உன் விழி
காண முடியா நிமிடங்களில்
கண்ணம்மா...
என்னுள் பித்தனைப்போல் புலம்பியதுண்டடியோ ...?
என் தயக்கங்களும்
தடுமாற்றங்களும்
கண்ணம்மா...
உன் உள்ளந்தனை
தொட்டதுவோ?
உன்னுயிர் நான்தானே
என்றமர்ந்தாய்
கண்ணம்மா...
புன்னகையுடன்
எந்தன் முன்னாலே...
உள்ளம் குளிர்ந்ததடி
கண்ணம்மா...
உந்தன் ஏக்க பார்வையினில்
முன்ஜென்ம தேடல் தெரிந்ததடி
எத்துனை ஜென்மத்து
புண்ணியமோ?
கண்ணம்மா...
நான் செய்தேன்
நீ எந்தன்
உயிரல்லவோ?...
- தர்ஷினிசிம்பா
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro