காதல் 37

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕காலை உணவை உண்டு முடித்தபின்  சாதனாவிடம் தன் சிறு வயது முதல் எடுத்த புகைப்படங்களை காண்பித்துக் கொண்டிருந்தான் ஜீவன்...

ஒவ்வொறு படத்திற்கும் அவனை கேலி செய்தவளை அவன் சில இடங்களில் முறைத்தும் பல இடங்களில் வெட்கத்தை மறைக்க மறுபுறம் திருப்பியும் சமாளித்த வண்ணம் இருந்தான்...

ஒரு புகைப்படத்தில் அவனின் மாமன் மகன் சட்டை இல்லாமல் தன்னிடம் இருக்கும் இரண்டு பற்களை காண்பித்தபடி இருக்க,அவனது பின்புறம் சிறு இடைவெளியில் சிறு வயது ஜீவன் தன் முன் இருக்கும் கண்ணாடியில் பார்த்தவாறு பௌடர் அடித்துக் கொண்டிருந்தான்...

அதை பார்த்தவள் தன் முகதருகே அதை உயர்த்தி "ஹவ் க்யூட்!!" என்றாள்...

அந்த படத்தில் அவனின் மாமன் மகன்  அழகாக இருப்பதாக பலர் சொல்லிக் கேட்டவன் இப்பொழுது சாதனாவும் அதையே சொல்ல வேகமாக அந்த ஆல்பத்தை வாங்கி மூடினான்...

அதை சிறிதும் எதிர்பார்க்காதவள் குழப்பமாக "என்ன ஆச்சி??" எனக் கேட்க....ஜீவன் முகத்தை மறுபுறம் திருப்பி பற்களை கடித்தபடி அவனுக்கு காம்பிளிமட் கொடுத்தது போதும் என்றான்...

எவனுக்கு??ஓஓ தான் சொல்லியது அவன் மாமன் மகனுக்கு என அவன் எடுத்துக் கொண்டது அவளுக்கு விளக்க அவனை வெறுப்பேற்றும் வண்ணம்....ஹீ இஸ் சச் எ லவ்லி கிட் என்றாள்.அவன் அதற்கும் அவளை முறைக்க...

பட் அந்த மிரர் கிட்ட இருக்க பேபியதா தூக்கி அந்த சப்பி(chubby) ச்சீக்ஸ்ல கிஸ் பண்ணனும் போல இருக்கு என்றதை கேட்வனுக்கு மூளையில் மணி அடிக்க வேகமாக அந்த ஆல்பத்தை திறந்து பார்த்தான்....

அதில் தன்னை பார்த்தவனுக்கு அவள் கூறிய வார்த்தைகள் புத்துணர்ச்சி தர....அவளிடம் நெருங்கி தன் கன்னத்தை காண்பித்தான்😍💋

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

அந்த வாரம் முழுக்க ஏதேதோ சொதப்பல் காரணங்கள் சொல்லி மாதவியை தினமும் சந்தித்த ரித்விக் இன்றும் அவளை அவ்வாறே அழைத்திருந்தான்....

இவை அனைத்தும் மாதவிக்கு புரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள அவள் மனம் தயாராக இல்லை.....அவரு பெரிய டைரக்டர்,நான் ஜஸ்ட் ஆட்னரி கேர்ள்!! என்பதே அவளது எண்ணம்.

சிறிது நேரம் அமைதிக்கு பின்னர் அவளே சார்!!!எனிதிங் இப்பார்டன்ட்?என வினவ

ஹா தட்??ம்ம் நெக்ஸ்ட் வீக் நம்ம மூவி நெக்ஸ்ட் சூட்டிங் ஷெட்யூல் இருக்கு, நம்ம அந்த சாங்க்ஸ் சூட் பண்ண டெல்லி போகனும்...சோ பிரப்பர்டா இருங்க!என்றான்

இதை ஃபோன்லையே சொல்லிருக்கலாமேடா!!!என மனதிற்குள் அவனை திட்டியவள்.....அவனுக்கு பதிலாக தலையசைத்து வெளியேறினாள்....

ம்ச்ச்!!இன்னைக்கு அவகிட்ட எதுவும் சொல்ல முடியலையே எனத் தன்னை தானே நொந்துக் கொண்டவன்....ஏன்டி இப்படி என்கிட்ட மட்டும் வார்த்தைய எண்ணி எண்ணி பேசுற??என்றான் அவள் செல்வதை பார்த்தவாறு....

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

தன் தாய்தந்தை நண்பர்களுடன் காசிக்கு புறப்பட்டவுடன் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்கெட்டுக்கு சென்ற வருண் அங்கு அனுவிற்கு பிடித்த பொருட்கள் என கண்களில்படும் அனைத்தையும் வாங்கி குவித்தான்....

இப்பொழுதும் அனு தன் வீட்டிற்கு வந்து தங்கப்போவதை அவனால் நம்ப முடியவில்லை....அவள் தன்னை இந்த அளவிற்கு நம்புகிறாள் என்பது அவனுக்கே வியப்பாக இருந்தது...

தன் பெற்றோரிடம் அலுவலக வேலையாக பெங்கலூர் செல்ல வேண்டியுள்ளதாகவும் திரும்ப வர இரண்டு நாட்கள் ஆகும் எனக் கூறி அனுமதி வாங்கிய பின்பும் அனுவிற்கு ஏனோ மனதிற்குள் இது சரி எனத் தோன்றவில்லை....

அவசர திருமணம்!!!இப்பொழுது இது எனப் பல விஷயத்தில் தன் பெற்றோரின் நம்பிக்கை உடைத்து ஏமாற்றுவதுப் போன்ற குற்றணர்வு இருந்தது...

தன் தோழிகளிடமும் சொல்ல முடியாத சூழ்நிலை என எல்லாம் சேர்ந்து அவளுக்கு தலைச் சுற்றுவது போல் இருந்தது....என்ன ஆச்சு அனு??ஏதும் உடம்பு முடியலையா??என தன் தலைக் கோதும் தாயை கட்டியணைத்து அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு

அவர்களின் தோளின் சாய்ந்துக் கொண்டவள் "கோன்ன மிஸ் யூ மா" என்றாள்..

பர்சேஸ் முடித்து வீடு திரும்பிய வருண்....தன் வீடு அவளுக்கு பிடிக்க வேண்டும் என ஏற்கெனவே அழகாக பராமரிக்கப்பட்டிருந்த வீட்டை மீண்டும் ஒழுங்குப்படுத்தினான்...

ஏதோ இன்று மட்டும் தன்னை சோதிப்பதற்கே நேரம் மிகவும் பொறுமையாக நகர்வதுப் போல் இருந்தது அவனுக்கு....

அவள் வரும் நேரம் நெருங்க.... மணம் வீசும் கேட்டில்களை வீட்டை சுற்றிப் பொருத்தினான்....

அப்பொழுது அனுவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வர....அவள் பேசுவதற்கு முன் "எங்க இருக்க பேபி😍💓" என அவன் கேட்க...

சிறிது தயக்கத்துடன் "ஐம் சாரி வருண்,என்னால வர முடியல" என்றாள் .....

அழைப்பை துண்டித்தவன்..மேஜையில் இருந்த கேட்டிள்களை வேகமாக கீழே தள்ளினான்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro