5- செங்கிஸ்கான்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அத்தியாயம் 5

செங்கிஸ்கான்

அந்தி வானம் மங்கி சிவந்து பொன்னிரமாய் பூமியைப் பொலிர செய்த நேரமதில், மஞ்சள் மேகங்களோடு பறவைகள் போட்டியிட்டு, கூடு திரும்பி கொண்டு இருந்தன. வயல்வெளிகளை வருடியதொரு தென்றல், அலை அலைகளாக கதிர்களை ஆட செய்தன.
பசுமையும் குளுமையும் நிறைந்த அந்நேரத்தில் வயல் வேலைகளை முடித்த ஜனங்கள் பம்ப் செட்டில் குளித்து ஆட்டமிட்டனர். நாரைகளும் மைனாக்களும் குருவிகளும் குஞ்சுகளோடு குலாவி கொண்டு இருந்தன.

அத்தனை அழகான அந்த மாலைப் பொழுதை பாதி உலகமே ரசிக்கையில், பொன்னுத்தாயி மட்டும், இருட்டும் கிழக்கை வெறித்த வண்ணம் பித்துப் பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். சமீப காலமாக அவள் வாழ்வில் நடக்கும் அமானுஷ்யங்களால் பெரிதும் அதிர்ந்து போய்தான் இருந்தாள். அதை விட அவளை பெரிதாக பாதித்தது, அவள் குடும்பம் கூட அவள் கூறியதை நம்பவில்லை. ஏன் அன்னம்மாள் கூட அப்படி ஏதும் இல்லை என்று சாதித்தே விட்டாள். அன்றிலிருந்து தினமும் இரவு அந்த கருப்பு உருவத்தின் ஆட்டம் அவள் வாழ்வில் அரங்கேறியது. உதவி செய்ய கூட ஆளில்லாமல், போவதற்கு வழியும் இல்லாமல், பிள்ளையை பாதுகாக்க வேண்டி செய்வதறியாது தவித்தாள் பொன்னுத்தாயி. இருட்டத் தொடங்கியதும் தான் தாமதம் தன் நிழலையும் கண்டு பயந்தவள் முழங்காலில் முகம் புதைத்து கொண்டாள்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாலும் இரவு வர தானே செய்யும். வழக்கமான வேலைகளை முடிப்பதற்கே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது. எப்பொழுதும் போல, இன்றைக்கும் தூக்கமின்மையால் புரண்டு கொண்டு இருந்தாள். நள்ளிரவு நேரம் வாசலில் எரிந்து கொண்டு இருந்த விளக்கு விட்டு விட்டு எரிந்து பின்பு தானாக அணைந்தது. திடீரென்று கட்டி இருந்த மாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து பொன்னுத்தாயை அழைப்பது போல பயத்தில் கத்தியது. சத்தத்தில் எழுந்த அமராவதி, "ம்மா மாடுங்கலாம் ஏன்மா கத்துது" என்றாள். "பேசாம படுடி, ஏதும் கேக்காத" என்று தன் பிள்ளையை அதட்டி அமைதியாக்க்கினாள் பொன்னுத்தாயி. "அப்பா எப்போமா வருவாரு", என்றாள் அமராவதி மீண்டும். தன் மகள் அமராவதி பயத்தில் இருப்பதை உணர்ந்தாள் அவள்.

எனெனில், ராணுவத்தில் இருக்கும் அப்பா இப்போ வரமாட்டார் என்பது அவளுக்கே தெரிந்ததுதான்.

"அப்பாக்கு லீவு கிடைச்சா வந்திருவாரு மா, நீ தூங்கு இப்போ. அம்மா உன் கூடவேதா இருக்கே" என்றாள் பொன்னுதாயி.

அம்மாவின் வார்த்தை கொடுத்த தைரியமோ அல்லது வேறு ஏதோ உடனே உறங்கி போனாள் அமராவதி. பொன்னுத்தாயி மட்டும் இன்னமும் விழித்து இருந்தாள். அவள் உதடுகள் அமைதியாய் இருந்தாலும், காதுகள் மட்டும் கவனமாக கவனிக்க தொடங்கி இருந்தன.

முதலில் மெதுவாக செருமல் சத்தம் வாசல் புறம் இருந்து கேட்டது. நமக்கு பழக்கப்பட்ட குரல் என்று அவள் யோசிப்பதற்குள், அந்த குரல் அவளை அழைத்தது. "பொன்னு, தங்கம், மகளே நான் அப்பா வந்திருக்கேன்டா. பேத்திய பார்க்க வந்து இருக்கே தாயி" என்றது அந்த குரல்.

பொன்னுத்தாயின் இருதயம் ஒரு நொடி நின்றே விட்டது. ஆறு மாதத்திற்கு முன்னாள் இறந்து போன அவள் அப்பாவின் அதே குரல். பயத்தில் பேச்சு வராமல் போனது அவளுக்கு.

இப்போது அந்த குரல், "பேத்தியை கண்ணுல காட்ட மாட்டியாடி ராசாத்தி. உன்ன பெத்தவன் கேக்குறேன்த்தா" என்று அழ தொடங்கியது.

இறுக்கமாக காதுகளை பொத்தி கொண்டதோடு கண்களையும் மூடிக்கொண்டாள் பொன்னுத்தாயி. அந்த நொடிகளுக்காகவே அந்த கருப்பு உருவம் காத்திருந்ததோ என்னவோ, அமராவதியை பார்த்து கோரமாய் சிரித்தது.

அப்போதே அமராவதியின் முடி மெல்ல காற்றில் உயர்ந்தது. அதை யாரோ பற்றி இழுத்தது போல இழுத்து, வீட்டிற்கு வெளியே மெல்ல கொண்டு வந்தது. காற்றில் மிதப்பது போல அமராவதி எந்த சலனமும் இல்லாமல் வெளியேறி கொண்டு இருந்தாள்.

நிகழப்போகும் கொடூரம் அறியாமல் பொன்னுத்தாயி அவள் அப்பாவை எண்ணி கண் மூடி அழுது கொண்டு இருந்தாள். "நீ என்ன விட்டு போய்டுபா, நாங்க உங்கிட்ட வரமாட்டோம். இங்க இருந்து போயிரு" என்று பொன்னுத்தாயி அழுது கொண்டிருந்த அதே நேரம்.

வாயிலை தாண்டி வந்த அமராவதியின் உடலை நோக்கி குரூர சிரிப்புடன் நெருங்கியது அந்த கருப்பு உருவம். திடீரென்று எங்கிருந்தோ வந்த அன்னம்மாள், அமராவதிக்கு பூண்டு மாலையை அணிவித்து அவளை கையில் தூக்கி கொண்டு வீட்டிற்குள் புகுந்தாள்.

சுயநினைவிற்கு திரும்பிய பொன்னுதாயிற்க்கு ஈரக்குலை அருந்தது போல இருந்தது. கதவை தாழிட்டு உள்ளே வந்த அன்னம்மாள் பொன்னுதாயின் வாயிலும் வெள்ளபூண்டை ஊட்டி விட்டாள்.

"பதராத பொன்னு, நான் வந்துட்டே இனி நான் பார்த்துகிறேன். இந்த இரவு நாம அந்த கருப்பு உருவத்துக்கு பலியாக மாட்டோம் என்னை நம்புடி" என்றாள்.

அந்த கணம் முதல் அந்த இடமே நிசப்தம் ஆனது. உயிரை உறிஞ்சி எடுக்கும் அளவுக்கு நிர்மூலமான ஒரு நிசப்தம் நிலவியது. பொன்னுத்தாயின் உடல் இன்னமும் நடுங்கி கொண்டுதான் இருந்தது. அந்த நிசப்தம் அவள் நிம்மதியை குலைத்தது. அன்னம்மாள் அவளை ஆசுவாச படுத்தினாள்.

காலைல எல்லாம் சொல்றேன் பொன்னு, இப்போ கொஞ்ச நேரம் தூங்கு என்றாள் அன்னம்மாள். தூக்கம் வராமல் போனாலும் வெளிச்சம் பிறக்காமலா போகும். பொழுது புலர்ந்தது. அமானுஷயங்கள் நிறைந்த அதே கிராமம் மின்னும் மஞ்சள் வெய்யிலில் ஜொலித்தது. பசுமையான சூழல்கள், இனிமையான பறவை ஒலிகள். இந்த கிராமத்திலா இத்தனை கொடூரம் என்று நம்மை எண்ண வைத்தது.

மண்ணை விட்டு இருள் போனாலும் பொன்னுத்தாயின் மனதை விட்டு போகவில்லை. அவள் மனம் முழுவதும் இரவு நிகழவிருந்த சம்பவம் மட்டுமே நிழலாடியாது.

பொன்னுத்தாயி, "உன்ன எவ்ளோ நம்புனேடி கடைசில என்னையும் என் மவளேயும் கொல்ல தான் வந்தியா இங்க. ஊருக்கறாங்க முன்னால இப்டி ஒரு கருப்பு உருவம் இல்லவே இல்லனு சொல்லி எனக்கு பைத்தியக்கார பட்டம் வாங்கி குடுத்திட்டியேடி. இப்போ மட்டும் எதுக்கு இங்க வந்த. தயவு செஞ்சு இந்த ஊரை விட்டு போயிருடி. என் வீட்ட விட்டு போ முதல்ல. நானும் என் மவலும் நிம்மதியா இருக்கணும். நீ வந்தனால தான் எங்களுக்கு இந்த நிலம. போயிரு இங்க இருந்து" என்றாள்.

அன்னம்மாள், "பொன்னு! இந்த ஊருக்கு நான் திரும்பி வந்ததே உன்னையும் உன் மவளேயும் காப்பாத்த தான்டி. அன்னைக்கு நான் வரலைனா, இந்நேரம் நீயும் உன் மவலும் அந்த கருப்பு உருவத்துக் கூட போய் இருப்பிங்க" என்றாள்.

பொன்னுதாயி, "என்னடி சொல்ற நீ? நெசம் தானா? சரி, செத்துப் போன எங்க அப்பா எதுக்குடி நேத்து நைட் வந்தாரு".

அன்னம்மாள், "நா சொல்ல போறத பொறுமையா கேளு மக்கா. வந்தது உங்க அப்பா இல்லடி. அந்த கருப்பு உருவம் தான். அந்த கருப்பு உருவம் நமக்காக வரல, நம்ம பிள்ளைங்களுக்காக வந்திருக்குடி. நம்ம புள்ளைங்கள அந்த கருப்பு பிசாசு கிட்ட இருந்து காப்பாத்தணும்டி.

கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி, நா விழுந்து வாரிக்கிட்டேன்னு கிண்டல் பண்ண தானே. அன்னைக்கே இந்த பிரச்னை எனக்கு ஆரம்பிச்சுருச்சுடி. அன்னைக்கு நானா கீழ விழலடி. என் புள்ளைங்கள வீட்ல இருந்து தூக்குறதுக்கு, என்னை தடுத்து நிறுத்த இந்த கருப்பு செஞ்ச வேலை தான் அது. ஒரே நேரத்துல அந்த கருப்பு இரண்டு இடத்துலயும் இருக்குடி. என் கால பிடிச்சு இழுத்த அதே நேரம், இன்னொரு கருப்பு என் புள்ளைங்கள தூக்க போயிருச்சு. நல்ல வேலையா அன்னைக்கு புள்ளைங்கள விட்டுட்டு முறுக்கு, அதிரசம் விக்க போகும் போது அதுக கைல மஞ்ச கிழங்கு வைச்ச மாரியாத்தா காப்புக் கட்டி இருந்தனால எம் புள்ளைக பொழச்சுதுக. அன்னைல இருந்து தினம் தினம் இந்த கருப்பு ஆட்டம் ஆரம்பிச்சுதுடி. அதுனால தான் என் புள்ளைங்கள கூப்பிட்டுட்டு மெட்ராஸ்க்கு போயிட்டே. அங்க ஒரு கிருத்துவ பாதிரிமாறு தான் எங்கள பார்த்துகிட்டாரு. ஆனா அங்கையும் இதே பிரச்சனை வந்திருச்சுடி. நேத்து அமராவதிக்கு நடந்த மாதிரி ஒருநாள் என் மக மாதவியையும் தூக்கிருச்சு அந்த கருப்பு. அந்த பாதிரிமாறு தான் மீட்டுக் குடுத்தாரு. ஆனா, அப்போ இருந்து மாதவிக்கு என்னை அடையாளம் தெரிலடி. பித்து பிடிச்சவ மாதிரி ஆகிட்டா. அது கூட பரவால்ல. அவ அண்ணே ஸ்ரீதர் பார்த்து கூட பயந்து கத்த ஆரம்பிச்சுட்டா. அவனுமே மனசு ஓடைஞ்சு போய்ட்டான். அப்பறம் அந்த பதிரிமாறு எங்கள ஆசாத் கபிர் பாய் கிட்ட அனுப்பி வைச்சாரு. அவரும் கருப்ப அடக்க முயற்சி பண்ணாரு. அப்பறம் தான் தெரிஞ்சது இது ஆத்மாவோ, பேயோ இல்லையாம். உயிரோட இருக்குற ஏதோ ஒன்னாம். அதுவும் ஒரு பொண்ணாம். ரொம்ப சக்தி வாயிஞ்சதுனும், தன்னால அத நெருங்க முடிலனும் சொன்னாரு. அப்பறம் அவரு பதிரிமாறு கிட்ட ஏதோ சொல்ல, அவரு உடனே ஸ்ரீதர் இப்போ இங்க இருக்க வேணாம்னு சொல்லி அவன அமெரிக்காக்கு படிக்க அனுப்பிட்டாரு, அவங்க திருச்சபை மூலமா. மாதவிய மதுரை வக்போர்ட் காலேஜ் ஹாஸ்டல்க்கு பாதுகாப்பா வார்டன் கூட அனுப்பிட்டாரு பாய். ஆசாத் கபிர் பாய் சொல்லித்தான் எனக்கே தெரியும் அமராவதி உயிரும் ஆபத்துல இருக்குனு. அது தான்டி உன்ன பார்க்க வந்தேன். நல்ல வேலையா கருப்பு உங்ககிட்ட வரதுக்குள்ள நா வந்துன்டே. இத இப்போ ஊருக்குள்ள சொல்லி புரிய வைக்க முடியாதுடி. நாம உடனே போய் பாய பாக்கணும்டி. இப்போவே மெட்ராஸ்க்கு கிளம்பு பொன்னு. அமராவதி அப்பாக்கு அப்பறமா தகவல் சொல்லிக்கலாம்" என்று முடித்தாள் அன்னம்மாள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எல்லாத்தையும் மாற்றிவிடும் சக்தி காலத்திற்கு மட்டுமே உண்டு. சில சமயம் மாற்றத்தை கூட மாற்றி அமைத்து எதுவும் மாறாமல் செய்து விடுகிறது காலம். காலபோக்கில் கிராமங்கள் குறைந்தன. நகரங்கள் பெறுகின. வயல்கள் வர்த்தகம் பெற்று மாளிகைகள் ஆனது. வீடுகள் பெறுகின. தூரங்கள் குறைந்தன. மக்கள் கூட்டமும் வாகன கூட்டமும் பெறுகின. நகர மய்யங்கள் விளக்குகளால் நிறைந்தன. கிட்டத்தட்ட இருள் என்ற நிலை இல்லாமலே போனது. மக்கள் மனதிலும் பேய் கதைகள், மந்திர மாயங்கள் குறைந்து போயின. ஆனாலும் ஆங்காங்கே இன்னமும் அமானுஷ்யங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. விடை தெரியா பல கேள்விகள் நீண்டு கொண்டே தான் இருக்கிறது.

நம் நகரங்களே இப்படி என்றால், மன்ஹாட்டன் போன்ற அமெரிக்காவின் பெரு நகரம் ஒன்றில் எவ்வளவு வளர்ச்சி இருக்கும். அந்த நாகரிகமும் வாழ்வியல் முறையும் விக்ரமின் மனதில் இருந்த கருப்பின் பயத்தை நிக்கியது. அது கருப்பின் ஞாபகத்தை கூட நிக்கியது எனலாம். தான் உள்ளுணர்வை கொஞ்சம் கேட்டிருந்தால் கூட இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து இருக்காது அவனுக்கு. இவனும் இந்தியா வந்தே இருக்க மாட்டான். விதி யாரைதான் விட்டது. அவனை நேராக மகேஷ் அம்மாவிடம் கொண்டு சேர்த்து இருந்தது.

*) அந்த கருப்பு உருவத்தின் மர்மம் என்ன? அதன் நோக்கமும் பூட்டி இறுக்கும் பெட்டிக்குள் இறுக்கும் பொருளும் என்ன?

*) பொன்னுதாய், அன்னம்மாளின் நிலை என்ன?
அமராவதி, மாதவி, ஸ்ரீதர் இவர்களின் கதை என்ன?

*) மகேஷ் எப்படி கருப்பிடம் மாட்டினான்? மகேஷ் அம்மாவிடம் விக்ரம் எப்படி சேர்ந்தான்?

*) சென்னை சென்றார்களா அன்னம்மாளும் பொன்னுத்தாயும் ?

இனி அடுத்த அத்தியாயத்தில் ...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro