மூவரையும் முறைத்துக் கொண்டே கூற ஆரம்பித்தான்...

ரவியிடம் சனாவை அழைத்து வருவதாக கூறிய வருண் அவள் வகுப்பை நோக்கி நடந்துகொண்டிருக்க
" டேய் அதோ அங்கே நிக்கிறா பாரு அந்த வெள்ளை சுடி பொண்ணு தான் " என்றவன் குரலில் திரும்பிக் பார்க்க சனா தான் அங்கு அமர்ந்திருந்தாள்..

அங்கேயே நின்று அவர்கள் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தவனுக்கு  கோபம் தலைக்கேற பற்களை கடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

" டேய் அவ வெள்ளை நிற சுடிதார் தான் போட்டுருக்கா இந்த கலர் தண்ணீர் ஊத்துனா கண்டிப்பா அவ மானம் போகும்...இப்போ எல்லாரும் யுனிவர்சிட்டிக்கு வர நேரம்..
கண்டிப்பா இந்த நிகழ்வுக்கு பிறகு அவ யுனிவர்சிட்டிக்கே வரவே மாட்டா " என்றவர்கள் அந்த கலர் நீரை எடுத்துக் கொண்டு நெருங்க அதற்கு முன்னே அந்த நீரை வைத்திருந்தவன் பின்னாலிலிருந்து வருண் எட்டி உதைக்க அவன் பல்டி அடித்து முன்னால் விழுந்தான்...

விழுந்ததில் மூக்கிலிருந்து இரத்தம் வர இவனோ ருத்ர மூர்த்தியாய் மாறி அவர்களை வெளுத்துக் கொண்டிருக்கும் சமயம் தான் விஷ்வா வந்தது.

" உனக்கே தெரியும்ல ஏற்கனவே இந்த மாதிரி நடந்ததுல ஒரு உயிர் போனதைப் பற்றி...மறுபடியும் ஒரு உயிர் போகணுமா?" என்று வெறி பிடித்தவன் போல கத்தியவன் விஷ்வாவின் சட்டையைப் பிடித்து உலுக்க

"டேய் வருண் அமைதியாகு ஒன்னுல்ல...அதான் எதுவும் நடக்கலையே...நீ இப்படி கத்தாதே டா " என்று அமைதிபடுத்தியவனைக் கண்டு கொள்ளாது  மறுபடியும் அவர்களை அடிக்கப் போக வலி தாங்காதவர்கள் "எங்களை ஏன் அடிக்கிற ...எங்களுக்கு அவளை எப்படித் தெரியும்னு யோசிச்சியா? நாங்க ஏன் டா அவளைப் பழி வாங்கணும்? எல்லாம் உன் பக்கத்துல இருக்கானே அவன் தான்...அவன் தான் எங்ககிட்ட சொன்னான் அவளைப் பழி வாங்கணும்னு...அவனை அடி டா " என்றவன் கூறுவதை நம்பாமல்

மறுபடியும் அடித்தவன் " ஏன் விஷ்வா அப்படிலாம் நினைக்க கூட மாட்டான் டா...அவன் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டான்" என்றவனை இடைமறித்தவர்கள்

" நினைக்க மாட்டான் தான்...ஆனால் உன்னை அடிச்சவங்களை சும்மா விடமாட்டானே" என்று கூற

அவர்களை விடுவித்தவன் விஷ்வாவைக் காண அவன் கண்களே காட்டிக் கொடுத்தது அவன்தான் கூறியிருக்கிறான் என்று...

"ஏன் டா இப்படி பண்ண " என்றவனின் விரக்தி குரலில் " வருண் " என்று அருகில் வந்தவனை நிறுத்தியவன்

" ஏன் இப்படி பண்ண? ...அவ என்னை அடிச்சா அதுனாலனு மட்டும் சொல்லாத...அவ அடிச்சதை நானே பெரிசா எடுத்துக்கல...நம்ம ரவி மாதிரி டா அவ...அவளை எப்படி டா உனக்கு பழி வாங்கணும் தோணுச்சு...அதுவும் இந்த மாதிரி கீழ்த்தனமா " என்றவன் தன் தோளை தொட வந்தவனை தள்ளி விட்டு செல்ல
அவன் தள்ளி விட்ட வேகத்தில் கீழே விழ இருந்தவனைத் தாங்கிய அஞ்சு அவனைப் பிடித்து நிறுத்த

" பாத்து பத்திரம் அண்ணா " என்றவளின் அண்ணா என்ற வார்த்தையிலேயே அவனின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட்டது.

ஒரு நொடி அஞ்சு ரவியாக தெரிய அவளை விட்டு விலகியவன் அப்படியே நிலத்தில் சரிந்து கதறி அழுதான்.

வருண் ஒரு ஓரத்தில் நின்று கோபம் விலகாமல் பார்த்துக் கொண்டிருக்க அவனை முறைத்த அஞ்சுவோ விஷ்வாவை சமாதானம் செய்ய சென்றாள்...

" அண்ணா என்னாச்சு..அழாதீங்க ப்ளீஸ் " என்றவளின் கைகளைப் பிடித்தவன் மாறி மாறி தன் கன்னத்தில் அடித்துக் கொள்ள பதறியவள் " வேணாம் அண்ணா " என்று கூற அவனோ அதைக் கேட்ட பாடு இல்லை...

ரவியின் நிலை இன்றும் தன் கண் முன் வந்து போக அவன் உடல் நடுங்க ஆரம்பித்தது...
வருணும் அதைதான் நினைத்துக் கொண்டிருந்தான் போல அவனுக்கும் அதே நிலை தான்....

அஞ்சு தான் இவர்களின் நிலை புரியாமல் குழம்பிக் கொண்டிருக்க நொண்டி நொண்டி வருணிடம் சென்றவள் " வரு" என அழைத்து முடிப்பதற்குள் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன் "ரவி என் ரவியோட நிலைமை தான் உனக்கும் இன்றைக்கு ஆயிருக்கும் டி...உனக்கு எதுவும் ஆகல தானே...அய்யோ உனக்கு ஏதாவது ஆயிருந்தா...நான் செத்தே போயிருப்பேன் டி " என்றவனின் அணைப்பிலே அவன் உடல் நடுங்குவதை உணர்ந்தவள் முதுகை தடவி விட அவளைப் பிரித்தவனின் கண்களில் இருந்த வலியைக் கண்டு அவளுக்கும் மனம் பாரமானது...

அவனின் அணைப்பில் அதிர்ந்தவள் அவன் கூறியதை கேட்க மறந்திருக்க அவன் வார்த்தைகள் யாவும் மாயமாய் மறைந்து தான் போயிருந்தது அந்த காற்றில்.....

அங்கு மரமாக நின்றிருந்த ரவியோ அந்த நாளை நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க சரியாக அந்த நேரம் ரவியை கடந்து சென்றான் விக்ரம்....

"விஷ்வா அண்ணா பாவம்..அவங்களை அழவேணாம் சொல்லுங்க " என்றவளிடம் எதுவும் கூறாமல் விஷ்வாவைப் பார்த்தவனின் பார்வையிலேயே "இவளையா பழிவாங்க நினைச்ச" என்ற குற்றச்சாட்டு இருக்க தலையைக் கவிழ்ந்தவன்

" டேய் வருண்...நான் அவளை பழிவாங்கணும் நினைச்சேன் தான்...ஆனால் இந்த மாதிரி பண்ணனும் நினைக்கவே இல்லை..என்னை நம்பு டா " என்றவனைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டவன் முகத்தை தன்னே நோக்கி திருப்பியவன் " என்னை நம்பு டா வருண்..." என்று கூறியவனின் கையைத் தட்டி விட்டவன்

" என்கிட்ட பேசாத...போ உன்னை ரவியே மன்னிக்க மாட்டா...அவ மன்னிச்சா நான் மன்னிக்கிறேன்" என்றவனை அணைத்துக் கொண்டான் விஷ்வா.

"ரவி யாரு " என்றவளைக் கண்டுக் கொள்ளாமல் இவர்கள் அணைத்துக் கொண்டிருக்க வருணின் ஒரு கையோ அஞ்சுவை விடாமல் பிடித்திருந்தது.

"மச்சான் நான் ரவியை போய் பார்க்கிறேன் டா " என்றவன் செல்ல
"சரி டா " என்ற வருணோ தங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்த விக்ரமைக் கண்டவுடன் அஞ்சுவை தன்னருகில் நிற்க வைத்துக் கொள்ள

" அஞ்சு என்னாச்சு " என்று வந்த விக்ரம் அவள் வருணின் அருகில் இருப்பதைக் கண்டு வேகமாக வந்து அவளைப் பிரிக்க  வருணோ அவளை தன்புறம் இழுத்து அணைத்தவாறு நின்றுகொண்டான்..

கண்கள் சிவக்க அவனை முறைத்த விக்ரமோ "அஞ்சு சாராதி சார் உன்னை அழைத்துண்டு வர சொன்னார்..இன்றைக்கு உன் பிறந்தநாளாம் "
என்றவனின் தமிழ் புரியாமல் வருண் முழித்துக் கொண்டிருக்க
அவளோ வருணின் கைப்பிடியில் இருந்து விடுபட  போராடிக் கொண்டிருந்தாள்.

வருணின் கைப்பிடி இறுகியதே தவிர அவன் அவளை விடுவதாய் இல்லை.
அவன் பிடித்திருந்த இடம் அவளுக்கு வலிக்க ஆரம்பிக்க அதில் முகம் சுருங்கியவளைக் கண்டு விடுவித்தவன் அவள் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

விக்ரமின் விழிகள் அவர்கள் கைகளையேப் வெறித்துக் கொண்டிருக்க அவன் கைகளில் இருந்து தன் கைகளைப் பிரித்தெடுக்கப் போராடியவளைக் கண்டவனோ கோபம் கொண்டு அவளை உதறி விட்டு செல்ல விழப்போனவளையும் அவனே தாங்கி " நான் சொன்னது தான் சனா...நீ எப்பவும் எனக்கு மட்டும் தான் சரியா.." என்று கூறி செல்ல அவன் அவளை எப்படி தாங்கியிருந்தானோ அதே நிலையில் நின்றிருந்தாள் அவனின் சனா.

"ஓய் சில்லி பவுடர்...ஹேப்பி பர்த் டே...30 நாளில் தமிழ் கற்பது எப்படி படிச்சுட்டு இருக்கேன் "  என்று கூறி செல்ல அதில் சுயநினைவுக்கு வந்தவள் அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருக்க அவள் கைகளைப் பிடித்து இழுத்து சென்றான் அனிருத்.

"ஏன் டி நீ அடங்கவே மாட்டியா? ஏன் வருண் கூட பேசிட்டு இருக்க " என்று முறைத்தவனை இவளும் முறைக்க அவள் மண்டையில் அடித்தவனோ

"சொல்லு அஞ்சு" என்று அதட்டிக் கேட்க அவர்கள் அருகில் விக்ரம் அவளை முறைத்தவாறு கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

அனிருத் அருகே சென்றவள் "ஓஓ உன் நண்பனுக்கு சப்போர்ட்டா" என்று கேட்க அவள் கூறுவது புரியாமல் ங்கே என்று விழித்துக் கொண்டிருந்தவன் தலையில் அடித்தவள் " அவன் என்னை சைட் அடிக்கிறான்....அவனுக்கு வருண் பிடிக்காது அதுனால நான் வருண் கூட இருக்கிறது பிடிக்காது...உன் நண்பனுக்காக உனக்கும் அது பிடிக்காது சரியா " என்று உலறிக் கொண்டிருந்தவளைக் கண்டுக்கொள்ளாமல் " நான் உன்னை அடிச்சேனு நீ என்னை அடிச்சுட்டல" என்று முறைக்க

"ஈஈ என்று பல்லைக் காட்டியவள் "

" ஏய் ருத்து எதுனால இவங்களுக்கு சண்டைனு கேட்டியா? " என்று கேட்க

"ம்ம் " என்றவன் "விக்ரம் மேல எந்த தப்பும் இல்லை அஞ்சு...ரவினு ஒரு பொண்ணு இவனை காதலிச்சா அது விக்ரமுக்கு பிடிக்கல...அவ தற்கொலை பண்ணிக்கிட்டா " என்று சாதாரணமாக கூறியவனை முறைத்தவள்
"ஒரு உயிர் போயிடுச்சு ருத்து...நீ சாதாரணமா சொல்லுற "

" அவ நானா சாக சொன்னேன்...அவ செத்துட்டா நான் என்ன பண்ணுறது " என்று தோளைக் குலுக்கியவன் மிருகத்தினும் கொடியவனாக தெரிய அருவருப்பு பார்வை ஒன்றைப் பார்த்தவள் வருணைத் தேடிச் சென்றாள்.

"ரவிமா...இவன் அவளை பழிவாங்க நினைச்சானாம்...சனாக்காக மட்டும் தான் நான் இவனை மன்னிக்கிற மாதிரி நடிச்சேன்...இவனை என்னால மன்னிக்கவே முடியாது இனிமேல் இவனே என்கிட்ட பேசவேணாம் சொல்லிடு" என்றவன் விஷ்வாவை ஓரக் கண்ணால பார்த்துக் கொண்டே கூற அவன் தலையில் ஒரு குச்சியைப் போட்ட ரவியோ தன் கிளைகளை அசைத்து சிரித்தது...

அந்த மரத்தை அணைத்துக் கொண்ட விஷ்வாவோ "எனக்கு இன்னும் அந்த பயம் போகல ரவிமா...உனக்கு ஏற்பட்ட அந்த நிலைமை அவளுக்கும் ஆயிருந்தா அய்யோ...என்னை நானே மன்னிச்சிருக்க மாட்டேன்" என்றவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் அளிக்க அவளால் முடியவில்லை..

இங்கு அவர்கள் மரத்திடம் பேசிக் கொண்டிருப்பதை கண்ட அஞ்சுவோ அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro