3. நான்சி மேரி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அத்தியாயம் - 3

Nancy mary

மகேஷ் அனுவையும் அவனின் தாயாரையும் அழைத்துகொண்டு கோயிலுக்கு வர, அங்கே அவன் திதி செய்வதற்காக ஏற்பாடு செய்திருந்த பிராமணரோ திதிக்கான முறைகளை செய்து கொண்டிருந்தார்.

அனு கோயிலுக்குள் காலடி எடுத்து வைத்த மறுவினாடியே மகேஷின் தாயார் கூறிய கதையின் மூலம் எழுந்த பயமும் மனசஞ்சலமும் முழுதாய் நீங்கிவிட அகத்தோடு முகமும் பொழிவுற்று கோயிலுக்குள்ளே அடியெடுத்து வைத்தாள்.

அனுவிற்கு அந்த சுற்றுபுறமே பேரமைதியை ஏற்படுத்த தனது மனதை அதில் லயித்தவாறே நடந்து கொண்டிருந்தவளோ,

உடனே மகேஷின் தாயாரை நோக்கி, "ரொம்ப தேங்க்ஸ் ஆண்டி எனக்கு துணையா இருக்கிறதுக்காக நீங்க இவ்ளோதூரம் வந்திருக்கீங்க ரொம்பவே சந்தோஷமா இருக்கு" என அகம் மகிழ்ந்து கூறிட,

அதற்கு அவரோ, "அட என்னமா நீ, இதுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு நான் சொன்ன கதையை கேட்டதுல இருந்து நீ எவ்ளோ பயந்து போயிருந்தனு எனக்கு நல்லாவே தெரியும் அதான் உன்னைய தனியா விட மனசில்லாம கூடவே துணையா வந்துட்டேன் இதையெல்லாம் பெரிய விஷயமா சொல்லிட்டு விட்டு தள்ளுமா; அதுசரி இப்போ பயமெல்லாம் போச்சா இல்ல இன்னும் பயப்படுறீயா?" என கேட்டவரிடம்,

"இல்ல ஆண்டி இப்போ பயமே இல்ல கோயிலுக்கு வந்ததும் ஏதோ ஒரு அமைதி மனசுல வந்திருச்சு இனி பயப்பட மாட்டேன்" என கூறி சிரிக்க,

உடனே மகேஷோ, "சரி சரி பாசமழையை பொழிஞ்சதெல்லாம் போதும் முதல்ல உன்னோட பிரண்ட்டுக்கு போன் பண்ணி வராளானு கேளு"

"இல்ல மகேஷ் அவ குளக்கரைக்கு வந்திடுறேன் தான் சொன்னா இந்நேரம் வந்திருப்பானு நினைக்கிறேன் அங்க போய் பார்ப்போம் இல்லனா போன் பண்ணலாம்" என கூறிட, அதுவும் சரிதான் என எண்ணிக்கொண்டு குளக்கரையை அடைந்தபோது அமிர்தாவும் அங்கே நின்றிருந்ததில் அவளோட இணைந்துகொண்டனர்.

அமிர்தாவை பார்த்த மகேஷோ, "நல்லவேளை நீங்க வந்துட்டீங்க எங்க ஏற்பாடெல்லாம் எங்களை பண்ண சொன்ன மாதிரி திதியையும் எங்க தலையிலயே கட்டிடுவீங்களோனு நினைச்சேன் இப்போதான் நிம்மதியா இருக்கு" என கேலிச் செய்த மகேஷிற்கு பதிலடி தரும் விதமாக,

"சாரி ப்ரோ, நான் என்னோட உரிமையை யாருக்கும் விட்டு தர மாட்டேன் இது என்னோட பாட்டிக்கான திதி நான்தானே செய்யணும் உங்களை எல்லாம் கஷ்டபடுத்த மாட்டேன்".

"நீங்க சொன்னாலும் நாங்களும் செஞ்சிருக்க மாட்டோம்" என மகேஷ் பதிலடி தர அதனை கேட்ட அனுவோ,

"ஹேய் இப்போ நாம பாட்டிக்கு திதி குடுக்க வந்திருக்கோம் இந்த இடத்துல சண்டை போடாம ஒழுங்கா திதி குடுங்க" என கூறிட அதை வழிமொழியும் விதமாக பிராமணரும் திதி குடுக்க அமிர்தாவை அழைத்தார்.

அப்பொழுது திடீரென வானம் கறுத்து விட ஒளி தரும் சூரியனை இருளான கருப்பு மேகங்கள் தங்களுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்து குளிரினை பரப்ப,

அந்த திடீர் சூழ்நிலை மாற்றத்தை கண்டு குழம்பியவர்களோ மழை வரும் அறிகுறியென நினைத்து அமைதியடைந்தனர்.

அப்பொழுது மகேஷின் தாயாருக்கு அலைபேசியில் அழைப்பு வர அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

திதிக்காக சடங்குகள் முழுந்து எள்ளு நீரும் கலந்த பிண்டத்தை அமிர்தாவிடம் தந்து தண்ணீரில் கரைத்துவிட்டு வர குடுக்க அதை எடுத்துகொண்டு அமிர்தாவும் குளக்கரைக்கு சென்றாள்.

அப்பொழுது மகேஷின் உள்ளுணர்வின் ஏதோ தோன்ற உடனே கோயிலுக்கு வெளியில் அடர்ந்து வளர்ந்திருந்த மரத்தை பார்க்க அங்கே அவனை மிரட்டிகொண்டிருக்கும் அமானுஷ்யம் மரக்கிளையில் அமர்ந்தபடி கோப பார்வை வீசிக்கொண்டிருக்க மகேஷ் தன்னை கவனித்ததும் அப்பார்வை கேலி பார்வையாய் மாறி சிரித்தது.

அச்சிரிப்பிற்கான அர்த்தம் புரியாதவனோ முதலில் குழம்பி பின்பே தாயார் இங்கில்லை என்பதை உணர்ந்து அனுவை பத்திரமாய் இருக்க சொல்லிவிட்டு வாயிற்புறம் ஓடினான்.

அங்கே கோயில் வாசலில் மகேஷின் தாயார் யாரிடமோ போனில் உரையாடி கொண்டிருந்த அவருக்கு மிக அருகில் அமாஷ்ய உருவம் நின்று மகேஷை பார்த்து சிரித்தது.

உடனே தாயிடம் வந்த மகேஷோ, "அம்மா போன் பேச இவ்ளோ நேரமா அனு உங்களை அங்க தேடிட்டு இருக்கா நீங்க சீக்கிரம் உள்ள போங்க" என அனுப்பி வைக்க அமானுஷ்யமோ அவரை தடுக்க பார்க்க அதற்குள் வேகவேகமாய் தாயை உள்ளே அனுப்பியவனோ அமானுஷ்யத்தை நெருங்கி,

"இப்போ எதுக்கு தேவையில்லாம என் அம்மாவை கஷ்டபடுத்த நினைக்கிற அதான் நான் நீ சொல்ற மாதிரியே எல்லாம் பண்றேனே அப்புறம் என்ன உன் பிரச்சனை" என கோபமாய் கத்த.,

அமானுஷ்யமும் தன்னுடைய கோபத்தை காற்றை வேகமாய் வீசவைத்து வெளிகாட்டிட பேய் காற்று அடித்து மகேஷையே சில அடிகள் நகர்த்தியது.

"கோயிலுக்கு இருக்கிற உன்னைய வெளியில வரவைக்க தான் உங்கம்மாவை வைச்சு மிரட்டுனேன் மத்தபடி கொல்லணும்னு நினைச்சிருந்தா அவளை அழிக்க எனக்கு ஒருநொடி போதும்" என கோபமாய் கத்தியது.

"ப்ளிஸ் அப்படி எல்லாம் பண்ணிராத நான்தான் நீ சொல்றதெல்லாம் பண்றேனே இன்னும் இரண்டு பேரு எப்போ எப்படி வருவாங்கனு நீ சொல்லவே இல்ல அதான் நானும் அமைதியா இருக்கேன் இது புரியாம என்னை மிரட்டுனா என்ன அர்த்தம்" என கெஞ்சினான்.

அவனின் கெஞ்சலை கேட்ட அமானுஷ்யமோ, "அதை சொல்ல தான் நானும் வந்தேன் இப்போ உள்ள ஒருத்தி திதி தராளே அவதான் நான் தேடுற மூணாவது ஆள். இன்னும் ஒருத்தன் கூடிய சீக்கிரமே உன்கிட்ட வந்து சேருவான் இப்போ நீ உள்ள இருக்கிறவளை எப்படியாவது உன்னோட வழிக்கு கொண்டு வரணும் நீ சொல்றதை எல்லாம் நம்புற மாதிரி பண்ணனும்" என கூறி கோரமாய் சிரித்துகொண்டே அங்கிருந்து மறைந்துவிட்டதும்,

அச்சூழ்நிலையும் தன்னாலே மாறி இயல்பு நிலைக்கு திரும்பியது.

அப்பொழுது அனுவோடு சேர்ந்து கோயிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்களை கண்ட மகேஷின் மனமோ குற்ற உணர்ச்சியால் நிரம்பியது.

***************************

அடர்ந்த காட்டுபகுதியில் ஒரு கார் சீறிபாய்ந்து கொண்டு வேகமாய் செல்ல அதனுள் இருந்த நான்கு வாலிபர்களும் சத்தமாக பாடல்களை கேட்டபடி உற்சாகமாய் பயணித்து கொண்டிருந்தனர்.

"மச்சி, நாம நம்ம பிரண்ட்டோட கல்யாணத்துக்கு போறோமா இல்ல கருமாதி பண்ண சுடுகாட்டுக்கு போறோமா எதுக்குடா இப்படி காட்டுக்குள்ள எல்லாம் வண்டியை விடுறீங்க" என ஒருவன் நக்கல் செய்தான்.

"அட நீ வேற கொஞ்சம் சும்மா இருடா, நானே லொகேஷன் சரியா தெரியாம இது காட்டுற லொகேஷன்ல எங்க எங்கயோ சுத்துறேன் இதுல நீங்களும் இப்படி கத்துனா என்னடா அர்த்தம்" என கூறி நண்பர்களுக்கு அதிர்ச்சியை வழங்கினான் விக்ரம்.

"டேய் விக்ரம், உனக்கு பாதை தெரியும்னு நினைச்சு தானடா உன்கிட்ட வண்டியை குடுத்தோம் ஆனா நீ என்னனா இப்படி சொல்ற அப்போ நாம போறது சரியான ரூட்டு இல்லையா" என நண்பர்களுள் ஒருவன் பீதியாக,

"ஹேய் ரீலாக்ஸ் டா, இப்போ ஏன் டென்சன் ஆகுறீங்க நாம இங்க எங்க சுத்துனாலும் கடைசியா சரியான லொகேஷனுக்கு ரீச் ஆகிடலாம் நாம இப்போ சுத்துறதை ஊர் சுத்தி பார்க்குற மாதிரி நினைச்சிக்கோ" என கூறிட நண்பர்கள் அனைவரும் அவனை அடிக்க ஆரம்பிக்க இந்த நட்பின் ஆரவாரத்தால் அவ்விடமே சிரிப்பொலியால் நிறைந்தது.

"சரிடா அவனை விடுங்க நாம நம்ம பிரண்ட்டுக்கே போன் பண்ணி சரியான வழியை விசாரிப்போம்" என நினைத்து போன் செய்ய போனில் சிக்னலே கிடைக்காமல் போனது.

"இப்படிபட்ட தண்ணீயில்லாத காட்டுல எங்களை மாட்டிவீட்டீயே டா ஆண்டவா" என நண்பர்களுள் ஒருவன் கத்த காரின் டயரும் பஞ்சராகி புஸ்ஸென்ற ஓசையை எழுப்பியது.

"மச்சி சத்தியமா இது நான் கத்தினால நடக்கல டா பீலிவ் மீ" என கத்தியவன் கெஞ்ச,

"போடா லூசு" என கூறிக்கொண்டு விக்ரம் காரிலிருந்து இறங்கி ஸ்டெப்னியை எடுத்து சரிபடுத்த முயற்சித்தான்.

அப்பொழுது அவனின் நண்பனோ அவசரத்திற்காக மரத்தை நோக்கி விரைய இன்னொருவனும் அவனுடனே சென்றிட,

விக்ரம் கஷ்டபட்டு சரிசெய்ய முயற்சிப்பதை காரில் அமர்ந்தபடி நண்பர்களுள் ஒருவன் பார்த்துகொண்டிருக்க அப்பொழுது எங்கிருந்தோ கேட்ட நண்பர்களின் அலறல் சத்தம் கிலியை ஏற்படுத்தியது.

"ஆஆஆஆஆஆஆஆஆ" என கேட்ட அவ்விருவரில் அலறல் சத்தத்தில் அனைத்தையும் போட்டுவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர்.

அப்பொழுது விக்ரம் வேகமாய் செல்ல அவனின் பின்னே ஒடியவனுக்கோ தன் பின்னால் யாரோ ஓடி வருவது போல ஓசை கேட்க அரண்டு போய் திரும்பி பார்க்க அங்கே யாருமே இல்லை.

உடனே முன்னால் திரும்பி நண்பர்களை காப்பாற்ற ஓடிட அவனின் பின்னால் யாரோ தலைமூடியை கொத்தாய் பற்றி இழுக்க அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவனை மண்ணிற்குள்ளிருந்து பல கைகளை மேலெம்பி வந்து ஒன்றாய் அவனை மண்ணிற்குள் இழுக்க,

"ஆஆஆஆ விக்ரம்..... விக்ரம்" என அலறியவனின் வாயை ஒரு கை அடைக்க தனது கையை வைத்து அக்கையை விலக்கியவனோ,

"விக்ரம்........" என அக்காடே அதிரும் அளவிற்கு அலறினான்.

விக்ரமிற்கு இந்த அலறல் சத்தம் கேட்க சட்டென்று நின்று திரும்பி பார்த்தவனோ, தனது நண்பர்கள் அனைவருமே காணாமல் போனதை நினைத்து பயம் ஏற்பட,

தன் கால்களை மெதுமெதுவாய் அடியெடுத்து வைத்து சுற்றும்முற்றும் யாரும் வருகிறார்களா என பார்த்து கொண்டே செல்ல அப்பொழுது அங்கிருந்த ஒரு பாறை தடுக்கி கீழ விழுந்தான்.

"ச்சே பயத்துல இதை கவனிக்காம வந்துட்டோமே" என யோசித்தவனுக்கு ஏதோ தோன்ற சட்டென புரண்டு மேல்நோக்கி பார்த்தவனின் மேல் ஏதோ ஒரு கோரமான கருப்பு உருவம் வந்து விழுக அதில் அலறி துடித்தான்.

"ஆஆஆஆஆஆஆ" என்ற பெரும் அலறோடு எழுந்தவனோ கட்டிலிருந்து கீழே விழ,

அவனின் சத்தத்தில் கண்விழித்த நண்பர்களும் "ச்சே இவனோட இதே பொழப்பா போச்சுடா இன்னைக்கும் அதே கனவா" என கேட்டு தலையில் அடித்துகொள்ள,

அப்பொழுது கண்விழித்த விக்ரமோ சுற்றம் உணர்ந்தபடியே எழுந்து கட்டிலிருந்த நண்பர்களை பார்க்க அவர்கள் இவனை கொலைவெறியாகி முறைத்து பார்த்தனர்.

"ஹிஹி சாரி மச்சிஸ் மறுபடியும் அதே கனவு வந்திருச்சு" என அசடுவழிய கூறியதை கேட்ட நண்பர்களின் ஒருவன்,

"டேய் விக்ரம் நம்ம பிரண்ட்டோட கல்யாணத்துக்கு வர விருப்பமில்லனா இப்பவே சொல்லிருடா அதைவிட்டுட்டு அவன் நம்மல கூப்பிட்ட நாள்ல இருந்து கனவு கண்டு எங்க தூக்கத்தை கெடுத்து கனவை சொல்லி எங்களை பயமுறுத்திட்டு இருக்க இதெல்லாம் நியாயமா" என கேள்வியெழுப்ப,

அதை கேட்ட விக்ரமின் புருவமோ யோசனையாய் சுறுங்கியது.

"இல்ல மச்சி எனக்கென்னமோ இது சாதாரண கனவு மாதிரியே தெரியல ஏதோ உண்மையாவே நடந்த மாதிரி தோணுச்சு டா. அதான் ஒவ்வொரு தடவையும் பயப்படுறேன் ஒருவேளை இதெல்லாம் உண்மையா நாம கல்யாணத்துக்கு போறப்போ நடக்குமோ" என கேட்க,

அதில் கோபமான நண்பர்கள் தலையணை தூக்கி வீச அதை லாவகமாய் பிடித்து அவர்களை நோக்கி எறிந்துவிட்டு பால்கனியை நோக்கி சென்றான்.

இது இரவா இல்லை பகலா என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றியுள்ள பல்வேறு கட்டிடங்கள் வண்ணவிளக்குகளால் ஒளிர மக்கள் நடமாட்டமும் ஆங்காங்கே காணப்பட்டிருந்த நீயூயார்க் நகரின் பேரழகை தனது அப்பாட்மெண்டில் பால்கனி வழியே நின்று வெறித்து கொண்டிருந்த விக்ரமின் எண்ணங்கள் யாவும் கனவை சுற்றியே வட்டமடித்து கொண்டிருந்தது.

தனது சொந்தங்கள் யாருமின்றி சிறுவயதிலேயே அனாதையாக அனாதை இல்லத்தில் சேர்க்கபட்டவனோ அங்கிருந்த நண்பர்களை தனது சொந்தமாய் நினைத்து பாசத்திற்கு ஏங்கி பல ஆசைகளை தன்னுள்ளே புதைத்து வளர்ந்தவனுக்கு படிப்பு ஒன்றே மாபெரும் இலக்காய் இருந்தது.

அதே குறிக்கோளோடு படித்தவனுக்கு ஸபான்ஸர் செய்திட பலர் முன்வர அவர்களின் மூலம் இன்னும் சில நண்பர்களுக்கும் ஸ்பான்ஸர் செய்ய நண்பர்களுடன் வெளிநாட்டிற்கு படிக்க சென்றான்.

அங்கேயே சில வருடங்கள் படிப்பிற்காகவே தன்னை அர்பணித்தவனோ மனோதத்துவ மருத்துவருக்கான படிப்பை படித்து முடித்த தருவாயில் இனி தன் பணியை தன் நாட்டிலேயே துவங்கிட திட்டமிட்டான்.

அப்பொழுதே அவனுடன் ஆசிரமத்தில் வளர்ந்து விக்ரமுடன் செல்ல வாய்ப்பு கிடைக்காத நண்பனும் தனது திருமணத்திற்காக அழைப்பு விடுக்க இந்தியா திரும்ப நினைத்தவனோ தனது பணியையும் அங்கே துவங்கிட எண்ணம் கொண்டு பயணபட தயாராகிறான். பாவம் இது அவனை அழைக்கும் அமானுஷ்யத்தின் அழைப்பு என்ற எண்ணம் வந்திருந்தால் இந்த பயணத்தை நிறுத்தியிருப்பானோ என்னவோ..???

மகேஷ் அமானுஷ்யத்தின் பேச்சை கேட்டு அமிர்தாவின் நம்பிக்கைகுரியவனாக மாறுவானா..???

கனவின் உண்மையின் பிம்பத்தை கண்டும் உணராது கிளம்பிடும் விக்ரமின் பயணத்தால் நேரவிருக்கும் அசம்பாவிதங்களும் சம்பவங்களும் என்னவாக இருக்கும்..???

அடுத்த அத்தியாயத்தில் காணலாம்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro