33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதித்தன் சரணின் சட்டையை பிடித்து கத்திக்கொண்டிருக்க சரணோ அந்த சொரனையும் அன்றி icu வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆதித்தன் அருகில் வந்த வித்யுத் அவன் கையை சரணின் சட்டையிலிருந்து விளக்கியவன் "ஆதி என்ன பண்ற இது ஹாஸ்பிடல் கன்ட்ரோல் yourself "என்றவன் சரணின் புறம் திரும்பி "ஸ்வஸ்திகாக்கு இப்போ ஒன்னும் இல்ல பட் ஷி ஐஸ் suffering from போஸ்ட் traumatic stress disorder .அவ கண்ணை தொறந்தா அவளுக்கு பிடிக்காத ஏதோ ஒன்னு நடந்துருமோனு ஆழ்மனசுல பதிஞ்சுருச்சு அதுனால அவள் கண்ணை தொறக்காமயே இருக்கா .இப்டியே continue ஆனா கோமாகும் போக chances இருக்கு ."என்க

தலையில் கை வைத்த சரண் அப்படியே அமர்ந்துவிட்டான்.அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.அவனிடம் வித்யுத் செல்ல போக வித்யுத்திடம் வந்த டாக்டர் "டாக்டர் patient சரண் சரண்னு முணுமுணுக்குறாங்க யார் இங்க சரண் ?"என்க

வேகவேகமாய் எழுந்த சரண் அந்த டாக்டரிடம் வந்து "நா..... நா........ தான் சரண் மே ஐ கோ இன் ?"என்று கேட்டவாறே வித்யுத்தை நோக்க அவன் செல் என்று கூறிய அடுத்த நொடி உள்ளே சென்றிருந்தான் சரண் .

இங்கே நடக்கும் எதுவும் புரியாத வித்யுத் ஆதியிடம் "ஆதி என்னாச்சு சந்தோஷமா சுத்திட்டு இருந்த பொண்ணு திடீர்னு எப்படி suicide அட்டெம்ப்ட் அண்ட் நீ ஏன் சரண புடுச்சு அடிக்க போற ?"என்க

ஆதியோ அவனது தந்தையையம் சரணின் அன்னையையும் ஒருசேர முறைத்தவன் அவர்களை காட்டி "இந்தா என்ன பெத்தவரு இருக்காருல்ல அவருக்கு லெட்சத்துல சம்பாதிக்கிற மாப்ள கெடச்சா தான் மகள் சந்தோஷமா இருப்பா ,இந்தா இவுங்க இருக்காங்கள்ல சரண பெத்தவுங்க இவுங்களுக்கு இவுங்க அண்ணன் சொன்னது தான் இப்போ வேத வாக்கு அந்தா அந்த வீனா போனவனுக்கு அவுங்க அம்மா சொல்றது தான் வேத வாக்கு இவுங்க பண்ண தப்புக்கு இப்போ என் தங்கச்சி பலி ஆடாகி உயிர்க்கு போராடிட்டு இருக்கா "என்க

வித்யுத்தோ"புரியல "என்க

ஆதி கூறத்துவங்கினான் .

ஒரு வாரத்திற்கு முன் சரணையும் ஸ்வஸ்திகாவையும் இணைத்து பார்த்த ஸ்வஸ்திகாவின் தந்தை அவர்கள் பழகுவது வித்தியாசமாய் தெரிய அன்று இரவு ஸ்வஸ்திகாவின் அறையை கடந்தவர் அவள் சரணிடம் பேசுகையில் "ஐ லவ் யு சரண்" என்று கூறியதை கேட்டு விட்டார் .

என்ன தான் தங்கையின் மகனாக இருந்தாலும் அவருக்கு அவனின் மாத சம்பளமே முதன்மையாய் தெரிந்தது .ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்பவனிற்கு அதுவும் லோனில் இருப்பவனிற்கு தன் மகளை கட்டி கொடுக்க அவருக்கு துளியும் விருப்பம் இல்லை .எனில் ஸ்வஸ்திகா ஒரு முறை ஒன்றை முடிவெடுத்து விட்டால் அதில் இருந்து மாறவும் மாட்டாள் செய்யாதே என்று கூறினால் அதையே வீம்பு பிடித்து சாதிப்பாள் .

இந்த குணத்தை அறிந்திருந்ததாள் இவளிடம் பேச முடியாது என்று நினைத்தவர் சரணின் பலவீனமான அவனின் அம்மாவை வைத்து காய் நகர்த்தினார் .சரணின் அம்மாவை ஒருமுறை வீட்டிற்கு அழைத்திருந்தார்.

சரண் அம்மா "என்ன அண்ணா திடீர்னு பேசணும்னு கூப்டீங்க ?"என்க

அவரோ "பரவா இல்லையேம்மா உன் பையன உன்ன மாறியே வளர்த்து வச்சுருக்க .என்ன பொண்ணு இருக்கா கவுத்தீட்டா சொத்துல பாதி வந்துரும்னு பிளான் பண்றியா?உன்ன மறுபடி ஏதோ தங்கச்சியாச்சேன்னு சேத்துக்கிட்டதுக்கு நீ குடுக்குற பரிசு இது தானா"என்று சரியாய் இதில் அடித்தால் அவர் சரணை ஸ்வஸ்திகாவிடம் இருந்து பிரிப்பாரோ அதை வைத்தே அவரை பலவீனமாக்கினார் .

தன் அண்ணனின் உண்மையான நோக்கம் புரியாத சரணின் அம்மா "ஐயோ அண்ணா சரணும் ஸ்வஸ்திகாவும் லவ் பண்றங்கண்ணே நீங்க சொல்லி தான் எனக்கு தெரியும் இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லண்ணா "என்க

அவரோ "இப்டி சொன்ன நா நம்பிருவேனா ?ஏற்கனவே என் நம்பிக்கையை எல்லாம் கொன்னுட்டு ஓடி போய் கல்யாணம் பண்ணவ தானா நீ "என்க

சரணின் அம்மா "அண்ணா தயவு செஞ்சு நம்புங்க அண்ணா சரி இப்போ நா என்ன பண்ண என்ன நம்புவீங்க ?"என்க

தான் நினைத்த காரியம் நிறைவேறியதை உணர்ந்த ஸ்வஸ்திகாவின் அப்பா "உன் பையன்ட என்ன சொல்லுவியோ ஏது சொல்லுவியோ எனக்கு தெரியாது என் பொண்ணு பக்கமே அவன் வர கூடாது .எனக்கு தெரிஞ்ச என் friendoda பொண்ணு ஒன்னு இருக்கு அவனுக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வை உங்க familyku ஏத்த மாதிரி பேமிலி தான் "என்று அவரின் தொலை பேசி எண்ணை கொடுக்க சரணின் அம்மாவிற்கு அந்த சமயம் தனது பிள்ளையின் மனநிலையை விட தன் அண்ணனிற்கு தான் ஏற்படுத்திய அவமானத்தை போக்குவதே பிரதானமாய் பட்டது .

அந்த பெண்ணின் ஜாதகத்தை எடுத்து வந்தவர் தன் கணவனிடம் இவற்றை கூற அவரும் இதற்கு ஒப்புக்கொள்ள சரணிடம் தன் உயிரை பணயமாய் வைத்து மிரட்டி அவனை சம்மதிக்க வைத்திருந்தார்.

அன்னையின் உயிரை காக்க வேண்டுமென்பது சரணிற்கு பிரதானமாய் போக ஸ்வஸ்திகாவின் உணர்வுகளை புரிந்துகொள்ள அங்கே எவரும் தயாராய் இல்லை .

முதலில் அவனது விலகளிற்கு காரணம் புரியாது தவித்தவள் நேற்று காபி ஷாப்பில் அந்த பெண்ணுடன் சரணை பார்த்துவிட்டாள்.தன் கண்ணையே நம்பாது மீண்டும் மீண்டும் கண்ணை கசக்கி பார்த்தவள் சரண் தான் என்பதை உறுதி செய்து கொண்டு எரிமலையாய் உள்ளில் எழுந்த கோபத்துடன் அங்கே விரைந்து சென்றால் .

ஸ்வஸ்திகா "சரண் "என்று கோபாக்குறளில் அழைக்க அதுவரை இறுகிய முகத்தோடு இருந்தவன் கண்களில் மின்னலை போல் ஒரு சந்தோஷம் பரவி மீண்டும் அமைதி ஆனவன் தன் முன்னிருந்த மேஜையை வெறிக்க ஸ்வஸ்திகவோ அந்த பெண்ணை சுட்டிக்காட்டியவள் "இது தான் நீ என்ன விளக்க காரணமா சரண் ?"என்க

அவன் அப்பொழுதும் அமைதியாய் இருக்க அவளிற்கு பொறுமை காற்றில் பறக்க அவன் சட்டை காலரை பிடித்து தன் அருகில் இழுத்தவள் "என்னடா அமைகியா இருக்க என்ன ஏமாத்தப்பாக்குறியா ?எதுக்கு இவளோட இங்க இருக்க சொல்லி தொலை"என்க

சுற்றி முற்றி பார்த்த சரண் வேலை பார்ப்பவர்களை தவிர்த்து யாரும் இல்லை என்பதை அறிந்து கொண்டவன் ஸ்வஸ்திகாவின் கண்ணை பார்க்காது "கைய எடுடி "என்க

அவளோ தன் பிடியை மேலும் இறுக்கியவள் "எனக்கு பதில் வேணும் சரண் "என்றாள்.

இங்கே நடக்கும் சம்பாஷணைகள் ஏதும் புரியாமல் தன் அன்னை கூறிய ஒரே காரணத்திற்காக சரணை சந்திக்க வந்திருந்தால் அந்த பெண்.இங்கே வந்தால் ஸ்வஸ்திகா அவன் சட்டையை பிடித்து கத்திக்கொண்டிருக்க அந்த பெண்ணோ குழம்பியவள் "யார் நீங்க ?"என்க

ஸ்வஸ்திகாவோ அனல் கக்கும் பார்வையோடு அவளை பார்த்தவள் "அவன் பொண்டாட்டி ."என்க அந்த பெண்ணோ திகைத்து விழித்தாள் .

அவள் விழிப்பதை பொருட்படுத்தாத ஸ்வஸ்திகா" answer கெடச்சுருச்சுல்ல கெளம்பு"என்க அந்த பெண்ணோ விறுவிறுவென அவள் கைப்பையை எடுத்தவள் சரணிடம் சொல்லிக்க கூட தோன்றாமல் கிளம்பினாள் .

அவள் தன் சட்டையை பிடித்திருந்த பிடியை உதறிய சரண் சுற்றி முற்றி பார்த்து விட்டு "பப்ளிக் placela இப்டி தான் பண்ணுவியாடி ?"என்க

அவளோ அவனை தீப்பார்வை பார்த்தவள் "நீ இப்டி பண்ணேல நா இப்பிடி பண்றதுல தப்பே இல்ல "என்க அவனோ ஏதோ கூற வந்தவன் சுற்றுப்புறம் உணர்ந்து அவள் கையை பற்றியவன் தன் வீட்டில் இப்பொழுது யாருமிருக்கமாட்டார்கள் என்பதால் அங்கே அழைத்து சென்று தன் அறைக்கு வந்ததும் கதவை தாழிட்டான் .

தாழிட்டவன் அவளை திரும்பி பார்க்க அவளோ அவனை குற்றம் சாடும் பார்வையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.அவள் பார்வையை எதிர்கொள்ள தயங்கியவன் பின் தைரியத்தை திரட்டி "எதுக்கு இப்போ அவ கிட்ட என் பொண்டாட்டின்னு சொல்லி அவளை தொரத்தி விட்ட ?"என்க

அவளோ அவனை கூர்மையாய் பார்த்தவள் "எப்போ உன்ன மனசுல நெனைச்சேனோ அப்போல இருந்தே உன்ன தான் என் புருஷனா பாக்குறேன் நா சொன்னது எனக்கு தப்பா தெரில"என்க

அவனோ முதலிலேயே எப்படி அவளை எதிர் கொள்வது என்று தெரியாமல் இருந்தவன் அவள் அடுத்தடுத்து கூறிய வார்த்தைகளில் உருகத்துவங்கிய மனதை கஷ்டப்பட்டு பிடித்து வைத்தவன் "இல்ல ஸ்வஸ்திகா எனக்கும் உனக்கும் செட் ஆகாது .வேண்டாம் இதோட பிரி...."என்று அவன் கூறி முடிப்பதற்குள் கன்னத்தில் கையை வைத்திருந்தான் .

அவனை ஓங்கி அறைந்திருந்தால் ஸ்வஸ்திகா அவனை அறைந்தவள் அவன் சட்டையை பிடித்து அருகிழுதவள் "என்ன பார்த்தா என்ன பொம்மை மாறி தெரியுதாடா உனக்கு .ஏன்டா இப்டி என் பீலிங்சோட வெளயாடுற .அப்போவே loveah சொன்னப்போ யோசிச்சு சொல்லுன்னு சொன்னேன்ல ஏன்டா இப்டி என் மனசுல ஆசையா வளத்துட்டு இப்டி பிரிஞ்சு போலாம்னு சொல்ற ஏன் ?ஏன்?நா ஏதாச்சும் தப்பு பண்ணிட்டேனா அப்டி பண்ணிருந்தா சொல்லுடா மாத்திக்கிறேன் ப்ளீஸ் இப்டி விட்டுட்டு போனு சொல்லாதடா செத்து போனு சொல்றத விட கொடுமையை இருக்கு "என்றவள் கோபத்தில் துவங்கி அழுகையில் முடித்து அவன் மார்பிலே தலை வைத்து அழைத்துவங்கினாள்.

அவள் நிலை எதுவென்றால் சரணின் நிலைமையோ படுமோசம் காதலித்த பெண்ணை கைவிடவும் முடியாமல் தன் அன்னையையும் பணியவைக்க முடியாமல் தன் மாமனின் மனதையும் மாற்ற முடியாமல் அவனிற்கு இந்த நிலையை விட மரணமே பெரும் விடுதலையை இருக்குமோ என்று கூட தோன்றியது.எனில் ஒரு மருத்துவனாய் கடவுள் கொடுத்த உயிரை மாய்த்துக்கொள்ளவும் மனம் வரவில்லை .உயிரற்ற ஜடமாகவே அவன் உலா வர அவள் அவன் மார்பில் தலை வைத்து அவனை அணைத்ததும் பிரிந்த உயிர் ஏதோ உடலில் ஊடுருவியதை போல் உணர்ந்தவன் அந்த நிமிடம் அனைத்தையும் மறந்து அவளை இறுக்கி அணைத்தவன் அவள் கழுதுவளைவைல் முகம் புதைத்துக்கொண்டான்.

இதுவரை அவன் அணைத்ததிலிருந்து இந்த அணைப்பு வித்தியாசமாய் தெரிய முதலில் திகைத்தவள் பின் தானும் அவனை இறுக்கிக்கொள்ள சரணின் கரங்கள் அவள் முதுகிலிருந்து அவள் இடைக்கு இறங்க அவளின் உதடுகளோ "ஐ லவ் யூடா"என்று முணுமுணுக்க அப்பொழுதே அவன் அன்னைக்கு செய்த சத்தியம் ஞாபகம் வந்தது.

தீயை தொட்டவனாய் அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் பைத்தியம் பிடித்தவன் போல் "வேணாம் வேணாம் வேணாம் நீ எனக்கு வேணாம். என் வாழ்க்கைல இருந்து போடி .டைம் பாஸ்க்கு தான் உன்ன லவ் பன்றேன்னு சொன்னேன் உன்ன மாறி ஒரு addament charactera எல்லாம் lifelong சகிச்சுட்டு உனக்கு அடிமையா இருப்பேன்னு நெனச்சியா ?கெளம்புடி இங்க இருந்து உன் முகத்தையே பாக்க புடிக்கல"என்று கத்த

அவன் கத்தியதில் திகைத்தவள் மனதில் ஆழமாய் பதிந்ததென்னவோ "என் வாழ்வை விட்டு போ "என்று அவன் கூறியது தான் .அதிலேயே ஆணி அடித்தார் போல் உறைந்தவள் தன் கண்ணை துடைத்து "ஓகே சரண் நா போறேன் இனி உன்ன தொல்லை பண மாட்டேன்"என்றவள் திரும்பி பாராது செல்ல அவள் அறையிலிருந்து வெளியேறியதும் முட்டி இட்டு அமர்ந்தவன் தான் ஒரு ஆண்மகன் என்பதையும் மறந்து அழுதான் .அருகிலிருந்த கண்ணாடி மேஜையை கையால் உடைத்தவனின் கையை கிழித்த கண்ணாடி துண்டுகள் அவன் கரத்தை கிழித்தது .அவன் மனதும் உதடுகளும் sorrydi என்று முணுமுணுத்தது .

இங்கே இவனிடம் அவனது வாழ்வை விட்டு போவதாய் கூறி வந்தவள் பிரம்மை பிடித்தார் போன்றே தன் வீட்டிற்கு வந்து தன் அறைக்குள் சென்று அடைந்துகொண்டாள் .கட்டிலில் அமர்ந்தவள் எதிரே தொங்கிய அவர்கள் இருவரும் இணைந்திருக்கும் படம் கண்ணில் பட்டு வேதனையை அதிகரிக்க அவனை இன்னொருவளின் கணவனாய் பார்ப்பதை விட இறப்பதே மேல் என்று முட்டாள் தனமான முடிவை எடுத்து தன் கை நரம்புகளை அறுத்துக்கொள்ள தன் வேலைக்காக வெளி ஊரிற்கு சென்றிருந்த ஆதித்தன் அவளிற்கு surprise தர நினைத்து balcony வழியாய் நுழைய அங்கே கை அறுத்து ரேத்த வெள்ளத்தில் கிடந்த தன் அன்பு தங்கையை கண்டவன் "அம்லு"என்ற கதறலுடன் அவளை கையில் ஏந்திக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்திருந்தான்.

அவளை உள்ளே அழைத்து செல்கையில் அவள் கையிலிருந்த கடிதத்தை படித்தவனிற்கு நடந்ததெல்லாம் தெரிய அவன் தந்தையின் மீதும் சரணின் மீதும் கொலை வெறியில் இருந்தவன் பாயும் நேரத்திற்காக காத்திருந்தான் .

அனைத்தையும் கூறி முடித்தவன் தன் தந்தையை சுட்டிக்காட்டி "இவருக்கு இவர் கௌரவமும் ஸ்டேட்டஸும் முக்கியம்,சரண் அம்மாவுக்கு அவங்க பண்ண தப்ப சரி செய்றது முக்கியம் ,சரணுக்கு அவன் அம்மா முக்கியம் அப்போ என் தங்கச்சியோட feelings யாருக்குமே முக்கியம் இல்ல அப்டி தானே?என் அம்லு மேல ஒரு கீறல் கூட விழாம அவ்ளோ செல்லமா வச்சிருந்தேன் இப்டி பண்ணிடீங்களே எல்லாரும் சேர்ந்து"என்றவன் கோபத்தில் துவங்கி ஆதங்கத்தில் முடிக்க வித்யுதிற்கு சரணை எங்கேயாவது கூட்டி கொண்டு போய் சாத்து சாத்தென்று சாத்த வேண்டும் போல் இருந்தது

.தன்னை கட்டுப்படுத்தியவன் icuvin உள் செல்ல போக உள்ளிருந்து வந்த மருத்துவர் "டாக்டர் patient முழுச்சுட்டாங்க "என்க அனைவரும் உள்ளே செல்ல அங்கே இருந்த நிலையை கண்டவர்கள் வாயில் ஈ போகும் அளவிற்கு வாயை பிளந்தபடி நின்றிருந்தனர் .அங்கே காற்று கூட புகாத அளவிற்கு சரணும் ஸ்வஸ்திகாவும் அணைத்துக்கொண்டிருக்க தன் தங்கை எழுந்ததும் சரணை வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பாள் என்று நினைத்து வந்த ஆதித்தனோ அவர்கள் நிலையை கண்டு "அட பாவிங்கள "என்று வாயை பிளந்துவிட்டான்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro