பகுதி 54

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சென்னை

அத்தம்மா இந்தங்க காபி

நானே கேக்கனுமுன்னு நினைச்சிட்டு இருந்தேன் ரொம்ப தேங்கஸ் டா தலை வலிக்குது ஒரு காபி குடிச்சா தேவலாம் போல இருந்தது நீயே கொண்டுவந்துட்ட என்று காபியை எடுத்துக்கொண்டார் தாரா

ஏன் அத்தம்மா ரொம்ப தலை வலிக்குதா வாங்க ஆஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம் என்று வைஷாலி அழைக்க

அதெல்லாம் வேணாம்மா சூடா காபி குடிச்ச தலைவலி பறந்து போய்டும் சரி உன் புருஷன் எங்க மணி 5 ஆக போகுது இன்னும் ஆள காணும் லேட்டா வருவேன்னு ஏதாவது சொல்லி இருந்தானாமா???? ஷாப்பிங் போகனுமுன்னு அவனுக்கு நியாபக படுத்துனியா இல்லையா???

காலைல போகும்போது சொல்லிதான் அனுப்பினேன் அத்தமா சரி சரின்னு சொன்னாறு லேட்டாகுமுன்னு எதுவும் சொல்லிட்டு போகலையே என்று யோசனையோடு கூறினாள் வைஷாலி

சரி டா வந்துடுவேன்னு சொல்லி இருந்தா நிச்சயமா வந்திடுவான்
நித்யமல்லிய கட்டி வைச்சிருக்கேன் பாரு அதை எடுத்து வைச்சிட்டு
ரெடியா இரு வந்தவுடனே அவன கிளப்பி கூட்டிட்டு போய்ட்டு அப்படியே பார்க் பீச்சின்னு போய்ட்டு வாங்க முடிஞ்ச அளவு டின்னர் ஹோட்டலுக்கு போறா போல பாத்துக்க வீட்டுல நா இருப்பேன். நான் இருப்பேன்னு அரக்க பரக்க ஒடிவராதா புரியுதா நல்லா சந்தோஷமா என்ஜாய் பண்ணணும் என்று கண் அடித்து கூறினார் தாரா.

போங்க அத்தமா என்று அவர் கொடுத்த காபி டம்பளரை வாங்கிகொண்டே உள்ளே ஒடிவிட்டாள் மருமகள்.

சரியாக 15நிமிடத்தில் வந்தவன் வரும்போதே தாயை ஹாலில் பார்த்து சோபாவில் அமர்ந்தவன் ஷாலு ஒரு கப் ஸ்டராங் காபி மா என்று கூறி உள்ளிருக்கும் மனைவிக்கு குரல் கொடுத்தான்

அவன் கூறி முடிக்கும் முன்னே காபி டம்பளருடன் அவன் எதிரில் வந்து நின்றாள் வைஷாலி. சிரித்தபடியே அதை வாங்கி மனைவியை பார்வையாலேயே அளந்தவன் ஓ ரெடியாதான் இருக்கியா ஒன்லி 10 மினிட்ஸ் இப்போ வந்துடுறேன் என்று காபியை வாங்கினான் .

அவன் கூறியதற்க்கு அளவாக சிரித்து தலையை மட்டும் ஆட்டியவள் அவனுக்கு தேவயானதை எடுத்து வைக்க அறைக்கு சென்றாள்.

என்னடா லேட்டு

டிராபிக் மா வழியில ஒரு ஆக்ஸிடன்ட் அதான்

என்ன என்னடா அக்ஸிடன்ட் உனக்கு ஒன்னுமில்லையே என்று பதறி மகனை கேட்க

ஆக்ஸிடன்ட் எனக்கு இல்லமா வழியில ஒன்னு அதனாலதான் டிராபிக் அதை தாண்டி வரதான் லேட் என்று கூற

அறிவு கெட்டவனே பயந்தே போயிட்டேன் தலையும் இல்லாமா வாலும் இல்லாமா திடுதிப்புன்னு ஆக்ஸிடன்ட்னு சொன்னா என்ன நினைக்கறது நல்லவேளை உன் பொண்டாட்டி இல்ல கேட்டுருந்த மயக்கமே போட்டு விழுந்திருப்பா ... என்று மெல்லமாக கூறியவர் அவ உன் மேல உயிரயே வைச்சிருக்கா உனக்கு ஏதாவது ஒன்னுன்னா அவ தாங்கமாட்டா என்றார். அவரை பார்த்து ம் என்றவன் தாயிடம் இருந்து இந்த வார்த்தையை கேட்டதும் சந்தோஷம் நிறைந்த முகத்துடன் அறைக்குச் சென்று உடை மாறி ரிப்ரெணஷ் செய்துக்கொண்டு மனைவியுடன் காரில் ஏற போனான்.

கொஞ்சம் நில்லுமா என்றார் தாரா

கேள்வியாய் வைஷாலி அவரை பார்க்க

ரெண்டுபேர்தானே போறிங்க இவ்வளவு பெரிய கார் எதுக்கு அதோ இருக்கு பாரு பைக் அதை எடுடா என் மருமகள பின்னாடி உட்கார வைச்சிட்டு கூட்டிட்டு போடா என்றவர் இந்த காலத்து பசங்களுக்கு எல்லாத்தையும் சொல்லி கொடுக்கனும் போல இருக்கு என்று உள்குரலில் ஆனால் இருவருக்கும் கேட்குமாறு கூறியவர் பாத்துபோடா அம்மா ஷாலு பாத்துமா கெட்டியா என் பையனை பிடிச்சிக்கோ அப்புறம் நான் சொன்னது எதையும் மறக்காதே என்று கூறிஅவர்களை வழியனுப்பி வைத்தார்.

சிறிது தூரம் சென்றதும் ம்கூம் என்று தொண்டையை செறுமியவள் என்னங்க என்று அவனை அழைத்தாள்.

என்னப்பா என்று வைபவ் கேட்க

ஏங்க நாம கோயிலுக்கு போயிட்டு போலாமா

என்னப்பா திடிர்ன்னு கோவிலுக்கு

என்னமோ தெரியல இன்னைக்கு போகனும்னு தோனுது பக்கத்துல ஏதாவது கோவில் இருந்தா போகலாம் பீளிஸ்ங்க

நீ போன்னு சொன்னா போகபோறேன் இதுக்கு எதுக்குபா பீளிஸ்லாம் என்றவன் பக்கத்தில் இருந்த வினைதீர்க்கும் விநாயகர் கோவிலுக்கு அழைத்து சென்றான்.

ஒரு மாலையை வாங்கியவள் அர்ச்சனை தட்டையும் வாங்கினாள். கணவனை பார்க்க பணத்தை எடுத்து கடைக்காரரிடம் கொடுத்தான் .

வாங்க போலாம்

ம் போலாமே என்று தோள்களை தூக்கியவன் அவள் பின்னோடு நடந்தான்.

அய்யரிடம் மாலையை கொடுக்க யார் பேருக்கு என்று அய்யர் கேட்க

பேரு வைபவ் என்றவள் அவன் ராசி நட்சத்திரம் கூறினாள் அவள் கூறியதும் இவனும் ஒரு நிமிடம் என்று அவளை போலவே தட்டில் கைவைத்து வைஷாலி அவங்களுக்கும் சேத்தே பண்ணுங்க என்றான்

இல்ல சாமி அவருக்கு மட்டும் பண்ணுங்க என்று இவளும்

இரண்டுபேர் பேருக்கும் சேர்த்தே பண்ணுங்க என்று அவனும் அவளை பார்த்தான். அதில் அவன் தலையை ஆட்டி பீளிஸ் என்று ஒரு கண் அடித்து கேட்க அமைதியாக இருந்தாள்.

கண்களை மூடி அமைதியாக கை கூப்பியவள் எந்த ஜென்மத்துல நான் இருந்த தவமோ எனக்கு இப்படி ஒரு நல்ல புருஷனா....என் மனச மட்டுமே நேசிக்கிர கணவரா கொடுத்திருக்க உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல கல்யாணம்ற ஒன்ன எப்பவும் நினைச்சி பாக்காதவளுக்கு அதை நடத்தி வைச்சி எனக்கு கிடைக்காத சொர்கம்ன்னு நான் நினைச்சிட்டு இருந்தத என் வழ்க்கை துணையா வரமா தந்ததுக்கு உன்னை கோடி முறை தொழுதாலும் போதாது.... எனக்கு கொடுத்த வாழ்க்கைல எப்போதும் சந்தோஷத்தோட அவர்கூட காலம் முழுசும் நான் கைகோர்த்து பிரியாம இருக்கனும் அவருக்கு எந்த ஆபத்தும் வந்திட கூடாது கடவுளே என்று மனதிற்க்குள் பிரார்த்தித்து கண் மூடியவளின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

கோவில் பிரகாரத்தை சுத்தினார்கள் கிளம்பளாமா என்று அவன் கேட்க முதலில் இருந்த இறுக்கம் இல்லாமல் இருந்தவள் கிளம்பலாமே என்று கூறி பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

ஷாப்பிங் எல்லாம் முடிக்க கிட்டதட்ட 8மணி ஆகிவிட என்னங்க காலார கொஞ்சம் நடக்கலாமா உங்களுக்கு டயர்டா இருந்தா சொல்லுங்க வீட்டுக்கே போய்டலாம்.

காலைல ஆஸ்பிட்டல் போய்ட்டு ஈவினிங் வீட்டுக்கு வந்துட்டு உன் கூட கோயில் போய்ட்டு ஷாப்பிங் போய்ட்டு வந்த எனக்கு டயர்டா சான்ஸே இல்ல அவ்வளவு ஸ்டாமினா அய்யா பாடில என்று இருதோள்களில் இருந்த துணியை தூக்கிவிட

என்ன ஜோக்கா சொல்லிட்டு செய்ங்க என்று சிரிக்காமல் அவனை வாரியவள்

பின்ன இது ஜோக் இல்லையா அய்யோ இது தெரியலையேமா என்று கூறி பக்கத்துல நீ இருந்தா உன்னை தவிர வேற எதுவுமே தெரியமாட்டங்குது என்று ஒரு விதமான குரலில் கூற

ஹோ.... ஹோ... பேச்சு வேற எங்கயோ திசைமாறி போகுது என்று பேசியவள் அலைகளை ரசித்த வண்ணம் நின்றிருந்தாள்.

திசைமாறி எங்க போகுது என் பொண்டாட்டிகிட்ட தானே போகுது என்று இவனும் பதில் தர

என்னங்க குரல் என்னமோ போல இருக்கு

இல்லையே நல்லா தானே இருக்கு

இல்ல இல்ல வாங்க வீட்டுக்கு போகலாம்

அப்போ கொஞ்சநேரம் நடக்கனுமுன்னு சொன்னியே

இப்போ வேனா இன்னோரு நாள் வரலாம்

அப்போ போலாம்ங்கரா

ம் போகலாம்

சரி என்றவன் அவளை ரெஸ்டாரண்ட் அழைத்துச்சென்று சாப்பிட வைத்து வீட்டுக்கு செல்ல இரவு 11 மணியை தொட்டது காலிங் பெல் அழுத்த கதவை திறந்த தாரா சாப்பிட்டிங்களா என்று இருவரையும் கேட்க பதில் கூறியவர்களை பேசவிடாது நானும் சாப்பிட்டேன் போய் படுங்க காலைல பேசிக்கலாம் என்று அவர் அறைக்கு சென்று விட்டார்.

அறைக்கு சென்றதும் குளியலறை சென்றவன் உடைமாற்றி வந்தே கட்டிலில் அமர்ந்தான் வைஷாலியும் உடை மாற்றி வந்து படுக்க போகும் சமயம் நான் உன்கிட்ட பேசனும் ஷாலு

சொல்லுங்க எதை பத்தி பேசனும்

அது அது நீ சந்தோஷம் இருக்கியா ஷாலு

என்னங்க திடீர்ன்னு கேக்குரிங்க

இல்ல இன்னைக்கே உன் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் வித்தியாசமா இருந்துச்சி உன் அமைதி கண்ணீர் அப்புறம் நீ நார்மலா பேசியது எல்லாமே எனக்கு வித்தியாசமா பட்டுது ஏன் உனக்கு என்ன ஆச்சி ஷாலு ஏன் அப்படி இருந்த

இல்லங்க நான் நார்மலாதான் இருந்தேன்

இல்ல காலைல இருந்தே உன் முகம் சரியில்ல

எதையும் மறைக்க முடியதவள் என்னங்க இன்னைக்கு என் அப்பாவோட பிறந்த நாள் அதுதான் என் வருத்தத்துக்கு காரணமே நான் நல்லபடியா வாழறத பாக்கனுமுன்னு நெனச்ச ஆத்மா என் கவலைலயே போயிடுச்சி

சரி மா இங்க பாரு என்னை பாரு இது தானே வேண்டான்றது உன்னை நான் சந்தோஷமா வைச்சிருக்கனுமுன்னு நினைக்கிறேன் ஆனா நீ இப்படி எல்லாத்துக்கும் அழற என்று அவளின் நாடியை பிடித்து கண்களை பார்த்து பேச

இல்லங்க நான் அழல இனி அழவே மாட்டேன்

சரி இப்போ அழல ஆனா கோவில்ல ஏன் அழுத

எனக்கு இப்படி பொக்கிஷமா ஒரு புருஷன கொடுத்த கடவுளுக்கு நன்றி சொன்னேனா அப்படியே நீங்க அம்மாகிட்ட பேசிட்டு இருக்கும்போது ஆக்ஸிடன்ட்ன்னு சொற்னிங்கள்ள ஆதை கேட்டு நான் கிழ விழாத குறைதான் ஒருநிமிஷம்.உயிரே போயிடுச்சி அப்புறம் அதுக்கான விளக்கத்த சொன்னப்பதான் போன உயிர் வந்துச்சி அதான் என் அன்பான புருஷனுக்கு நிறைய அறிவ கொடு ஒழுங்கா நிறுத்தி நிதானமா பேசுற புத்திய கொடுன்னு வேண்டிக்கிட்டேன்

அவள் கூறியதும் அவள் முகத்தில் இருக்கும் குறும்பை பார்த்தவன் அப்போ எனக்கு அறிவு இல்லையா உன்னை என்று அவளை இறுக்க

என்ன செய்ய போறிங்க

கண்ணை மூடு

எதுக்குங்க கண்ணை மூடனும்

கண்ண மூடுன்னு சொன்னா மூடு
கைய கட்டு என்று ஒரு துணியை எடுத்து கண்ணை கட்டியவன் கைகளை பின்னாள் கட்ட சொன்னான்.

என்னங்க எங்க இருக்கிங்க என்று கண்களில் ஒரத்தில் பார்க்க தலையை உலுக்கியவள் கைகளால் அவனை துளாவினால்

ஏய் ஏய் சீட்டீங் சீட்டிங் நான் ஒத்துக்க மாட்டேன் பின்னாடி கைய கட்டு என்று குரல் கொடுக்க அமைதியாய் நின்றாள்.

இவளின் தந்த காலை பிடித்தவன் பாதத்தை எடுத்து அவன் மடிமீது வைத்து தங்க கொலுசை அணிவித்தான்.
அவளின் அடி பாதத்தை எடுத்து அதில் விரல் வைத்து கூச்சம் ஏற்படுத்த அதில் நெலிந்தவள் சரியாக நிற்கமுடியாமல் தள்ளாடி அவன் மேலே விழ இருந்தவளை பூக்குவியலாய் கைகளில் ஏந்தியவன்

என்னை யார் என்று எண்ணி
என்னுள் புதைந்தாய்.....
நான் உன் நிழலடி.... ஆனால்
சூரிய ஒளியில் ஏற்படும்
வெப்ப நிழல் அல்ல..... மறைவதற்க்கு

நில ஒளியில் ஏற்படும்
கருமை நிழல் அல்ல..... அழிவதற்க்கு
தண்ணீரில் தெரியும்
நீர் நிழல் அல்ல..... கலைவதற்க்கு
ஆகாயத்தை கடக்கும்
கார்மேக நிழலும் அல்ல.... ஒளிவதற்க்கு நான்

உன் பார்வையால் செதுக்கப்பட்டு
உன் இதயத்தால் உயிர்பிக்கப்பட்டு
உன் அணைப்பில் வாழ்கின்ற
என்னென்றும் உன் பின்தொடரும்
காதல் நிழலடி..... என்றும் உன் நிழல் போல் தொடர்வேனடி எனதருமை கண்ணம்மா

என்று கட்டிலில் கிடத்தி கண்களின் கட்டை அவிழ்த்துவிட்டான்.

முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அவனையே பார்த்திருந்தாள்.

ஹலோ ஹலோ இங்க பாருமா என்று அவன் அவளை உயிர்பித்த பின்பே நிகழ்வுக்கு வந்தாள் கணவனின் பரிசை கைகளால் தொட்டு பார்த்தவள் என்னங்க கொலுசெல்லாம் சூப்பரா இருக்கு என்று மகிழ்ச்சியாய் கணவன் மேல் சாய்ந்துகொண்டு கூற

இந்த சர்பிரைஸ் எதுக்கு சொல்லு

கொஞ்சம் யோசித்தவள் தெரியலங்க என்று கூறி ஆனா நீங்க சொன்ன கவிதையும் அழகு நீங்க கொடுத்தபரிசும் அழகுங்க என்று அவனின் முகத்தை நெட்டி முறித்தாள்.

நிஜமா தெரியல

தெரியலையே என்றாள்

இன்னைக்கு உனக்கு எப்படி நியாபகம் இருக்கோ அதே போல என் செல்ல பொண்டாட்டிகிட்ட அயுள் கைதியாய் சிறைபட்டு இன்பமாய் இந்த வாழ்க்கையில தண்டணையை அனுபவிக்கிற வெற்றிகரமான நூறாவது நாள்.

என்று அவன் கூறவும் அவன் தன் மேல் வைத்துள்ள அன்பும் காதலையும் கண்டவள் அவனின் கண்களில் முத்தம் வைத்தாள்.

என்னப்பா திடிர்ன்னு முத்தம். எனக்கு சர்பிரைஸ்ஸா இந்த சர்பிரைஸ் கூட நல்லா இருக்கு ஆனா கொஞ்சம் லோக்கேஷன சேன்ஞ் பண்ணி இருக்கலாம் உதடு கூட உன் சர்பிரைஸ கேக்குதுபா ஏதாவது கண்சிடர் பண்ண முடியுமா என கேட்க

நோ வே இந்த கண்கள் எனக்கு எப்பவும் spl தான் இந்த கண்கள் தானே என்னை உங்களுக்கு காட்டி கொடுத்தது உங்களோட என்னை சேர காரணமா இருந்தது என்றவள் அவள் மறைத்து வைத்திருந்த புகைபடத்தை எடுத்து கொடுத்தாள்.

அதை பார்த்து ஏய் அழகா இருக்கு டா எப்படிப்பா சூப்பர் டா இந்த படத்துல பாறேன் நீ ரொம்ப அழகா இருக்க

ஓ நேர்ல நல்லா இல்லையா

இதுல ரொம்ப அழகா இருந்தியேன்னு சொன்னேன்

அப்போ நேர்ல சுமாரா இருக்கேனா என்று அவள் கேட்க

இது அது ல என்று அவனும் வடிவேலுவின் பாணியில் கேட்க அவனுடைய மாடுலேஷனில் அவள் சிரிக்க இவனும் இணைந்து இருவரும் மனம் விட்டு சிரித்தனர்.

எல்லாம் சரிபா நீயும் என் கூட இருக்க அப்போ இதை யார் எடுத்தது

அத்தமா

அம்மாவா

ம் அவங்கதான் எடுத்தாங்க உங்களுக்கு தெரியாம எடுக்க சொன்னேன் நாம எப்பவும் இதுபோல சந்தோஷமா சிரிச்சிக்கிட்டே இருக்கனுமுன்னு அவங்க ஆசை

ம்..... ஆமா.... என்று தலை அசைத்தவன் சரி எங்கம்மாவ நீ அம்மான்னு கூப்பிடு இல்ல அத்தன்னு கூப்பிடு அதென்ன அத்தம்மா

எனக்கு உறவுகள் சொந்தத்துகுள்ள கூப்பிடுற முறை ரொம்ப பிடிக்கும் ஆனா எனக்கு சொந்தத்துல அந்த வாய்ப்பு இல்லாம போயிடுச்சி தாரா அம்மாவ அம்மா அம்மான்னு கூப்பிட்டே பழகிடுச்சி அவங்கள அத்தன்னு கூப்பிட வரல பட் எனக்கு அம்மா அப்பா அத்த சித்தி எல்லாமே தாரா அம்மாதான் அதான் அத்த அம்மா மிக்ஸ்பண்ணிட்டேன் அத்தம்மா வந்துட்டாங்க என்றாள்.

அப்போ என்னை மட்டும் வாங்க போங்கன்னு சொல்ற

அப்புறம் எப்படி கூப்புடுறதாம்

உறவுல நான் உனக்கு என்ன

என்னங்க

சொல்லு

புருஷன்

அப்போ புருஷன எப்படியெல்லாம் கூப்பிடலாம்

எனக்கு வரமாட்டதே உங்கள வாங்க போங்கன்னு சொல்லதான் வருது

இதோ செல்லம் நான் சொல்ல வைக்கிறேன் என்று அவள் மேல் படர்ந்தான்.

இங்க இனி நமக்கென்ன வேலை வாங்க அடுத்த ரெண்டு ஜோடி என்ன ஆனாங்கன்னு பார்க்கலாம்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

கௌஷிக்கின் அறை

குல்லு மா எழுந்திரி மா டைம்.... ஆச்சிமா என்று ,வைஷ்ணவி எழுப்ப

சத்தம் இல்லாமல் கௌஷிக்கும் குல்லுவும் உறங்கிக் கொண்டிருத்தனர்

எழுப்ப அறும்பாடுபட்டு கொண்டிருந்தவள் எரிச்சலில் எந்திரி டி என்று மகளை தட்டி பாரு.... அப்பாவுக்கு பொண்ணு சலச்சவ இல்லன்னு ரெண்டுபேரும் போட்டி போட்டுக்கிட்டு தூங்கரிங்க நேரம் ஆகுது என்று வைஷ்ணவி அவளை எழுப்பி கொண்டிருக்க

வைஷுவின் கத்தலில் போர்வையை விலக்கியவள் மா பீளிஸ் மா give me 5 minute ma pls
என்று தாயிடம் செல்லம் கொஞ்சி கண்களை திறவாமல் படுத்துக்கொண்டாள் குல்லு

சொன்ன பேச்ச கேட்டாதான் விடிஞ்சிடுமே ஏய் இப்போ எழுந்துக்கப் போறியா இல்லையா என்று மகளின் போர்வையை விளக்கி விட

தாய் விலக்கிய போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டவள் மூடிய கண்களை திறக்காமலே போர்வைக்குள் இருந்தபடியே அப்பா பீளிஸ் இந்த அம்மாவ கொஞ்சம் வெளியே கூட்டிட்டு போங்க என்று அவனின் செல்ல மகள் கத்த

என்னடி என் பொண்ண கொடுமை படுத்திக்கிட்டு இந்த நைட்ல எழுப்புற வா செல்லம் அப்பாகூட படுத்துக்க என்று மகளை தன்னுடன் படுக்க வைத்துக்கொண்டான்.

நைட்டா அட நாரயணா நல்லா இருக்கு.... நீங்க இப்படியே பண்ணிட்டு இருங்க அவ படிச்சா போலதான்.. காலைல 6 மணிக்கு எழுப்பறது இராத்திரியா!!! அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ரொம்பதான் வாய் ஆகிடுங்சி... 10 நிமிஷம் 5 நிமிஷ லேட்டுக்கெல்லாம் அவங்க மேம் முன்னாடி நான்தான் போய் நிக்கனும் ஸ்ரிட்டான ஸ்கூல்ல சேத்துட்டு இப்படி அலுச்சாட்டியம் பண்ணிட்டு படுத்து கிடக்குறிங்களா .... ரெண்டு பேரும் நேரத்துக்கு போனா போலதான் ஒழுங்கா மரியாதையா எந்திரிக்கல ஐஸ் வாட்டர் அபிஷேகம் தான்.... மூனு சொல்றத்துக்குள்ள குல்லு எந்திரிச்சி பாத்ரூம் போய் இருக்கனும் உங்க அப்பா எழுந்து உட்கார்ந்து இருக்கனும் என்று எச்சரிக்க

பெட்ஷிட்டுக்குள்ளயே தாயின் அர்ச்சனைகளுக்கு வாயசைத்துக்கொண்டு தகப்பனை தாய் தன்னை மிரட்டுவது போல் மிரட்டி உருட்டி சைகை செய்து கொண்டிருக்க

குட்டிமா அம்மாவ கத்த வைக்காத டா அம்மா பாவம்ல போடா ராஜா என்று மகளிடம் தன்மையாக கூறி அவளை ஐஸ் வைத்து எழுந்துக்கொள்ள வைத்தவன் இறுக்க போர்வையை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பிக்க

குல்லு போய் பிரஷ் பண்ணிக்கிட்டே இரு நான் வரேன் என்றவள் உங்களுக்கு தனியா சொல்லனுமா மடமடன்னு எந்திரிங்க உங்களுக்கும் டைம் ஆகுதுல்ல

என்னையும் குட்டிமா கூட ஸ்கூலுக்கு அனுப்பபோறியா நான் படிச்சி முடிச்சிடேன் டி அவள மட்டும் ஸ்கூலுக்கு அனுப்பு நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வறேன் என்று கூறியபடி படுத்திருந்தான் கௌஷிக்

ஆஹா அந்த எண்ணம் வேற இருக்க!!! ம் விளங்கிடும். என்று அவனின் போர்வையை பிடுங்கியவள் எந்திரிங்க நாளைக்கு ஹோட்டல் ஓபனிங் வைச்சிங்கிட்டு இப்படி தூங்கிக்கிட்டு இருக்கிங்க என்று கூறி அவனை எழுப்ப.

ஒற்றை கண்ணை திறந்தவன் மறுகண்ணையும் திறந்து அங்கும் இங்கும் பார்வையை அலையவிட்டவனை கவனித்தவள் என்னங்க என்ன தேடறிங்க என்று அவனை கேட்க

அவள் எதிர்பாரத நேரம் வைஷூவை கட்டியணைத்து கழுத்தில் முகம் புதைக்க அவன் செய்கையில் கழுத்துபகுதியில் கூச்சம் வர என்னங்க விடுங்க விடுங்க என்று வைஷுவின் குரல் மட்டுமே வேண்டாம் என்று சொல்ல உள்ளம் அவன் அணைப்பிலேயே இருக்க ஏங்கியது...

என்னடி காலைல இப்படி வந்து எட்டி நின்னுகிட்டு எழுப்புற

ஓஓ பின்ன எப்படி எழுப்புறதாம் என்று அவன் மீசையை பிடித்து இழுக்க

ஸ் ஆஆ என்ற கத்தியவன் அவளது முகத்தில் விரலால் மெல்ல கோலமிட்டு கொண்டே வந்து அவள் இதழ்களில் விரல் வைத்து வருடியபடி அலைந்து அதனை குவித்து அவள் முகத்திற்கு அருகில் வந்தவன் அவள் செவ்விதழில் தேன் குடிக்கும் நேரம் திடீரென அம்மா அம்மா என்று குல்லுவின் குரல் கேட்க பதட்டத்தில் அவன்விரல் வைஷுவின் பச்சரிசி பற்களுக்கிடையே மாட்டிக்கொள்ள வேண்டுமென அவன் மேல் உள்ள காதலில் அவன் விரலை ஒரு கடி கடிக்க ஆஆஆஆ என்று கத்தியவனை பார்த்து சிரித்தவள் வேணும் வேணும் நல்லா வேணும் காலைலயே ரொமேன்ஸா உள்ள பொண்ணு இருக்கா டியர் போய் வேலைய பாருங்க என்று அவன் கன்னத்தை கிள்ளி அவனை பார்த்து அழகுகாட்ட

ஏய் இருடி காலையிலையே வந்து புருசன தவிக்க விடுறியேடி ஒரே ஒரு கிஸ்ஸாச்சும் கொடுத்துட்டு போ குலாபி என்று அவளின் மெல்லிடையில் கிள்ளிவிட

அவன் கையை தட்டிவிட்டு ஒழுங்கா சமத்தா போய் வேலைய பாருங்க குல்லு வந்துடுவா விடுங்க என்று அவனிடமிருந்து தப்பி வர

உன்னை என்று எட்டி பிடித்து அவன் தூரத்திக்கொண்டு வருவதற்க்குள் குளியலறையில் ஓடி மறைந்துக்கொண்டாள் வைஷு.

அவள் வரும் வரை அறையிலிருந்து வெளியே செல்லாதவன் லேப்டாப்பில் மும்முரமாய் இருந்தான்.

குளியறையில் இருந்து வெளியே வந்தவள் அவனை பார்த்து நமட்டு சரிப்பு சிரித்தபடியே வானதியை தயார் செய்ய இவன் அவளை முறைத்துக்கொண்டு பார்வையை திருப்பினான்.

ச்சச்சோ ரொம்ப ஓவரா போய்டோமோ ஒரு கிஸ்தானே கொடுத்துருக்கலாம் பாவம் பச்சபுள்ளையாட்டம் உட்காந்து இருக்காரு சரி வந்து பேசிக்குவோம். என்று மனதில் நினைத்தவள் கௌஷி போய் குளிங்க போங்க என்று அவனுக்கு குரல் கொடுத்துவிட்டு குல்லுவை அழைத்துக்கொண்டு கிழே சென்றாள்.

அவள் சென்றதும் கணினியின் திரையை மூடி வைத்தவன் பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

ஏய் குடியா என்று குல்லுவின் தலையை கைத்துவிட்டு பக்கத்தில் வந்து அமர்ந்தான் கிர்ஷ் என்ற கிருஷ்ணன்

பக்கத்தில் மீராவும் ஜஷ்வந்தும் அமர்ந்து சப்பிட்டு கொண்டு இருந்தனர். பூஜா அனைவருக்கும் உணவினை பரிமாற அக்கா லஞ்ச் எல்லாம் மம்தா ரெடி பண்ணிட்டாங்களா பாக்ஸெல்லாம் பேக் பண்ணியாச்சா என்று வைஷு கேட்க

ரெடி ஆகிடுச்சி எல்லாம் அதோ அங்க பாரு மேல இருக்கு வைஷு ஆமா நீ கீழே வர ஏன் இவ்வளவு நேரம்

அதை ஏன் கேக்குரிங்க இவள எழுப்பி எழுப்பி ஸ்ப்பா முடியல அப்பாவும் பொண்ணும் நல்லா பண்றாங்க என்றவள் தம்பளரில் தண்ணீர் கொண்டு வைத்தாள்.

மா..... பாருங்கமா சித்தப்பா என் தலைய கலைச்சி விட்டுட்டாங்கம்மா என்று வைஷ்ணவியிடம் குல்லு முறையிட

விடுமா சித்தப்பா ஆசையா தானே விளையாடுறாங்க கிர்ஷ் அவ தலைய கலச்சி விடாத என்று வைஷ்ணவி கூறி இருவரிடமும் சமதானமாய் பேசி பள்ளிக்கி கிளப்பி கொண்டிருந்தாள்.

அப்படி சொல்லுங்க பாபி தொட்டாலே ரொம்பதான் அலுத்துக்கரா என்று குல்லுவிடம் பழுப்பு காட்டியபடி ஹேய் மீரா குட்டி சித்தப்பாவுக்கு ஒரு வாய் ஊட்டுமா என்று அவளை உசுப்பேற்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கிர்ஷ்

இந்தா சித்தப்பா என்று பிஞ்சி கைகளில் அல்லி ஊட்டியது குழந்தை மீரா

ம்கூம் உங்க பாபியா இது எங்க அம்மா தெரியுமா?? என்று பதில் கொடுத்து அவனுக்கே பழிப்பு காட்டினாள்.

சரிதான் போடி உனக்கு முன்னாலயே உங்க அம்மாவ எனக்கு தெரியுமே அவங்க எனக்கு அண்ணி என்று அவனும் வம்பு வலக்க

இருக்கட்டுமே ஆனா என்னதானே எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் உங்கல இல்லையே இல்லமா என்று வைஷ்ணவியை கேட்க அவள் பதில் கூறும் முன்னே

இல்ல இல்ல எங்க அண்ணிக்கு என்னதானே ரொம்ப பிடிக்கும் உன்னையெல்லாம் பிடிக்கவே பிடிக்காது வுவேக் என்று ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டே கூறியவனை பக்கத்தில் இருந்த சாம்பர் கரண்டியில் சாம்பரை மோந்தவள் இந்த அபிஷேகம் வேனுமா சித்தப்பா ரொம்ப சூடா இருக்கு கொஞ்ச வேனுன்னா ஊத்தட்டுமா என்று நக்கல் தொனியில் கேட்க

அய்யயோ குட்டி லேடி டான் வந்துடுச்சு என்று ஆச்சர்யபட்டவன் அம்மா தாயே பாக்கத்தான் சாதுவா எங்க அண்ணன போல இருக்க ஆனா பேச்செல்லாம் டாப்டக்கர் தான் அப்படியே உங்க என்று சொல்லியவன் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து எங்க பாபி போல என்று கூறிவிட்டு காயூவின் சிந்தனையில் இருந்தான்.

உங்க சண்டையில காலைல வைச்ச சாம்பார் தான் மாட்டிக்கிச்சா சண்டை போடுறவங்க அப்படி ஒரமா போய் சண்டை போடுங்க உனக்கு டீயூட்டிக்கு டைம் ஆகலியா கிர்ஷ் என்று கேட்க தலையை குணிந்துக்கொண்டான். உங்களுக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகலயா மகாராணி என்று குல்லுவை கேட்டவள் ஜெய் கண்ணா தங்கச்சிங்க ரெண்டு பேரையும் பாத்துக்க சரியா என்று அவனுக்கு கூறி பள்ளிக்கு தேவயானதை எடுத்து வைக்க சென்றாள்.

உணவு மேசையில் காலை உணவை முடித்து கொண்ட குல்லு அம்மா id கார்ட் எங்கமா வைச்சிங்க என்று வைஷுவை கேட்க

என்ன கேட்டா எங்க டி வைச்ச வந்தவுடனே பேக் ஒரு பக்கம் id ஒரு பக்கம்ன்னு தூக்கிப்போட்டு ஓடிபோரது எங்க டி வைச்ச தேடு இன்னும் 10 நிமிஷம் தான்டி இருக்ககு என்று வைஷு தேட சொல்ல

நான் இங்கதான் வைச்சேன் இப்போ காணும் எங்க மேம் திட்டுவாங்க சீக்கீரம் தேடி கொடுங்க

என்னமா என்ன காணும் என்று பேப்பரை புரட்டி கொண்டிருந்த விஜயபாஸ்கர் வினவ

Id card மாமா குல்லுது பாத்திங்களா இப்போ சொல்றா காணும்னு நேத்து எங்கெல்லாம் விளையாடினிங்க என்று அவரையே திரும்பி கேட்க

நான் பாக்கலையே மா நேத்து தோட்டத்துல விளையாடினோம் அப்புறம் வேற எங்கயும் போகலையே மா என்று பெரியவர் கூற

நல்லா தேடி பாரு வைஷு இங்க எங்கயாவது தான் இருக்கும் குழந்தை பாவம் கொஞ்ச நேரந்தான் கிடைக்குது அதுலயூம் ஹோம் வொர்க் அது இதுன்னு டையமே இல்லாம போகுது

இங்க வந்து ரொம்பதான் செல்லம் கூடி போச்சி உங்க தாத்தா பாட்டி பெரியப்பா சித்தப்பா பெரியப்பா பெரியம்மான்னு எல்லாரும் கொடுக்கர இடம்...

அவரும் ஒரே பொண்ணு ஒரே பொண்ணுன்னு ஓவர் செல்லம் கொடுத்து கொடுத்து கொழுப்பு அதிமாகிடுச்சி உனக்கு என்று குல்லுவை திட்டிக்கொண்டே டேகை தேடிக்கொண்டிருந்தவள் மாமனார் கூறியதன் பேரில் யோசனையுடன் கார்டனில் தேட அங்கே கேட்பார் அற்று கிடந்தது id

இதற்கிடையில் பாத்ரூமில் இருந்தே வைஷு வைஷு சோப் என்று கௌஷிக் கத்த

ம் தோ வறேங்க என்று குரல் கொடுத்தவள் படியேற எத்தனிக்க
குல்லு காயூவை போலவே இவன் எது பேசினாலும் வம்புக்கு வம்பு பேசி அவள் நினைவை ஏற்படுத்திக்கொண்டே இருந்தாள் குல்லு . அவள் நினைவாகவே இருந்தவனை ஹாலில் இருந்த விஜயபாஸ்கர் கிர்ஷ் அண்ணுக்கு சோப் கொடுத்துட்டு வாடா என்று கூற கிட்சனில் இருந்து எடுத்து வந்த சோப்பை கிர்ஷிடம் கொடுத்தவள் மகளை வழியனுப்ப சென்றுவிட்டாள்.

இவனிடம் சண்டையிட்டு காயூ பிரிந்தது முதல் நியூயார்க்கில் இருந்து வந்ததும் இருவரும் சமாதானம் ஆகவில்லை வந்தவள் அக்காவை கூட நேரில் வந்து பார்க்காமல் போனில் பேசிபடியே இருந்தாள். வைஷுவும் எவ்வளவு அழைத்தும் மும்பைக்கே வர மறுத்தாள் கிர்ஷ் நேரிலோ அல்லது போனிலோ பேசி சமாதானம் படுத்துவான் என்று எதிர்பாக்க எதுவும் நடக்காமல் போகவே உடைந்த மனதுடன் இருக்க மாதுரியும் விஜயபாஸ்கரும் நேரில் சென்று ஹோட்டல் திறப்பு விழாவிற்க்கு அழைத்து விட்டு காயூவையும் பார்த்து பேசி அவளையும் சம்மதிக்க வைத்து விட்டு வந்தனர். நாளை அவளின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான் அவளின் கற்பனையில் கதவை தட்ட சோப் வாங்க திறந்தவன் வைஷு என நினைத்து கையை பற்றி இழுத்து அணைக்க

இதை எதிர்பாரத கிர்ஷ் அதிர்ச்சியில் இருந்தவன் சிரிப்பு வந்திட என்னடா அண்ணா இது கோலம் எவ்வளவு கெத்தா இருந்த இப்படி பல்பு வாங்கிட்டியேடா என்று அவனை கிண்டல் செய்ய

அங்கே கிர்ஷை கண்டதும் கோபம் கொண்டவன் உன்னை யாருடா வர சொன்னது வைஷு எங்க என்றான் எரிச்சலாக

ஹா ஹா நீ எதிர்பாத்ததே வேற நான் வந்ததும் கோபம் வந்திடுச்சா பாவம் டா எங்க பாபி ரொம்ப டைட்டா பிடிக்கிற படுபாவி கொஞ்ச நேரத்துல என்ன செய்ய பாத்த என்று நெஞ்சில் கைவைத்து பேச

டேய் பூல் மரியாதையா போய்டு இல்ல அவ்வளவுதான் இருக்க கடுப்புல ஏதாவது செய்திடுவேன் போய்டு என்று அவனை வெளியே தள்ளி கதவை சாத்த

மேலே நடந்ததை நினைத்து சிரித்துக்கொண்டே வந்தான் கிர்ஷ்

என்னடா தனியா சிரிக்கிர என்று கரன் கேட்க

அதுவா என்று கிர்ஷ் கரனின் காதில் நடந்ததை சொல்ல இருவரும் சேர்ந்து சிரித்து கொண்டிருந்தனர். அந்த நேரம் பிள்ளைகளை அனுப்பிவிட்டு உள்ளே வந்த வைஷு அவர்களின் சிரிப்பை பற்றி கேட்க மேல போங்க உங்களுக்கே தெரியும் என்று கூறிய கிர்ஷை வினோதமாக பார்த்துக்கொண்டே படி ஏறினாள் வைஷு

கௌஷிக் அலமாரியில் எதையோ மும்மரமாக தேடிக்கொண்டிருக்க பின் இருந்து அவனை அனைக்க அவளின் கைகளை எடுத்துவிட்டவன் அடுத்த அலமாரியில் தேடினான்

கோபமாக உள்ளான் என்பதை புரிந்துகொண்டவள் என்னாச்சு என் டார்லிங்குக்கு இப்படி முகத்தை திருப்பிக்குரார் என்று அவனின் நாடியை திருப்பி கேட்க

உன்னைதானே சோப் எடுத்துட்டு வரசொன்னேன் எதுக்கு அந்த தடியன்கிட்ட கொடுத்துவிட்ட

அது அது மாமா என்றவள் என்னாச்சி ஏதாவது தப்பாகிடுச்சா என்று யோசனையுடன் கேட்க

அதற்க்கு அசட்டுசிரிப்புடன் நீன்னு நெனச்சி அவனை

என்னங்க என்னபண்ணிட்டிங்க என்று அதிர்ச்சியாய் கேட்டாலும் மனதிற்க்குள் சிரிப்புவந்துவிட வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் நான் நெனச்சி என்ன செய்திங்க சொல்லுங்க என்றாள்.

நீ நெனைக்கிராமாதிரி ஒன்னும் இல்ல சும்மா கைய மட்டும் புடிச்சி இழுத்தேன் அவ்வளவுதான் மானம் போச்சி அவன்கிட்ட இனி பாக்க சொல்லலாம் கிண்டல் பண்ணி சாகடிக்கபோறான் என்று ஒருவிரலால் நெற்றியில் கைவைக்க

ஓஓ அதுதானே கீழே ரெண்டுபேரும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தாங்களா என்று வாய்விட்டு கூறி மறுபடியும் சிரிக்க.

எல்லா உன்னாலதான் என்று அவளின் கைபிடித்து இழுத்து மடியில் அமர்த்திக்கொள்ள

அஹாஹா வந்தவா பொண்டியா தம்பியான்னு தெரியாம நீங்க பண்ணிட்டு என் மேல பழிசொல்றிங்களா உங்கள என்ன செய்றது.... என்று அவனின் கன்னம் தட்டியவள் மிஸ்டர் முதல்ல உங்க கண்ண நல்ல செக் பண்ணணும் என்று அவனை தள்ளிவிட்டு எழுந்துக்கொள்ள
அவள் தள்ளிவிட்டதில் படுக்கையில் சாயந்தவன்

என் கண்ண செக்பண்ணணும் மா காலைல இருந்து தப்பிச்சிக்கிட்டே இருக்க இப்போ உன்னை விடப்போறது இல்ல என்று அவள் அருகிள் வர அவனை விட்டு கட்டிலின் ஒரபகுதிக்கு ஒடியவள் அவனுக்கு முகம் சுழித்து பழிப்பு கட்ட

நீயா வந்த சமாதானம் நானா புடிச்ச அவ்வளவுதான் என்று அவளிடம் கபடி ஆட

முடிஞ்ச புடிங்க பாக்கலாம் முடியாதே முடியாதே என்று அவளும் அவனுக்கு போக்கு காட்ட

வேண்டுமென்றே கொஞ்சநேரம் அவளுக்காக ஆட்டம் காட்டியவன் அவள் அசந்த நேரம் ஒரே தாவாய் காட்டில் மேல் தாவி அவளின் இடையை பற்றி கொண்டான்.

அவன் தொடுதலில் கன்னங்கள் சூடேற என்னங்க விடுங்க சும்மா விளையாட்டுக்கு பண்ணிட்டேன். கீழே எல்லோரும் இருக்காங்க என்று பின்னாலேயே செல்ல

இருந்தா இருக்கட்டும் நம்மல யாரும் கண்டுக்க மாட்டாங்க என்று அவளிடம் முன்னேறினான்

என்னங்க பீளிஸ் இன்னைக்கு உங்களுக்கு எவ்வளவு முக்கியமானா வேலையெல்லாம் இருக்கு என்று அவன் வேலையை நியாபக படுத்த

நான் இல்லனாலும் என் வேலை தானா நடக்கும் யூ டோன்ட் வொரி மை ஸ்வீட் ஹார்ட் என்று கூறி அவளை அணைக்க

அவன் கைகளில் சிக்காமல் போக்கு காட்டி ஒடி விளையாடியதில் உடையில் சிறு விலகல் இருக்க

நானா சும்மா இருந்தாலும் என்னை உசுப்பேத்திக்கிட்டு காலைல இருந்து எனக்கு விளையாட்டு காட்டின இப்போ நானும் கொஞ்சம் விளையாடலாம் தான் இருக்கேன் என்று அவனுடைய விளையாட்டில் இறங்க

வராதிங்க வராதிங்க என்று முகத்தினை இருகைகளால் மூடிக்கொள்ள என்னை பாருடி இங்க பாரு என்று அவள் கைகளை விலக்கி இதழினை சிறை செய்ய ஒரு கொடி போல் அவன் மேலேயே துவண்டு விட

என் உயிர் பூவே

என்ன வர்ணணை எல்லாம் ஜோரா வருது

ஹா.. ஹா... என்று சிரித்தவன்.

பச்சை இலைகளில்
நின்முகம் கண்டேன் ....
காய்ந்த சறுகுகளில்
நின்முகம் கண்டேன்....

மலர்ந்த மலர்களில்
நின் முகம்கண்டேன்....
மலர போகும் மொட்டுகளிலும்
நின் முகம் கண்டேன்....

சூரியனின் வெப்பத்திலும்
நின்முகம் கண்டேன்....
நிலவின் காரிருளிலும்
நின்முகம் கண்டேன்....

எங்கும் நிறைதல் உன்னால்
மட்டுமே சாத்தியம்......
ஏனென்றால் - நீ
என் காதல் கற்பகிரகத்தின் கடவுள்.

என்று அவள் முகம் பார்த்து தன் உணர்வுகளை கவிதையாய் வடிக்க

அதன் பொருளில் உணர்ச்சிவசப்பட்டவள் என்னை அவ்வளவு புடிக்குமா

உன்னை மட்டும் தான்டி புடிக்கும்

என் உயிர் துடிப்பில்
நின்முகம் கண்டேன்......
இம்மண்ணில் நான் புதைந்தாலும்
அங்கேயும் நின் முகம் காண்பேனடி என் கண்மனி என் உயிர் பூவே என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க

மனதில் இருந்த ஆனந்தம் கண்ணீராய் வெளிப்பட அவளின் மேனியில் கண்களால் ஊர்வலம் நடத்தியவனின் செயலில் நாணம் கொண்டவள் அவனுடன் இணைந்த அவர்களின் விளையாட்டை தொடர்ந்தனர்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

பெங்களூர்

லலிதா என்னமா என்ன இவ்வளவு நேரமா ரெடியாகி வர்றத்துக்கு

நான் எப்பவோ கிளம்பிட்டேன் உங்க சீமந்த புத்ரிதான் அடம்புடிச்சி உட்காந்துகிட்டு இருக்க

என்னவா என் பொண்ண அப்படியெல்லாம் சொல்லமாட்டாலே என்ற அருணாச்சலம் காயூமா காயூ இங்க வாட என்றார்

என்னப்பா கூப்பிட்டிங்களா

என்னடா கிளம்பாம இருக்க

அப்பா அது

என்னமா அங்க எப்படி வர்ரதுன்னு யோசிக்கிரியா

இல்லபா ஆஸ்பிட்டல்

3டேஸ் தானேமா உடனே வந்திடலாம் டா அக்கா பாவம்ல கோச்சிக்குவா இல்ல என்று பெண்ணை செல்லம் கொஞ்ச

இது எல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல கொஞ்சி கொஞ்சி சொல்லிட்டு இருக்கிங்க போடி போய் கிளம்பி வா என்று கூற

லலிதா நீ இரு நானே பேசுறேன்

போடா போய் கிளம்பு மா என்று கூறி அனுப்பி வைத்தார் அருணாச்சலம்.

அறைக்கு சென்றவள் பிராடு பிராடு
சண்டை போட்டதும் அப்படா தொல்ல விட்டாசுடான்னு நெனச்சிட்டான் போல இதுவரலயிலும் ஒரு போன்கூட பண்ணி பேசல என்று வாய்விட்டு கூறிக்கொண்டே தயாரகிக்கொண்டு இருக்க

அவள் மனசாட்சி அவன் போன் பண்ணா நீ பேசி இருப்பியா இன்னும் அவனை திட்டிதானே இருப்ப என்று குறை கூற

நான் அப்படிதான் திட்டுவேன் அதுக்கு அவன் அப்படியே இருப்பானா இந்நேரம் தேடிவந்து சமாதானம் படுத்திருக்க வேண்டாம்

ஒ நீ அந்த அளவுக்கு அவனுக்கு பேச டைம் கொடுப்பியா.... அவன் சொன்னதும் நீயா கத்தின அவன் சோன்னத எதுவாச்சும் கேட்டயா போய்ட்டே இருந்த என்று மறுபடியும் குறை கூற

உன்னை கேட்டேனா நீ எதுக்கு வாலின்டிரியா எல்லா விஷயத்துக்கும் ஆஜர் அகுற அப்படி ஒரு மூலைல போய் இரு என்று அவள் மனத்திற்க்குள்ளே மனசாட்சியை திட்டி பேச

எனக்கு எதுக்குபா வம்பு நீயாச்சி அவனாச்சி எப்படியோ போங்க நான் போறேன் என்று மனசாட்சி கூறி மறைய

போ அப்படியே போ தொலை எல்லாத்துக்கும் அவனதான் பிடிச்சிருக்கு அப்படி என்னதான் இருக்கோ அவன்கிட்ட நான் இல்லன்னு வேற எவளையாவது கேர்ள் பிரண்ட் ஆக்கி இருப்பான் அதான் அவன் பேர்லயே இருக்கே கிர்ஷ்ணான்னு சரியான கேடி பைய என்று இவளும் நினைப்பு என்று மனதிற்க்குள்ளே புலம்புகிறேன் என்ற பெயரில் வாய்விட்டு உளறிக்கொட்டிக் கொண்டிருந்தாள்.

காயூ ஏய் காயூ கதவ மூடிக்கிட்டு என்னடி பண்ற

ரெடியாகிட்டு இருக்கேன் அண்ணி

அப்படியா எதோ பேசிட்டு இருந்தியேடி

அது அது பாட்டு கேட்டுட்டே ரெடியாகிட்டு இருந்தேன்

சரி சரி பாட்டு கேட்டது போதும் அத்த மாமா எல்லாம் வைட்பண்றாங்க சீக்கிரம் வெளியே வா

நீங்க போங்க அண்ணி நான் வந்துடுறேன்

சீக்கிரம் டீ.... சரி உன் பேகையாவது கொடு எடுத்துட்டு போறேன்

அண்ணி நீங்க போங்க நான் எல்லாத்தையும் எடுத்துட்டு வறேன் என்றாள்

என்ன அனுப்பரதுலையே குறியா இருக்க என்னமோ பண்ணு சீக்கீரம் வந்து சேரு என்று கூறி கீழே சென்றாள்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

மும்பை

அருணாச்சலம் குடும்பம் கௌஷிக்கின் இல்லத்திற்க்கு மாலை வந்து வந்து சேர்ந்தனர். அனைவரின் நல விசாரிப்பிற்க்கு பின் ஒய்வு நேரத்தில் வைஷுவும் காயூவும் வைஷுவின் அறையில் பேசிக்கொண்டிருந்தனர்.

அக்கா எப்படி இருக்க

நல்லா இருக்கேன் காயூ நீதான் பாக்கவே ஆள் மாறிட்ட என்றாள்.

சிரித்தவள் உடனே சோகமான முகத்துடன் அக்கா உன்னை பாக்கவரலன்னு உனக்கு கோவமாகா சாரிக்கா

சீ மண்டு இதுக்கெல்லாம் எதுக்கு சாரி. பிரியா விடு.... கோவம் இருந்துச்சி ஆனா இப்போ இல்ல

நெஜமா கோவம் இல்லல

இல்ல... இல்ல... ஆனா எதுக்கு நீ வரல அந்த காரணம் தான் இடிக்குது

அது அக்கா என்னன்னா

என்னன்னா சொல்லு

அத்த பத்தி தான் கொஞ்சம்

ஸ்டாப் ஸ்டாப் அது எல்லம் பழைய கதை இன்னும் என்ன அதப்பத்தியே யோசனையா.... நானே மாறிட்டேன்.... சரி போனது போச்சி..... இப்போ பிரியா இருக்கியா நீ தட்ஸ் சால் அந்த டாபிக் இனி பேச வேண்டாம் ஒகே

சரி க்கா

ம் அப்புறம் என்ன பிளான்

எத பத்திக்கு பிளான்

அதான் உன் ஸ்டடிஸ் எல்லாம் முடிஞ்சிட்டுது என்ன பண்ணலாமுன்னு இருக்கன்னு கேட்டேன்

இப்போதைக்கு மேற்க்கொண்டு ms பண்ணலாமுன்னு இருக்கேன் கா

நீ படி வேணாண்ணு சொல்லல பட் அதை கல்யாணம் பண்ணிகிட்டு படிக்கலாமே

இல்லக்கா கல்யாணத்துல இன்டிரஸ்ட் இல்ல அதுவும் இல்லாம படிச்சி முடிக்கிர வரைக்கும் எந்த கமிட்மேண்ட்ஸ் சும் வேணாண்ணு தோனுது கா

என்ன நத்தனார்ங்களா எனக்கு தெரியாம என்ன சீக்கிரேட்டா
பேசுரிங்க என்று வந்து அமர்ந்தாள் நீலா

ம்க்கூம் சீக்கிரேட் என்று முக்தை திருப்பிக்கொண்டாள் காயூ

சீக்கீரேட் எல்லாம் இல்ல அண்ணி காயூ பீயூச்சர் பத்திதான் அவ என்ன பிளான்ல இருக்கான்னு பேசிட்டு இருந்தேன்.

என்ன சொன்னங்க மேடம்

அவ எம் எஸ் பண்ணணுகிற

ஓஓஓஓஓ அப்புறம்

அண்ணி நான் என்ன கதையா சொல்றேன்.....

சே சே இல்ல நாத்தனாரே.... வேற என்ன சொன்னா

கல்யாணம் பட்ணிக்கிட்டு படின்னு சொன்னேன்

ஆஹாஹா... சூப்பர் இதுக்கு என்ன சொன்னா

அதுக்கும் முடியாதுன்னிட்டா

பாபி பாபி என்று கதவை தட்ட

திறந்துதான் இருக்கு கிர்ஷ் உள்ள வா
என்று வைஷு கூற

வந்துட்டோம் ஏன் வந்தன்னு கேட்டா என்ன சொல்றது god எப்படியாவது அவள என்னை பாக்க வைச்சிடு என்று கடவுளை நினைக்க

அவன் வந்ததும் அவனை முகத்தினை காயூ பார்க்க

அப்பா பார்த்துட்டா என்று நிம்மதி பெறுமூச்சி விட்டவன் அப்படியே நின்றான்.

கிர்ஷ் ... கிர்ஷ்

ஆங் சொல்லுங்க பாபி

என்ன சொல்ல கிர்ஷ் நீதான் சொல்லனும் என்ன விஷயம்ன்னு

அது பாபி பையா உங்கள கூப்பிட்டார்

என்னையா கிர்ஷ்

ஆமா பாபி

இருங்க அண்ணி இதோ வந்துறேன். என்றவள். எங்க இருக்கார் கிர்ஷ்.

ஏய் சொல்ற சொல்ற யோசி யோசி பால் பால்கானி இல்ல டெரஸ்ல இருக்காரு

டெரஸ்லயா

ஆமா பாபி

சரி போய்பாத்துட்டு வறேன் என்றவள் கொஞ்ச நேரம் பேசிட்டு இரு கிர்ஷ் என்று கூறி மேலே சென்றாள்.

அக்கா... என்று யோசனையாய் கூறியவன் அக்கா அக்கா தானே நான் உங்கள கூப்பிடனும்

ஆமா கிர்ஷ் அக்காதான் நீங்க எப்படி இருக்கிங்க ஆள் நல்லா வளந்துட்டிங்க போங்க அடையாலமே தெரியல

நல்ல இருக்கேன் கா நீங்க எப்படி இருக்கிங்க ஆனா நீங்க அப்படியே இருக்கிங்க 6வருஷத்துக்கு முன்ன பாத்தமாதிரி இருக்கிங்க சத்தியனுக்கு அம்மான்னு சொன்னா நம்பவே முடியல

உண்மையாவா சொல்ற கிர்ஷ் நான் அப்படியேவா இருக்கேன்

அவன் அப்படி நீலாவை கூறியதும் உள்ளுக்குள் குமைந்தவள் அக்கான்னு கூப்பிட்டு ஐஸ்ஸா வைக்கிர உன்னை என்றவள்

அண்ணி யார் எது சொன்னாலும் நம்பிடுவிங்களா நீங்க கண்ணாடியெல்லாம் பாக்குறது இல்லையா என்று நீலாவை எரிச்சலாய் கேட்க

நீங்க மத்தவங்கமாதிரி குட்டச்சி இல்ல கா சிவா மாச்சானுக்கு ஜோடியா கரட்டா இருக்கிங்க அதான் உங்க அழகு மேல மத்தவங்களுக்கு பொறாமை என்று மேலும் அவள் கோபத்தை கிளறி அவன் தலை மேல் அவனே மண்ணை வாரிக்கொட்டிக் கொண்டான்

அவனை முறைத்தவள் பற்கள் கடிபட அண்ணி நான் போறேன் என்றவள் அந்த இடத்தை விட்டு வெளியேற

அவள் போவதை பார்த்தவன் அவளை தனியா மீட்பண்ணணும் நினைச்சேன் அப்பாடா நான் நினைச்சா மாதிரியே தனியா போரா நாமளும் போவோம் ஹீ ஹீ அக்கா அப்போ நானும் கிளம்பறேன். என்று கிளம்ப இருந்தவனை

எங்க போர கிர்ஷ் கொஞ்சம் இரு வைஷு வந்ததும் போலாம் என்கூட இருந்தவளையும் அனுப்பிட்ட நான் தனியா இருக்கனும்

போச்சிடா அக்கா எனக்கு அர்ஜென்ட்டான ஒரு வேலை இருக்கு என்று அங்கும் இங்கும் பார்த்தவன் அலமாரியில் இருந்த புத்தகத்தில் ஒன்றை எடுத்து அவள் கைகளில் தினித்து இதை படிச்சிகிட்டே இருங்க பாபி வந்திடுவாங்க என்றவன் அங்கிருந்து காற்றாய் வெளியேறினான்.

அங்கிருந்து தோட்டத்திற்க்குள் சென்ற காயூவை பின் தொடர்ந்து சென்ற கிர்ஷ்
காயூ பூஜ்ஜிமா லாலிபப்பூ மை ஸ்வீட் லில்லி நில்லு செல்லகாயூ என்று அழைத்துக்கொண்டே செல்ல அவள் நிற்காமல் சென்றாள்.

ஏய் குட்டச்சி ஏய் ராட்சசி நில்லுடி என்றதும் நின்றவள் என்னடா என்ன வேனும் உனக்கு ஏன்டா என்ன தொறத்திக்கிட்டே வற என்று எரிந்து விழுந்து மறுபடியும் நடக்க

நில்லுடி ஏய் நில்லுடி என்று அவளை அழைக்க அவள் கைபிடித்து நிறுத்தி ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுடி அவள் கையை உதறிக்கொண்டே விடப்போறியா இல்லையா நீ விடல நான் அறஞ்சிடுவேண்டா என்று எச்சரிச்சரிக்கை செய்தும் விடாமல் பிடித்திருக்க

மறுகையால் அவனை அடிக்க கை ஓங்க அடுத்த கையையும் பிடித்தவன் அவள் கைகளை விடுத்து அவள் இதழ்களை சிறை செய்து பேச்சை நிறுத்தினான்

இந்த திடிர் அதிரடியில் அதிர்ச்சியானவள் அவன் செயலில் முதலில் திமிரியவள் அவன் அழுத்தத்தில் செயலற்று போய் இருக்க அவனின் இத்தனை நாள் பிரிவிற்க்கு அவளிடம் விடை தேடி வந்தவன் அவளுக்கு விடை கொடுத்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேர இதழ் அணைப்பிற்க்கு பிறகு தான் செய்த செயலின் வீரியத்தை உணர்ந்தவன். அவளிடம் இருந்து விலகி சாரி சாரி காயூ என்று அவளின் தோள் தொட

தொடாத

காயூ என்று அவன் அழைக்க

என் பெயரை கூட சொல்லாத மரியாதை கெட்டுடும் என் பர்மிஷன் இல்லாம எப்படி நீ எனக்கு கிஸ் பண்ண போட எருமை

சே இதுதான் உன் கோவமா காயூ என்று சிரித்து அவளிடம் செல்ல

நில்லு கிட்ட வராத என்கிட்ட பேசாத இப்படி நீ நடந்துக்கவனு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல

இப்பயாச்சும் சொல்றத கேளுடி

இன்னும் கேக்க என்னடா இருக்கு அதான் எல்லாத்தையும் போட்டு உடைச்சி நாசம் பண்ணிட்டியே உன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் விட்டுபோச்சி பொண்ணுன்னா நீ என்ன வேனலும் பண்ணலன்னு நினைச்சியா என் அவனிடம் காட்டமாக பேசியவள் அங்கிருந்து ஒடிவிட்டாள் காயூ.

மறுநாள் காலைமுதலே இவரும் ஒருவரை ஒருவர் எக்காரணத்தைக் கொண்டும் பார்ப்பதை தவிர்த்துக்கொண்டனர்.
வண்ண தோரணங்கள் பூக்களின் சங்கமமாய் விழாக்கோலம் கொண்டது ஹோட்டல் v J ஐந்து நட்சத்திர உணவகம் கட்டத்தில் முழுவதும் கலைநய பொரூட்களின் அலங்காரத்தின் மூலம் செல்வசெழிப்பை கொண்டிருந்தது. இந்த காலத்திற்க்கு ஏற்ப நவினமாகவும் அதே சமயம் ரம்யமாகவும் செயற்க்கை நீரூற்றும் கொண்டு அந்த இடமே பூலோக சொர்கம் போல் காட்சியளித்தது இனிதே விழாவும் முடிந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாய் இருக்க இருவர் முகங்களில் மட்டும் பிளாஸ்டிக் புன்னகையை ஒட்டிக்கொண்டிருந்தனர்.

அனைவரும் இரவு நேர உணவை ஒன்றாக அமர்ந்து சாப்பிட துவங்கி இருந்தனர். எவ்வளவு மறுத்தும் காயூவை விடாப்பிடியாக அழைத்து வந்து அமர வைத்திருந்தாள் வைஷு அவள் எதிர் புறத்தில் அமர்ந்து இருந்தான் கிர்ஷ் எப்படி எனக்கும் மட்டும் எலலாம் நடக்குதோ ஆண்டவா இதுக்கும் நான்தான் காரணம்ன்னு சொல்லுவா எப்படியாவது என்னை மட்டும் காப்பாத்திக் கொடுத்திடு ஆண்டவா என்று மனதிற்க்குள் வேண்டினான் கிர்ஷ்.

என்னப்பா அருண் குட்டிபொண்ணு என்ன சொல்றா

எதுக்கு விஜய்

அடமடையா கல்யாணத்துக்கு டா என்றதும் திடும் என்று விஜயின் முகம் பார்த்தாள் காயூ

இந்த வருசம் முடிச்சிடனும் டா இனிமேதான் பார்க்க ஆரம்பிக்கனும் என்று மகளின் முக மாற்றத்தை பார்த்துக்கொண்டே கூறினார் அருணாச்சலம்.

அப்படியா என் பிரண்டோட பையன் இருக்காண்டோ ரொம்ப நல்ல பையன் அவனும் டாக்டர் தான் சொந்தமா ஆஸ்பிட்டல் வைச்சிருக்கான். நம்ம குட்டிபொண்ணுக்கு பொறுத்தமா இருப்பான் நீங்க ரெண்டுபேரும் என்ன சொல்றிங்க லலிதா என்றார்.

பையன் நல்ல இடமா இருந்தா பார்க்கலாம் அண்ணா அவர் முடிவுதான் என் முடிவும் இல்லங்க என்று கூறிட மேலும் கலவரமனது காயூவின் முகம்

ம் என்று தலையை ஆட்டினார் அருணாச்சலம்

சுனோ ஜீ எல்லோரும் இங்கதானே இருக்காங்க நாளைக்கே பார்க்க வரசொல்லுங்க பிடிச்சிருந்த கையோட பேசிடலாம் இலலையா என்று மாதுரியும் தன் பங்குக்கு பீதியை கிளப்பி விட

ம் என்று தலை அசைத்தார்

சாப்பிட்டுக் கொண்டிருந்த கிர்ஷ்க்கும் காயூவிற்க்கும் சேர்ந்தே புறை ஏறியது கிர்ஷ் பக்கத்தில் அமர்ந்திருந்த கௌஷிக் கிர்ஷின் தலையை தட்ட காயூவிற்க்கு வைஷு தலையை தட்டி விட்டாள்.
அனைவரும் அவர்களையே பார்க்க திரு திருவென இருவரும் விழித்தனர்.

என்னடா இது அதிசியாம இருக்கு ரெண்டுபேருக்கும் ஒன்னா புறை ஏறுது என்று மாதுரி திகைத்தது போல் காட்டிக்கொள்ள

அது அது காரம் அத்த காரம் என்று காயூ கூற

இவனும் அதையே கூறி தண்ணீரை குடித்தான்

அப்படி ஒன்னும் தெரியலையே ஏம்மா காரமாவா இருக்கு என்று லலிதா நீலாவை கேட்க

எனக்கு இல்ல அத்த ஒரு வேலை இவங்க இரண்டுபேருக்கு மட்டும் காரம் தெரியுதோ என்னவோ என்று நமட்டு சிரிப்புடன் நீலா கூற

நீ என்ன சொல்ற காயூ பையன வரசொல்லலாமா என்று கௌஷிக் கேட்க

அருணாச்சலத்தை பாவமாக பார்த்த காயூவை என்ன சொல்ற காயூ சொல்லு பாக்கலாமா என்று மறுபடியும் ஊக்கினான் கௌஷிக்.

என்ன மாப்பள அவள கேக்குறிங்க நாம சொல்றதுதான் கேக்கபோற என்ற லலிதா கேட்க

எதுக்கும் ஒரு வார்த்தை கேக்குறது நல்லதுல்ல அத்த அவ படிச்ச பொண்ணு இப்ப இருக்க பசங்களுக்கு நிறைய ஆசை கனவு இருக்கும் அதை நாம தெரிஞ்சி பண்றதுல தப்பில அத்த அதான் காயூவோட சம்மதம் கேக்குறேன் சொல்லு காயூ என்ன அந்த பையன பாக்கலாமா

மாமா அது எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிற எண்ணம் இல்ல

ஏன் மா ஏன் அப்படிசொல்ற

நான் மேல எம்எஸ் படிக்கபோறேன்

அதை கல்யாணம் பண்ணிக்கிட்டு படி

இல்ல மாமா எனக்கு கல்யாணம் லவ் இதுல எல்லாம் இன்டிரஸ்ட் இல்ல என்று கூறி கிர்ஷை முறைத்தவள் உடனே பார்வையை திருப்பிக்கொண்டாள்.

காயூ என்ன எடுக்க சொல்லவே தடங்கள் பண்ணிட்டு வாயமூடு என்று லலீதா அதட்ட

அத்த அவளோட விருப்பத்த சொல்றா இருங்க அப்படியேவா விட்டுட போறோம்.

இப்படியேதான் சொல்லிட்டு இருந்தான் கிர்ஷ் நித்யா போட்டோ காட்டினவுடனே அப்படியே ஆளே மாறிடல அது போலவே நேர்ல அந்த பையன பாத்தா காயுவோட மனசும் மாறும். என்று கூறி கிர்ஷிற்க்கு பெரிய குண்டை தூக்கி போட கிர்ஷை குனிந்துக்கொண்டே கனல் பார்வை பார்த்தாள் காயூ

டேய் பையா எப்போட போட்டோ காட்டின அதுசரி யாருடா அந்த நித்யா நானே உன் லவ்வ சேர்த்து வைக்க நினைச்சி உன்னால என் வல்வ தொலைச்சிடுவேனோன்னு பயமா இருக்கு என்னடா என் வாழ்க்கைல இப்படி மாறி மாறி குடும்பமே விளையாடுறிங்க என்று பாரிதாபமாய் பார்த்துக்கொண்டிருந்தான் கிர்ஷ.

பொண்ணு எந்த ஊருபா என்று அருணாச்சலமும் லலிதாவும் கேட்க

ரிலேஷன் தான் அத்த என்று கூறி அவங்களுக்கும் கிர்ஷ ரொம்ப பிடிச்சிடுச்சி அடுத்த வர நல்ல நாள்ளையே நிச்சயம் வைச்சிக்கலாமான்னு கேக்குறாங்க சரின்னு சொல்லி இருக்கோம் மாமா என்றதும் காயூ தண்ணீர் ஜக்கை எடுக்கிறேன் என்று கிர்ஷின் எதிர்புறம் இருந்த ஜக்கை எக்கி எடுக்க அது அவனின் தட்டில் கொட்டி சாப்பாடு மொத்தம் தண்ணீர் ஆனது

சாரி சாரி என்று அவளும் பதறியது போல் எழுந்து மன்னிப்பு கேட்க

அமைதியாக தலையை மட்டும் ஆட்டினான் கிர்ஷ்

என்னடா இப்படி பண்ணிட்ட என்று அருணாச்சலம் கேட்க

பாத்து எடுக்கமாட்டியா டீ புள்ள தட்டெல்லாம் தண்ணீர் கொட்டிட்டா என்று லலிதா திட்டினார்

அம்மா திட்டாதிங்கமா அவ என்ன வேனுன்னா செய்த இந்த கிர்ஷ் வேற வைச்சிக்க என்று பூஜா தட்டை வைத்தாள்.

நல்லா பண்றிங்க நல்ல குடும்பம் உங்ககிட்ட போய் ஹெல்ப் கேட்டேன் பாருங்க என்ன எதால அடிக்கரதுன்னே தெரியல இன்னும் என்ன என்ன நடக்க இருக்கோ என் உயிருக்கு.உத்தரவாதம் இல்ல தெரிஞ்சிடுச்சி

பூஜாவை பரிதாபமாய் பார்த்த கிர்ஷின் பார்வையில் பூஜா சிரித்து விட இல்ல பாபி போதும் வாயிறு வேற சரியில்ல என்று எழுந்து சென்றான்.

உடனே செல்லாமல் சிறிது நேரம் கழித்து காயூவும் எழுந்துகொள்ள என்னடா ஏன் எழுந்துக்குற என்று மாதுரிவிசாரிக்க

போதும் அத்த சாப்பிட்டேன் என்று எழுந்து விட்டாள்.

அங்கும் இங்கும் தேடிக்கொண்டே வந்தவள் மேலே பால்கனியில் நின்பதை பார்த்து அவனிடம் சென்றாள். என்ன பொண்ணெல்லாம் பாத்து பிக்ஸ் ஆகி கனவுல டூயட் பாடுறாப்போல என்று நக்கலாய் கேட்டாள்.

நீ நினைக்கிறமாதிரி எல்லாம் இல்ல காயூ என்று இவனும் பேச

என்ன நான் நினைக்கிரா மாதிரி இல்ல அப்போ ஸ்ரெய்ட்டா கல்யாண கனவே காணுரியோ!!!!!!

திடிரென்று கையில் இருந்த கத்தியை எடுத்து அவன் முன்னே ஆட்டியவளை அதிர்வாக பார்த்தான்

ஹலோ என்ன ஷாக்கா

ஏய் என்ன பண்ற கத்திடி வெட்டிக்க போகுது ஒழுங்க புடிடீ

ஆப்ரேஷன் பண்ண தெரிஞ்சவளுக்கு கத்தி புடிக்க தெரியாதாடா பண்ணாட

நான் கிடைக்கலன்னு தப்பன முடிவு எடுத்துடதடி

என்ன சொன்ன நான் குத்திக்க போறேன்னா உன்ன குத்த தான்டா எடுத்துட்டு வந்தேன்....

என்றதும் அவன் அதிர்ச்சியாய் பார்க்க

மரியாதைய போய் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லன்னு சொல்லு

எல்லாம் பேசி முடிச்சாச்சி அந்த பொண்ணு பாவம்டி

ஒ அந்த பொண்ணுக்கு நீ இல்லனா வேற பையனே கிடைக்க மாட்டானா போய் சொல்ற இல்ல ஒரே ஏத்தா ஏத்திடுவேன்.

என்னடி ரவுடி மாதிரி பேசுற அவ மனசுல ஆசை வளத்தாச்சி இப்போ போய் வேனான்னு சொன்னா மனசொடஞ்சி போய்ட்ட

ஓ அவ்வளவு நியாயமனவனாடா நீ நான் அப்பவே சொல்லி இருக்கேன் என்னை விட்டுட்டு இன்னொருத்தி கழுத்துல தாலி கட்டுன சங்க அறுத்துடுவேன்னு என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தி கேக்குதா உனக்கு

மவனே ஒழுங்கு மரியாதையா போய் இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேணா ஒரு 10 வருஷம் கழிச்சி பண்ணிக்கிறேன் அப்படின்னு போய் சொல்லு

உனக்கே இது அனியாயமா தெரியலையா 10 வருஷமெல்லாம் ஒவர் டீ வேனுன்னா ஒரு 6மாசம் கழிச்சி பண்ணிக்கிறேன்னு சொல்லவா

என்னடா கிண்டலா

கிண்டல்லாம் இல்லடி அதான் என்னை வேனானுட்டியே திரும்பி வந்து உன்கிட்ட சாரி கேட்டாலும் ஏத்துக்க மாட்டுற நீ புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு அடம்பிடிசச்சிக்கிட்டு என்னை நீதான் வேனானுன்னு சொன்ன அதுவும் இல்லாமா பொண்ணு ரொம்ப அழகா எனக்கே இக்கூவலா இருந்தா அதான் உடனே ஒகே சொல்லிட்டேன் என்று அவனும் குஷியாய் பேச

என்ன தைரியம் இருந்த இந்த எண்ணம் உன் மனசுல இருந்திருக்கும் இத்தினை நாளா அந்த நினைப்புல தான் என் கூட பழகினியா ஏதோ கோவத்துல வேனான்னு சொன்னா உடனே வேற பொண்ணை தேடிகிட்டு போய்டுவியா உன்னை உன்னை என்று அவனைஅருகில் வர

வைட் வைட் கொஞ்சம் பொறு சரி உனக்கு என்ன வேனும் நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கக்கூடாது அவ்வளவுதானே ஓகே பண்ணல ஆனா அதுக்கு பதிலா நீ ஒன்னு பண்ணனுமே என்று அவளிடம் கூற

என்ன என்பது போல் அவனை பார்க்க

என்ன பேபி என்னன்னு தானே யோசிக்கிர அவளுக்கு பதிலா நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா நான் அந்த பொண்ண வேண்டான்னு சொல்லிடுறேன்.

அவன் கூற்றில் வித்தியாசமாய் அவனை பார்க்க என்ன ஒகே வா என்னை கல்யாணம் பண்ணிக்கிரியா செல்லம் என்று அவள் அருகில் வர

அப்போ அந்த பொண்ணு

உனக்கு ஒகே வான்னு சொல்லு மத்தத நான் பாத்துக்குறேன் என்று அவன் தைரியம் சொல்ல

ஆனா உங்க வீட்டுலயும் என் வீட்டுலயும் என்ன சொல்றது எங்க வீட்டுக்கு தெரிஞ்ச அவ்வளவுதான் சிவா கொண்ணே போட்டுவான் அம்மு காளியா மாறிடுவாங்க இவங்களுக்கு எல்லாம் எங்க அண்ணிதான் பூசாரிமாதிரி எல்லாம் எடுத்து எடுத்து கொடுப்பாங்க என்று அவள் அனைவரையும் வரிசைபடுத்த

அப்போ எங்க வீட்டுல என்ன சொல்லுவாங்கன்னு நினைக்கிர

எப்படியும் உங்க வீட்டுல இதுக்கு ஒத்துக்குவாங்கன்னு எனக்கு சத்தியமா தோனல அந்த பொண்ணா வேண்டான்னு சொல்லி என்னை ஒகே சொல்லுவாங்களா சேன்ஸே இல்ல எருமை எருமை எல்லாம் உன்னாலதான் உனக்கு பொண்ணு பாக்கராங்கன்னு தெரிஞ்சவுடனே நம்ம லவ்வ சொல்ல வேண்டியதுதானே என்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கேட்க

ம் சொல்லி இருக்கலாம் தான் ஆனா நீதான் கோவமா இருந்தியே என்று இவனும் அவளை அனைத்தபடி கூற

என்ன டா இது என்று குரல் கேட்க இருவரும் அதிர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் விட்டு விலகி நின்ற பார்க்கையில் இருவரது குடும்ப அங்கத்தினரும் அங்கே இவர்கள் எதிரில் இருந்தனர்.

அப்பா என்று ஒரு சேர இருவரும் அதிர்ச்சியாய் இருக்க

டேய் டேய்.எக்ஸ்பிரஷன மாத்தி தொலை டா.திருட்டு வேலை செய்துட்டு திருட்டு முழியா முழிக்கிற அடி படுவா அந்த பொண்ணுக்குதான் உண்மை தெரியாது எங்கள பாத்துதும் ஷாக் ஆகுறா உனக்கு என்னடா ஷாக் வேண்டி கிடக்கு என்று அவனை வார

இவங்க என்ன சொல்றாங்க யாரும் என்னை திட்டல எல்லோரோட முகத்துலையும் சந்தோஷம் இருக்கு சம்திங் ராங் இந்த பிராடுதான்.ஏதோ வேலை பண்ணிருக்கான் என்று உணர்ந்து கொண்டவள். அவனை பார்க்க

என்ன எதுவும் புரியலையா நான் சொல்றேன் நான் உன்கிட்ட நேத்து பேசும்போது கௌஷிக் பையா பாத்துட்டாரு அவரு என்ன ஏதுன்னு விசாரிக்கும்போது எல்லாத்தையும் சொல்லிடேன். அவர் அண்ணிக்கிட்ட பேசி பாபி உங்க வீட்டுலயும் பையா எங்க வீட்டுலயும் பேசினாங்க ஏற்கனவே கல்யாணத்துக்கு சம்மதிச்சாச்சி உன்னோட சம்மதத்துக்குதான் இவ்வளவு வேலை உன் கோவத்தை கிளரி விட்ட நீயே வழிக்கு வந்துடுவன்னு நான்தான் ஐடியா கொடுத்தேன். ஆனா இப்படி உன் கோவத்தை கிளரி விடுவாங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்ல என் பேச்சி திறமை இல்லன்னா இந்தேரம் கத்தி என்னை பதம் பாத்திருக்கும் நல்ல வேலை சீக்கிரம் கல்யாணத்துக்கு சரி சொல்லிட்ட அப்பா மாமா சீக்கிரமா கல்யாணத்துக்கு தேதிய பாருக்க இவ மனசு மாறிடரத்துக்குள்ள என்று அவன் கூற

மாமா ஒரே ஒரு முறை என்னை மன்னிச்சிடுங்க என்றவள் அவன் முடியை பிடித்து ஆட்டி முதுகில் நாலு அடி அடித்தவளை

நீங்க உங்க வேலைய முடிச்சிட்டிங்க மேடம் என் வேலைய பாக்கவா நான் உங்க அண்ணணுக்கும் அம்மாவுக்கும் பூசாரியா பூசாரியா என்று அவளை துரத்தி பிடித்து அடிக்க அத்த நானு அத்த நானு என்று வானதியும் காயூவை அடிக்க பின் தொடர்ந்தாள்.

அடுத்து வந்த ஒரு நல்ல முகூர்த்த நாளில் திருமணம் செய்து இருவரும் அவர்களது டாம் அனட் ஜெர்ரி பயணத்தை தொடர்ந்தனர்.

சுபம்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro