34

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவர்கள் இருவரும் இறுக்கி கட்டிக்கொண்டு நிற்பதை பார்த்து அனைவரும் திகைத்து போய் நிற்க ஆதித்தனோ

"அட பாவிங்களா" என்று வாய் விட்டே புலம்ப அப்பொழுதே அவர்கள் அணைத்திருப்பதில் ஏதோ வித்தியாசமாய் பட ஆதித்தன் சற்று நெருங்கி பார்க்க ஸ்வஸ்திகாவோ சரணின் பிடியில் இருந்து விலகப்போராடிக்கொண்டே அவனை கண்ட கண்ட வார்த்தையால் கழுவி ஊற்றிக்கொண்டிருக்க சரனோ துப்புனா தொடச்சுக்குவேன் என்பதை போல் ஈஈஈஈஈ என்று இளித்துக்கொண்டே அவளை அணைத்திருந்தான்.

எப்படியோ அவனது பிடியிலிருந்து போராடி விடுபட்ட ஸ்வஸ்திகா அவனை தள்ளி விட்டு முறைக்க சரணோ ஈஈஈ என்று அதற்கும் இளித்தான் .ஒரு கையில் bandage இருக்க மற்றொரு கையிலிருந்த tripsai அவள் முழித்த பின்பு அப்பொழுதே கழற்றி இருந்தனர் .அவன் இளிப்பதை பார்த்தவள் மேலும் கோபமாகி அருகில் அடிக்க எதையாவது தேட ஆதித்தனோ தன் கையில் கிடைப்பதை எல்லாம் ஸ்வஸ்திகாவின் கையில் கொடுத்துக்கொண்டிருக்க அவளோ சரணை திட்டிக்கொண்டே குறிபார்த்து அடித்துக்கொண்டிருந்தாள்.

ஆதித்தனை பார்த்து அட கொலைகாரா என்று முணுமுணுத்து சரண் அந்த அறை முழுதும் ஸ்வஸ்திகாவின் அடியில் இருந்து தப்ப ஓடிக்கொண்டிருந்தான் .

ஸ்வஸ்திகா "எரும மாடே எரும மாடே அதான் போனு சொல்லிடேல்ல அப்பறோம் என்ன dashuku இப்போ வந்து கட்டிப்பிடிக்குறடா?என்ன பாத்தா என்ன பைத்தியம் மாறி இருக்கா?"என்க

சரணோ ஓடிக்கொண்டே "பாத்தா இல்லடி கத்திரிக்கா ஆனா பேசுனா அப்டி தான் இருக்கு "என்க

அவளோ "அடிங் கொய்யால என்ன இனிமே கத்திருக்கானு கூப்பிட்ட மண்டைய ஒடச்சு மாவிளக்கு வச்சுருவேன்டா. ஒரு வாரமா பேசாம என்ன உயிரோட கொன்னுட்டு இப்போ கத்திருக்கானு சொல்றியா .இந்த ஒரு வாரமா கத்திரிக்கா சமைக்கேல கூட உன் ஞாபகம் தான் வரும் தெரியுமாடா?எல்லோரப் பத்தியும் யோசிச்சியே என்ன பத்தி ஒரு செகண்ட் கூட யோசிக்கலேல நீ ?அப்போ நீ என்ன பத்தி யோசிக்கனும்னா நா அறுத்துக்கிட்டு hospitallaஹ் கிடைக்கணும் அப்டி தான"என்றவள் அழத்துவங்கினாள்.

அவள் அருகில் வந்த சரண் அவள் திமிர திமிர தன் கை அணைப்பிற்குள் அவளை கொண்டு வந்தவன் "sorrydi sorrydi எனக்கு என்ன பண்றதுனே தெரில .அங்குட்டு என் அம்மா நா அவுங்க பாக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கலேனா செத்துருவேங்குறாங்க இங்குட்டு உங்க அப்பாட்ட பேசலாம்னு போனா அவருஹ் அப்டி ஒருத்தன் நிக்குறேன்றத கூட கண்டுக்காம போறாரு .பைத்தியம் புடிக்குற மாறி இருந்துச்சுடி "என்க

ஸ்வஸ்திகாவோ "இதை என்ட சொல்லிருந்தா எனக்கு சொத்தும் வேணாம் ஒன்னும் வேணாம்னு அப்போவே உன்கிட்ட வந்துருப்பேன்ல ஏன்டா இப்டி பண்ண ?"என்க

அவனோ சிரித்தவன் "எப்படி அப்பா அம்மா இருந்தும் ரெண்டு பெரும் அனாதையா நிக்கலாமா ?இதை பாரு உறவுகள் இல்லாதவுங்களுக்கு தான் அதோட அருமை புரியும் இன்னிக்கு காதல் வேகத்துல எனக்கு அப்பா அம்மா வேணாம் யாரும் வேணாம் நீ போதும்னு சொல்ல நல்லா தான் இருக்கும் போக போக ஏதோ ஒரு சூழ்நிலைல உன்னால தான் நா எல்லாரையும் இழந்தேன்னு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு கசப்பு உருவாச்சுனு வையேன் அங்க காதல் காணாம போயிரும் .இவ்ளோ நாள் பெத்து வளர்த்த அம்மா அப்பாவை அவமானப்படுத்திட்டு ஒரு வாழ்க்கை அமைச்சுக்குறது நல்லாவா இருக்கும் ?"என்க

அவளோ விசும்பிக்கொண்டே அவன் மார்பில் சாய்ந்தவள் "அப்போ நீ இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்குவ நா பாத்துட்டு சும்மா இருக்கணுமா ?"என்க

அவனோ "இன்னொருத்திக்கு புருஷனாகுறதுக்கு நா செத்துருவேண்டி .மத்தவங்க எப்டியோ மனசுல ஒருத்திய நெனச்சுட்டு உடம்பால் ஒருத்தியோட வாழ என்னால முடியாது .உன் கிட்ட லவ் சொன்னப்பயே financially இன்னும் நல்ல நிலைமைக்கு வரணும்னு அப்ரோட்ல jobku frienduta சொல்லி என் resume அனுப்பிச்சுருந்தேன் .

பத்து நாள் முன்னாடி தான் அப்பொய்ன்ட்மென்ட் lettereh வந்துச்சு .இன்னும் 3 நாளுல abroad போய் உங்க அப்பா நெனச்ச மாறி சம்பாதிச்சுட்டு வந்து கெத்தா மாமா உன் பொண்ண குடுன்னு கேட்கலாம்னு நெனச்சேன். அதுக்குள்ள என்னன்னவோ நடந்துருச்சு என் அம்மா பண்ண கலவரத்துல இதை நா மறந்தே போய்ட்டேன் ."என்க

அவன் சட்டை காலரை பிடித்து அருகிழுத்தவள் "நீ தனியா போய் ஒரு ஆணியும் புடுங்க வேணாம் ஒழுங்கு மரியாதையா என்ன கல்யாணம் பண்ணிட்டு என்னையும் கூட்டிட்டு போ abroadku "என்க

அவன் ஏதோ கூற வர அவன் வாயை தன் கையால் பொத்தியவள் "ஷ்ஷ்ஷ் என் அப்பா அம்மா சொன்னதை கூட கேட்காம இருந்துருக்கேன் ஆனா இது வர நீ சொன்ன எதையும் நா கேக்காம இருந்ததில்லை இந்த ஒரு தடவ நா சொல்றத நீ கேளு.உன்ன பிரிஞ்சுருவேனோனு நெனச்சதுக்கே நா இந்த நெலமைக்கு வந்துட்டேன் இன்னொரு தடவை என்னால உன்ன பிரிய முடியாது .கஷ்டமோ நஷ்டமோ சேர்ந்தே face பண்ணலாம் ப்ளீஸ் marry மீ "என்க

அவன் "அப்போ என் மேல நம்பிக்கை இல்லையா ?"என்க

ஸ்வஸ்திகாவோ யோசிக்கவே இல்லை "சத்தியமா இல்ல .நீ எதை நெனச்சு எதை எதையோ கொழப்பிட்டு எப்போ என்ன லூசுத்தனம் பண்ணுவன்னு பயந்துட்டே என்னால இருக்க முடியாது .foreign போ ஆனா ரெண்டு பெரும் சேர்ந்து போலாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு போலாம் .நானும் டாக்டர் தான் சரண் எனக்கும் வேல கிடைக்கும் pgலாம் அங்க கூட continue  பண்ணிக்குறேன் இனிமே என்னால வெயிட் பண்ண முடியாதுடா "என்று கூற

அவள் தலையில் லேசாய் கொட்டியவன் "சரிடி"என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டி அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை மேலும் நன்றாய் அவனோடு அணைத்துக்கொள்ள அங்கே பெரியவர்கள் இருப்பது இருவருக்கும் சுத்தமாய் நினைவில்லை .

ஸ்வஸ்திகாவின் தந்தைக்கு ஸ்வஸ்திகா பேச பேச தான் தான் செய்ய இருந்த தவறின் வீரியமும் சரணின் பேச்சை கேட்ட பின்பே தான் எத்தகைய மருமகனை பணத்தை முதன்மையாய் கருதி இழக்க இருந்தோம் என்று புரிய இருவருக்கும் தனிமை அளிக்க எண்ணியவர் அனைவரையும் அழைத்து கொண்டு சத்தமின்றி வெளியே வந்து icuvin சுவற்றில் சாய்ந்தவாறு நின்றுகொண்டார்.

அவர் தோளின் மேல் யாரோ கை வைக்க அங்கே சரணின் அம்மா பதற்றமாய் தன்னை நோக்குவதை கண்டவர் சிறு வருத்தத்துடன் தலை குனிந்து"என்ன மன்னிச்சுரும்மா .என் பொண்ணோட சுகமான வாழ்க்கையை நெனைச்சேனே ஒழிய அவளோட சந்தோஷத்தை நெனைக்க மறந்துட்டேன்.இவ்ளோ நல்ல பையன இழக்க பார்த்துட்டேன் "என்றவர் அவர் குழப்பமாய் நோக்குவதை கண்டு முரவளித்துவிட்டு"கல்யாண தேதியை சீக்கரம் குறி மா என் பொண்ணு இல்ல இல்ல உன் மருமக அப்பறோம் hospitalaye கல்யாண மண்டபமா மாத்துனாலும் மாத்திருவா"என்றுவிட்டு சிரிக்க அப்பொழுதே அனைவர் முகத்திலும் சிரிப்பு வந்தது .

அங்கே அனைத்தும் நல்லதொரு முடிவிற்கு வர அங்கோ வித்யுதிற்கு கால் அடித்து அடித்து ஓய்ந்த சைந்தவி

வெளியே வர அவள் அம்மா ராஜியோ "என்ன சையு இன்னும் மாப்பிளையை காணோம் ?விக்ரம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாருள்ள"என்க

சைந்தவியோ "அம்மா முக்கியமான கேஸ்ன்னு சொல்லிட்டு தான்மா போனாரு (அம்மா முன்னாடி மட்டும் மரியாதை இல்லேன்னா யாரு திட்டு வாங்குறது )என்ன ஆச்சுன்னு தெரில எடுக்கவே மாட்டேங்குறாரு .அவர் வர லேட்டா ஆனா உங்கள வச்சு தட்டு மாத்திக்க சொன்னாரு சோ அதையே பண்ணிரலாம் "என்க

ராஜிமா"ஓஹ் அப்டியா சரிடா பட் எதுக்கும் ஒரு தடவ கால் பண்ணி பாரு "என்க தலை அசைத்த சைந்தவி மீண்டும் ஒரு முறை முயற்சிக்க அப்பொழுதும் போன் எடுக்கப்படவில்லை .முக்கியமான வேலையில் இருக்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டவள்

பின் தன் அன்னை தந்தையரை வைத்தே தட்டு மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து விக்ரம் வந்துவிட்டானா என்று நோக்க வாசலிற்கு சென்றாள். .

அப்பொழுதே அவனது கார் அவர்களின் காம்பௌண்டிற்குள் நுழைந்தது .காரிலிருந்து விக்ரம் இறங்க அவன் பின் அவன் அன்னையோ தந்தை யாரேனும் இறங்குகிறார்களா என்று பார்த்தவளிற்கு ஏமாற்றமே அவன் மட்டுமே வந்திருந்தான்.வாசலில் இருந்த சைந்தவியை அபார்த்து முறுவலித்த விக்ரம் "ஹாய் சைந்தவி எப்படி இருக்க பாப்பா எப்படி இருக்கா?"என்று கேட்க

அவளோ முறுவலித்தவள் "வாடா வா நல்லவனே இப்போ தான் வீட்டுக்கு வழி தெருஞ்சுச்சா .அதெல்லாம் நல்லா தான் இருக்கேன் அப்பறோம் நீ மட்டும் தான் வந்துருக்கியா ?"என்று கேட்க

அவனோ இது என்ன கேள்வி என்பதை போல் பார்த்தவன் "நா மட்டும் தான் வந்துருக்கேன் ஏன் கேக்குற ?"என்க

சைந்தவியோ "இல்லடா இது நோர்மல் விசிட் இல்ல சம்பிரதாயப்படி பொண்ணு பாக்குறது அம்மா அப்பா யாராச்சும் இருந்தா தான் நல்லாருக்கும் "என்க

அவன் "அதெல்லாம் ஒன்......"என்று கூறி முடிப்பதற்குள் அடுத்த கார் அவர்கள் காம்பௌண்டிற்குள் நுழைய அதிலிருந்து விக்ரமின் அம்மா அவர் பின் இரு பெண்களுடன் தாம்பூலத்தட்டுடன் இறங்கினார் .

கார் வரும் சத்தத்தை கேட்டு திரும்பிய விக்ரம் அவனது அன்னையை கண்டு குழம்ப அவர் சிரித்த முகத்துடன் விக்ரம் அருகில் வந்தவர் சைந்தவியிடம் திரும்பி "வணக்கம் நா விக்ரமோட அம்மா உள்ள போலாமா "என்க அவளோ பெரிதாய் சிரித்தவள் உள்ளே அவரை அழைத்து சென்றாள்.

இவர் எப்படி இங்கே வந்தார் என்று குழம்பிய விக்ரம் தன் செல்போன் சினுங்க அதை எடுத்தவன் நவ்யாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியான "விக்ரம் அத்தைய நா தான் வர சொன்னேன் எதுவும் கேட்காம உள்ள வாங்கப்பா பெத்தவங்க ஆசிர்வாதத்தோட நம்ம lifeoda next ஸ்டெப் எடுத்து வைக்கலாம் ப்ளீஸ் சிரிங்க "என்று இருக்க அதை பார்த்து சிரித்தவன் உள்ளே சென்றான்.

அங்கே விக்ரமின் தாய் உள்ளே சென்று சைந்தவியின் தாய் தந்தையுடன் சற்று அளவளாவியவர் விக்ரமின் கண்கள் அங்கும் இங்கும் அலைப்புறுவதை கண்டுவிட்டு"அது கொஞ்சம் நவ்யாவ வர சொல்றீங்களா "என்க இதற்காகவே காத்திருந்தது போல் விக்ரமின் கண்கள் நவ்யாவின் அறையின் வாசலிலேயே பதிந்தது.

கதவை திறந்து அதிதி ஒரு புறமும் சைந்தவி ஒருபுறமும் அழைத்து வர அரக்கு வண்ண பட்டில் தலைமுடி பின்னப்பட்டு அதில் நிறைய மல்லிகை சரம் சூட்டி கழுத்திலும் காதிலும் கையிலும் பொன் ஆபரணங்கள் மின்ன அளவான ஒப்பனையிலும் தேவதையாய் நின்ற தன்னவளை பார்த்தவன் சொக்கி போனான் .அவன் ஆஆ என்று நவ்யாவையே வைத்த கண் வாங்காமல் பார்க்க அவனின் பார்வையை உணர்ந்து கொண்ட நவ்யா வெட்கத்தால் தலையை உயர்த்தாது தலை குனிந்தவாறே வந்தவள் சைந்தவி கொடுத்த காபி trayai வாங்கி அவர்களை நோக்கி நடந்து வந்தாள்.

முதலில் விக்ரமின் அம்மாவிற்கு அதன் பின் சைந்தவியின் பெற்றோர்க்கு கொடுத்தவள் இறுதியாய் விக்ரமிடம் குனிய அவனோ அவளிற்கு மட்டும் கேட்கும் குரலில் "நவி செம்ம அழகா இருக்க விட்டா இப்டியே தூக்கிட்டு போயிருவேன் " என்க

அவளோ வெட்கிச்சிரித்தவள் "சும்மா இருங்க விக்ரம் "என்று சிணுங்கிவிட்டு சென்றாள்.அவன் அவளையே பார்க்க அருகில் இருந்த ஹரியோ விக்ரமின் தோளில் இடித்தவன் "ஹலோ சகல வாயில ஈ போக போது வாய மூடுங்க"என்க அசிங்கப்பட்ட விக்ரம் அசடு வழிந்தவாறு இளித்து மழுப்பினான் .

பின் மேற்படி நடக்கும் காரியங்கள் அனைத்தையும் பேசி முடித்தவர்கள் தட்டை மாற்றிக்கொள்ள அவர்கள் தட்டை மாற்றி திருமணத்தை உறுதி செய்யவும் சரண் ,ஸ்வஸ்திகா ஆதித்தன் மஹதியுடன் வித்யுத் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது .

ஸ்வஸ்திகாவை கண்ட அதிதி "ஹே ஸ்வஸ்தி எப்போ கூப்பிட்டா எப்போ வந்துருக்க ?"என்றவள்

ஆதியிடம் திரும்பி "வாங்கண்ணா என்றவள் மஹதியை கேள்வியாய் நோக்க ஆதித்தனோ சிரித்தவாறு மஹதியின் கையை பற்றியவன் "இது மஹதி என்னோட fiancee " என்க

மஹதியோ அதிர்ந்தவள் ஆதித்தனிற்கு மட்டும் கேட்கும் குரலில் "நா okve சொல்லலையே மிஸ்டர் ரிஷி "என்க

அவனோ "நீ ஓகே சொல்லுவன்னு வெயிட் பண்ணேனா எனக்கு straightaah அறுபதாம் கல்யாணம் தான் நடக்கும் சோ முதல்ல கல்யாணம் பண்ணிக்குறேன் அப்பறோம் ஓகே சொல்ல வச்சுக்குறேன் போலீஸ் மேடம் "என்றவன் அவளை பார்த்து கண்ணடிக்க அவளோ முதல் முறையாய் தன்னில் தோன்றிய வெட்கச்சிவப்பை மறைக்க பெரும்பாடு பட்டாள்.

விக்ரமிடம் வந்த சரண் "சோ மச்சான் நீயும் மாட்டிகிட்டியா "என்க

விக்ரமோ சிரித்தவன் "ஹாங் என்ன பண்ண சொல்ற சிக்கிட்டேன் தப்பவா முடியும்"என்றுவிட்டு பெருமூச்சு விட சரணோ பரிதாபப்படுவது போல் முகத்தை வைத்தவன் விக்ரமின் தோளில் கை போட்டு "ஹூம் என்ன பண்றது all விதி மச்சான் "என்று விட்டு திரும்ப அங்கோ அதுவரை தோன்றியிருந்த வெட்கம் முழுதாய் போய் நவ்யா விக்ரமை முறைக்க ஸ்வஸ்திகாவோ அடுத்த roundirkaaga சாரணை தாக்க தயாராய் இருந்தாள்.

இருவரும் இருவரையும் முறைத்து கொண்டே நெருங்க விக்ரமும் சரணும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்கள் "எஸ்கேப் "என்று கூறிவிட்டு ஓட ஸ்வஸ்திகாவும் நவ்யாவும் இருவரையும் துரத்தினர் .

அவர்கள் ஓடுவதையும் நவ்யாவும் ஸ்வஸ்திகாவும் துரத்துவதையும் சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதிதியின் அருகில் நெருங்கி நின்ற ஹரி" என்னமா தொரத்துறாங்க நவ்யாவும் ஸ்வஸ்திகாவும்.ஹ்ம்ம் நல்ல வேல பா நா தப்பிச்சேன் இந்த பிசாசுகிட்ட இருந்து .வேற ஏதாச்சும் நல்ல அடக்கமான பொண்ணா பாத்து கரெக்ட் பண்ணனும்"என்று விட்டு ஓரக்கண்ணால்

அதிதியை நோக்க அவளோ அவன் எதிர்பார்த்தது போலவே அவனை முறைத்தவள் "ஓஹ் உனக்கு இந்த ஐடியா வேற இருக்கா மவனே கொஞ்ச நாளா என்ட அடி வாங்காம துளிர் விட்டு போச்சு உனக்கு இன்னைக்கு உன்ன விட மாட்டேன்டா "என்று துரத்தினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro