காதல் 38

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

💕💕அனு வரும் நேரம் நெருங்க.... மணம் வீசும் கேட்டில்களை வீட்டை சுற்றிப் பொருத்தினான்....

அப்பொழுது அனுவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வர....அவள் பேசுவதற்கு முன் "எங்க இருக்க பேபி😍💓" என அவன் கேட்க...

சிறிது தயக்கத்துடன் "ஐம் சாரி வருண்,என்னால வர முடியல" என்றாள் .....

அழைப்பை துண்டித்தவன்..மேஜையில் இருந்த கேட்டிள்களை வேகமாக கீழே தள்ளினான்...

கையில் கிடைத்த ஒவ்வொறு பொருளையும் தூக்கி வீசியவன்,டைனிங் டேபிளில் உள்ள கண்ணாடி டம்பளர்களை தூக்கி வீச கையில் எடுத்த நேரம் காலிங் பெல் ஒலிக்க,கதவை திறந்தவன் அப்படியே உறைந்து போனான்...

தன்னுடைய பிரம்மை எல்லை மீறி எங்கும் தெரிவதாய் உணர்ந்தவன்....தலையை சிலுப்பி கண்களை இறுக்க மூடி திறந்தான்...

அப்பொழுதும் அவள் அதே இடத்தில் சிறு புன்னகையுடன் இருக்க...அனு??என குரல் நடுங்க கேட்டவனை விந்தையாக பார்த்தவள் "உள்ளே கூப்பிட மாட்டீங்களோ"?? என வினவ

ஐம் சாரி!!கெட் இன் பேபி😍 என்றான்

உள்ளே சென்றவள் வீட்டின் நிலையை கண்டு குழம்பினாள்...வீடெங்கும் பொருட்கள் சிதறி கிடக்க,தரையில் பல இடங்களில் கண்ணாடி துண்டுகள் உடைந்து இருந்தது....

அதற்கான பதில் வேண்டி அனு அவனை கேள்வியாய் பார்க்க....குறும்பு செய்து தாயிடம் மாட்டிக் கொண்ட குழந்தைப் போல் தலை முடியை கோதியவாறு தலைக் குனிந்திருந்தான் வருண்...

அதைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வர,அதை மறைத்து கடுமையான குரலில் " இதெல்லாம் என்னனு கேட்ட வருண் "என்றாள்...

பதில் ஏதும் கூறாமல் அவளை நெருங்கியவன் அனுவை இறுக்கமாக கட்டியணைத்தான்...ஏற்கனவே சிறு பயம் மற்றும் தயக்கத்துடன் இங்கு வந்தவள் அவனின் திடீர் அணைப்பில் மற்றது எல்லாம் மறந்துப் போக அவன் தலை முடியில் விரல் கோர்த்து " என்ன ஆச்சு இப்போ??அதான் நான் வந்துட்டல"என அவனை சமாதானப்படுத்த...

அவளிடம் இருந்து விலகியவன்...நீ வர முடியலனு சொன்ன கோபத்துல இப்படி செஞ்சிட்ட!!!என உடைந்து கிடந்த பொருட்களை சுட்டிக்காட்ட...இதுவரை அவனின் மென்மையான பக்கத்தை மட்டும் கண்டிருந்தவள் இன்று அவனின் கோபத்தின் எல்லை பார்த்து, எப்படியாவது அவன் தன் மாமன் மகன் என்பதில் துவங்கி அதன் பின் நடந்தவை எல்லாவற்றையும் கூறிவிட வேண்டும் என்ற உறுதியோடு வந்திருந்தவளின் தன்னப்பிக்கை சுக்குநூறாக உடைந்தது.....

அவனின் பதில் கேட்டு அனு அவனை முறைக்க,அவளை கையில் ஏந்தியவன் தூக்கி சென்று சோபாவில் அவளை அமர வைத்துவிட்டு தரையில் இருந்த கண்ணாடி துண்டுகளை சுத்தம் செய்ய துவங்கினான்....

அவளுக்கு குடிப்பதற்கு ஜூஸ் கொண்டு வர அவன் சமையலறைக்கு சென்றிருக்க அனு வீட்டை சுற்றிப் பார்க்க துவங்கினாள்.....சுவற்றில் மாட்டப்பட்டிருந்த படங்கள்,சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியம் என வருண் உட்பட அந்த வீட்டில் இருந்தவை அனைத்தும் அவள் மனம் கவர்ந்ததாகவே இருந்தது....

டைனிங் டேபிளில் உள்ள சூப்பர் மார்கெட் பையை பார்த்தவள் ஓர் ஆர்வத்தில் அதை ஆராய அது முழுவதும் அவளுக்கு பிடித்த சாக்லேட்,பிஸ்கெட்ஸ்,ஜெல்லி என இருந்தது... அதன் பின்னரே வீட்டில் பல இடத்தில் கேட்டிள்கள் பொருத்தப்பட்டிருப்பதை கவனித்தாள்...விவரிக்க முடியாத உணர்வு மனதில் பரவியதுப் போல் உணர்ந்தவள் ஏதும் அறியாததுப் போல் சோபாவில் சென்று அமர்ந்தாள்...

நேரம் நகர்வதைக் கூட உணராமல் இருவரும் பேசிக் கொண்டிருக்க வரணிற்கு பசி எடுத்த பின்பே நேரம் இரவு பதினொன்றை எட்டியதை கவனித்தனர்....

இரவு உணவை முடித்து இருவரும் மீண்டும் வந்து சோபாவில் அமர....திடீரென ஒருவரை ஒருவர் காண தயங்குவதுப் போல் உணர்ந்தனர்,ஏதோ எதிர்ப்பார்ப்பில் இருவரின் இதயமும் வேகமாக துடிக்க அதை கட்டுப்படுத்த வருண் டீவியை  உயிர்பித்தான்...

அவன் பாட்டு சேனலை தேடி வைக்க...அதில் "மாலை மங்கும் நேரம்" பாடல் ஒளிப்பரப்பாக அந்த அறை முழுவதும் வெப்பம் சூழ்ந்ததைப் போல் உணர்ந்தனர்....தன் விதியை நொந்துக் கொண்டவன் அடுத்த சேனலை மாற்ற அதில் மயக்கும் இசையில் "அனல் மேலே பனி துளி" பாடலில் சூர்யா கதாநாயகியின் கையை பற்றி முத்தம் பதிக்க அடுத்த காட்சி என்ன என்பதை உணர்ந்த அனுவின் கண்கள் விரிய ,வர போகின்ற காட்சியை உணர்ந்த வருண் வேகமாக டீவியை அணைத்தான்...

இந்த சூழலில் என்ன பேசுவது என புரியாமல் இருவரும் அமைதி காக்க....தூங்கப் போகலாமா அனு??என அவன் கேட்க என்ன சொல்வது எனத் தெரியாமல் அனு விழித்தாள்...

நான் ரெப்ரஷ் ஆகிட்டு வர என அங்கிருந்து நகர்ந்தவளை இழுத்து மடியில் அமர்த்தியவன்...நர்வஸ் பேபி??நம்ப இரண்டு பேரும் ஹஸ்பன்ட் & ஒய்ப்னு நியாபகம் வெச்சிக்கோ!!அப்போ இந்த சிச்சுவேஷன் அந்த அளவுக்கு ஆக்வர்ட்டா தெரியாது....என்றவன் தன்னுடைய தடுமாறும் மனதிற்கும் சேர்த்து ஆறுதல் கூறினான்...

சரி என்பது போல் தலையசைத்தவளை கண் இமைக்காமல் பார்த்தவன்....அவள் இடையை வளைத்துப்பிடத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்...அவனுடைய நெருக்கத்தில் அனுவிற்கு உடல் நடுங்குவதை உணர்ந்தவன் அவளிடம் இருந்து விலகி சோபாவில் சரிந்தவன் அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு "குட் நைட் டார்லிங்" என்றான்....

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

ப்ளைட் டெல்லியை நெருங்கவிருக்க தன் அருகில் அமர்ந்திருந்தவளை முறைத்த ரித்விக் வேண்டும் என்றே அவள் கையை தட்டிவிட அவள் கையில் வைத்திருந்த மேகஷீன் கீழே விழுந்தது.....

அதை எடுத்து மாதவியிடம் நீட்டியவன் ஐம் சாரி!என்றான்

அவனை பார்த்து சிரித்தவள் தட்ஸ் பைன் சார் என்றாள்.... கடவுளே! ஒரு பார்வைக்காக என்னாவெல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு!!!என எண்ணியவனின் பார்வை மேகஷீனில் மூழ்கி இருந்த தன்னவளின் மேலே நிலைத்திருக்க....பெருமூச்சுடன் தன் சீட்டில் சாய்ந்து கண் மூடினான்....

டெல்லியை அடைந்தவர்கள் நேராக புக் செய்திருந்த ஹோட்டலிற்கு சென்றனர்....அங்க தன் அறை மாதவியின் அறைக்கு அருகில் இருப்பதுப் போல் ஏற்பாடு செய்தவன் அறைக்குள்ளே நுழைவதற்கு முன் மாதவியிடம் ரெப்ரஷ் ஆகிட்டு லாபிக்கு வந்துடுங்க!!என்றான்

இங்கு டெல்லியில் இருக்கப் போகும் தனிமை இருவருக்கும் வேறு எங்கும் கிடைக்காது என உணர்ந்தவன்...இங்கு அவளிடம் தன் உணர்வை வெளிப்டுத்தியே ஆக வேண்டும் என்ற உறுதியோடு இருந்தான்....




Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro