காதல் 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

❤️அங்கு ரித்விக்கின் புது படத்திற்கான பர்ஷ்ட் லுக்கை வெளியிட கதாநாயகன்,நாயகியை வைத்து போட்டோ ஷூட் நடந்து கொண்டிருந்தது....

நாயகன் நாயகியை கட்டியணைப்பது போன்றும்,இருவரும் காதலுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது போன்றும் பலவாறு புகைப்படங்கள் எடுத்தனர்...

அதில் கவனம் செலுத்தியபடி இருந்த ரித்விக்,அவர்களை பார்த்தபடி இருந்த மாதவியின் முகம் போகும் போக்கை பார்க்க மறந்தான்.....

அப்பொழுது தன் தோழிகள் அவளை மொபைலில் அழைக்க,யாரையும் தொந்தரவு செய்யாத வண்ணம் ஓரமாக சென்று பேசிக் கொண்டிருந்தால்...

நாயகிக்கான அடுத்த உடை தயாராக உள்ளதா என ரித்விக் அவனின் உதவியாளர்களிடம் கேட்க,அவர்கள் அது மாதவியிடம் உள்ளதாக கூற கோபமாக அவனது கண்கள் அவளை தேடியது...

அவள் ஃபோனில் பேசி கொண்டிருப்பதை பார்த்தவன்,கோபம் தலைக்கேற அவளிடம் நெருங்கினான்....

ஆமாடி!!!பார்க்கவே கேவலமா இருக்கு,இவர்கிட்ட எனக்கு பிடிச்சதே மத்த இயக்குநர் மாறி கேர்ள்ஸ எந்த சிச்சுவேஷன்லயும் அறைகுறை டிரெஸ்ல காட்ட மாட்டாரு!!ஆனா இப்போ ரொமன்ஸ்கும் வல்கெரிட்டிக்கும் வித்தியாசம் தெரியாம இருக்காரு....

அவள் பேசிய அனைத்தையும் கேட்டவன் திரும்பி ஃபோட்டோ சூட் நடக்கும் இடத்தை பார்க்க,அங்க நாயகி இடை முழுவதும் தெரியும்படி ஆடை உடுத்திருக்க போஸ் கொடுப்பதற்காக நாயகன் அவள் இடையை பற்றி இருந்தான்...

அதில் மாதவி சுட்டிக் காட்டிய வல்கெரிட்டி அப்பட்டமாக தெரிய...இதை எப்படி தான் கவனிக்காமல் இருந்தோம் என்று எண்ணியபடி அங்கு சென்றவன்...

சேஜ் யுவர் காஸ்ட்யூம் என்றவனை இதற்கு என்ன குறை என்பது போல் அவர்கள் பார்க்க!!நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என்ற பார்வையோடு அவர்களை பார்த்தான்...

சிறிது நேரத்தில் நாயகி அவன் செலக்ட் செய்த அனார்கலி சூட் போட்டபடி முன்பு எடுத்த அதே படங்களை எடுக்க,அதில் இப்பொழுது ரொமன்ஸ் மட்டுமே தெரிந்ததை பார்த்தவனுக்கு அப்பொழுதே திருப்தியாக இருந்தது....

இவை அனைத்தையும் மாதவி குழப்பமாக பார்த்தபடி இருந்தால்...கடவுளே இப்பவாது இவருக்கு இது புரிஞ்சிதே என்று எண்ணியபடி தன் வேலைகளில் கவனம் செலுத்தினான்....

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

அடுத்த நாள் தன் தோழிகள் உதவியுடன் தான் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து தன்னை பெண் பார்க்க வர இருந்த நிலையில் ஒரு மணி நேரமாக தன் அறையை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தால் சாதனா....

ஐயோ!!அவன் ஃபோட்டோவ எங்கதான் வெச்சனு தெரிலயே😰எருமைங்க சொன்னத வெச்சு அம்மா கிட்ட அவனை பிடிச்சிருக்குனு சொல்லிட்ட...பட் இப்போ அவன் ஃபோட்டோவ பார்க்க தோனுதே என புலம்பியபடி மீண்டும் தேட ஆரம்பித்தாள்...

அவள் தூக்கி போட்டதில் கோபம் கொண்டவனாய் ஒரு கோப்புக்குள் அவன் ஒளிந்திருப்பவனை அறியாதவளாய்!!!

சில நாட்களுக்கு முன்பு....

இந்த முறை இவனுங்க இரண்டு பேருல ஒருத்தன தேர்ந்தெடுக்கலனா அம்மா சாமி ஆடிடுவாங்கடி என்றவளை பார்த்து மாதவியும் அனுவும் சிரிக்க,சாதனா அவர்களை முறைத்தாள்

தன் கைப்பேசியில் இருந்த அவர்களின் டீடியல்ஸை தன் தோழிகளிடம் காண்பித்தால்

அதில் ஒருவன் ஐடி நிறுவனத்தில் வேலை செய்ய,அந்த நிமிடத்திலையே அவனை ரிஜக்ட் செய்தனர்....எப்பொழுதும் வேலை, டார்கேட் என இயந்திரமாய் சுழல்பவன் வேண்டாம் என்று எண்ணியவர்களாய்...

அடுத்த வரன்...எம்.சி.ஏ முடித்து,நடன கலையில் ஆர்வம் கொண்டு தேர்ந்தவனாய் பல்வேறு நடனங்கள் பயில்விக்கும் நடன பள்ளி நடத்தி வந்தான்...

அதை படித்தவர்களுக்கு ஏனோ அவனை பிடித்தது....எத்தனை பேர்தான் தன் பேஷனை தேடி சென்றிருக்கிறார்கள்??அதில் அவன் அவர்களை கவர தெரிந்தும் தெரியாமலும் சாதனாவிற்காக அந்த ஜீவனை தேர்ந்தெடுத்தனர்....

💕💕💕

அவன் புகைப்படத்தை தேடி தேடி களைத்தவளாய் சாதனா தன் படுக்கையில் சென்று படுத்தால்..

உன்னை நாளைக்கு நேர்லதா பாக்கனும்னு எழுதி இருக்கு போல என்று புலம்பியபடி ஜீவன் எப்படி இருப்பான் என்று எண்ணியவளாய் உறங்கி போனால் சாதனா....

️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

வரும் ஞாயிறு வருணை காண்பதாக இருக்க அதை தடுக்க எத்தனையோ வழிகளை யோசித்தால்...

எல்லா வழிகளும் ஒன்று குழந்தைதனமாக அல்லது நம்ப முடியாத அளவிலும் இருந்தது

கடைசியாக அவனை பார்க்க செல்லும்படி தன் தோழிகள் தன்னை வற்புறுத்தவார்கள் என்று உணர்ந்தவளாய் அன்று அவர்களுக்கே தெரியாமல் எங்காவது சென்று நேரம் கழித்து வரலாம் என்று முடிவெடித்தாள்

அன்று அவளுக்கு வார இறுதி விடுமுறையாக அமைய,அவள் தோழிகளிடம் பேசியது போல் தன் ஸ்கூட்டியில் சாதனாவின் வீட்டிற்கு சென்றால்...

ஒரு தெருவில் அவள் திரும்பும் போது எதிர் புறத்தில் இருந்து ஒரு வண்டி வேகமாக வர...இருவரும் சடர்ன் ப்ரேக் போட்டு நிறுத்தினர்...

ஹலோ மிஸ்டர்!!டர்ன் பண்ணும் போது ஹார்ன் கூட அடிக்க மாட்டீங்களா??

அவன் ஏதும் பேசாமல் ஹெல்மெட்டை கழட்டி...நீங்க கூட ஹார்ன் அடிச்சுட்டு டர்ன் பண்ணிருக்கலாமே மிஸ் அனுஷியா...என்று குறும்பாக சொல்ல

ஏதும் சொல்லாமல் அவனையே அதிர்ச்சியாக பார்த்தபடி இருந்தால் அனு!!😉

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro