32

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

குமார், சாரதாவின் தம்பி. பெரிதாக எதுவும் படிக்காதவன் ஆனால் புத்திசாலி. அவனுக்கு ஜனனியின் மேல் என்றுமே ஒரு ஆசை, காதல் உண்டு. அவனுக்கும் அவளுக்கும் பதின் மூன்று வருட வித்தியாசம் இருந்தாலும் அவை எல்லாம் கிராமத்தில் சகஜம். ஜனனியை திருமணம் முடிக்க அவன் எவ்வளவோ முயன்றாலும் சாரதா ஏதாவது காரணம் காட்டி அதை தள்ளிப் போட்டு விடுவாள். இருந்தாலும் சாரதாவால் தன்னை மீறி எதுவும் செய்துவிட முடியாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்ததால், சாரதா கூறிய காரணங்களை ஏற்றுக் கொண்டு பொறுமை காத்தான். ஆனால் இம்முறை ஜனனியே அவனுக்கு கால் செய்து பேசியதால் சாரதா இதில் தலையிட எதுவுமில்லை என்று அவனுக்கு தெரிந்தது. தன் வருங்காள மனைவியையும் அவனின் மாமியாரையும் ஊருக்கு அழைத்து செல்ல அவன் உடனே வந்துவிட்டான்.

சாரதா ஜனனியிடம் கொஞ்சமாவது எதிர்த்து பேசுவாள். ஆனால் அவளின் தாய், தம்பி முன் அவள் பேசா மடந்தையாகி விடுவாள். நெருப்பை காட்டி அதில் விரலை விட சொன்னால் கூட 'ஆட்காட்டி விரலையா அல்லது சுட்டு விரலையா விட வேண்டும்' என்று கேட்கும் அளவுக்கு அவளின் பயம் இருக்கும். சிறு வயதில் இருந்து வரும் பயத்தை எளிதில் யாராலும் மாற்றிவிட முடியாது. இந்த பயம் எதுவும் ஜனனிக்கு வந்துவிடாமல், அவளை சுயமாக சிந்திக்க சாரதா அளித்த இடம்தான் இன்று வினையாகி வந்திருக்கின்றது. இதை நினைக்கும் போது ஜனனியை தன் கட்டுக்குள் வைத்தே வளர்த்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் அவளுக்கு எழுந்தது.

செந்தாளம் குளம்..( கற்பனை பெயர்)ஒரு கிராமம். கெளரவக் கொலைகளுக்கு பெயர் போன இடம். குமார்தான் அந்த ஊரின் பெரிய தலைக்கட்டு. அவனை கேட்காமல் அங்கு அணுவும் அசையாது. ஆனால் அந்த பெரிய தலைக்கட்டுக்கே ஒரு பெரிய ஆப்பு வைக்க போவது அவனின் ஆசை காதலி என்பது அவனுக்கு தெரியவில்லை.

இரவு ஊர் வந்து சேர்ந்ததும் சாரதாவுக்கு உறக்கமே வரவில்லை. நாளை கழித்து மறு நாள் திருமணம். செந்தாளம் குளம் வந்தாலே சாரதா மந்திரத்துக்கு கட்டுண்டவள் போலாகிவிடுவாள். அவளின் பயம் அவளை பேச விடாது. இந்த முறை அவளின் இயாலாமையை எண்ணி அவள் மிகவும் வேதனைப் பட்டாள்.

இன்றைய கால கட்டத்தில் ஜனனியின் வயதில் இருப்பவர்களுக்கு ஒரு விடயத்தை அறிந்து கொள்வது என்பது மிகவும் இலகுவான ஒன்று. பிரியானி சமைப்பது முதல் ராக்கட்டை எப்படி இயக்க வேண்டும் என்பது வரை அவர்களுக்கு அத்துப்படி. ஆனால் எல்லாமே எழுத்தளவில். அனுபவத்தில் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இப்போதெல்லாம் பிள்ளைகள் வீட்டில் ப்ளே ஸ்டேஷன், xbox, மொபைல் போன்களில் கேம் ஆடுகின்றனர். யாரும் மைதானம் சென்று விளையாடுவதில்லை. மைதானம் சென்று ஆடும் போதுதான் நாம் நிஜத்தில் விழுந்து எழ முடியும். வெறும் இலத்திரனியல் சாதனங்களை வைத்து கேம் ஆடுவதால் நமக்கு அனுபவம் எதுவும் வந்துவிடாது. எதுவாக இருப்பினும் நிஜ களத்தில் இறங்கி ஆட வேண்டும். வெற்றியோ தோல்வியோ நமக்கு பெரிய பாடத்தை கற்றுக் கொடுக்கவும். இன்றைய சமுதாயத்திடம் அறிவு தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றது. ஆனால் அதை எப்படி, எங்கு பயன்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. காரணம் அதற்கான அனுபவம் இன்மை. அனுபவம் கிடைக்க நிஜ களத்தில் இறங்காமல் நிழல் களத்தில் ஆடுவதுதான் அவர்களின் பிரச்சினை.

தன் மீது இருக்கும் கோபத்தில் தன் மகள் எடுத்திருக்கும் முடிவு அவள் வாழ்வை  சின்னாபின்னம் ஆக்க போகின்றது என்பது மட்டும் சாரதாவுக்கு புரிந்தது.

ஜனனியின் அறைக்குள் சாரதா நுழைந்தாள். " ஜனனி" என்று கூப்பிட்ட சாரதாவுக்கு கண் கலங்கிவிட்டது. மிகவும் மெதுவான குரலில்,

" நான் தான் சொன்னேன்ல, நீ சொல்ரத நான் கேட்குறேன்னு அப்புறம் ஏன் இப்படி பண்ண. உனக்கு ஏதும் ஆச்சின்னா நான் அன்னைக்கே செத்துடுவேன் ஜனனி. உன்ன இப்படி பார்க்குறதுக்கா நான் இவ்வளவு நாளும் கஷ்டப்பட்டேன். உனக்கு தெரியாது ஜனனி, உன்ன வளர்க்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு. முதல்ல படிச்சேன். அப்போலாம் நீ சின்னக் குழந்தை. எனக்கு அதிகமா பால் சுரக்காது. என்னால அதை கனேஷ் அங்கிள் கிட்ட சொல்ல முடியல. நீ எத்தனையோ நாள் பால் இல்லாம அழுதிருக்க. கனேஷ் அங்கிளோட பொண்டாட்டி ரொம்ப நல்லவங்க. நீ அழுகுறத வெச்சே அவங்க கண்டுபிடிச்சிட்டாங்க. எனக்கு பால் சுரக்குறது கம்மின்னு. அப்புறமா உனக்கு புட்டிப் பால் பழக்கினோம். எனக்கு அப்போலாம் செத்துடலாமான்னு இருக்கும். நம்மளால எல்லோருக்கும் வீன் கஷ்டம் அப்படின்னு. என்ன அவங்க படிக்க வெச்சதே பெரிய விஷயம். இதுல நீயும் கூட இருந்த. உனக்கு சாப்பாடு, சோப்பு, பவுடர் இது எல்லாத்துக்குமே அவங்களைத்தான் நான் கேட்கனும். இருந்தாலும் உனக்காக எல்லாமே பண்ணேன். ஏன்? ஏன்னா நீ என்றால் எனக்கு உயிர்" என்றவள் சிறிது தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

" உங்கப்பா கல்யாணம் முடிச்ச புதுசுல என்ன விட்டுட்டு இன்னொருத்திக்கிட்ட போனப்போ கனேஷ் அங்கிள்தான் எங்கம்மாகிட்ட வந்து ' எனக்கு கோயம்புத்தூர்ல டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு. வீட்டு வேலைக்கு ஆளு ஒன்னு வேணும். நான் சாரதாவ கூட்டி போகட்டுமா' அப்படின்னு கேட்டாரு. அந்த நேரத்துல நம்ம ஊர்ல ரொம்ப பஞ்சமும் பட்டினியும் தலை தூக்கியிருந்திச்சி. எங்கம்மாவும் நான் இங்க இருக்குறத விட வெளியில போனா அவங்களுக்கு செலவு கம்மின்னு அனுப்பிட்டாங்க. ஆனா அதுக்கு அப்புறமாத்தான் எனக்கு தெரியும், எனக்கு சம்பளம்னு ஒவ்வொரு மாசமும் கனேஷ் அங்கிள் எங்கம்மாவுக்கு பணம் அனுப்பியிருக்காங்க. அதே நேரம் அவரு செல்வுலேயே என்ன படிக்க வெச்சிருக்காறு.

நான் படிச்சி முடிச்சி வேலையில சேர்ந்ததும்தான் எங்கம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு, நான் கோயம்புத்தூர் வந்து படிச்ச விசயம். கனேஷ் அங்கிள ரொம்ப கேவலமா திட்டிட்டாங்க. அதுக்கு அப்புறம் என்னோட வேலை டீச்சர் அப்படின்னு தெரிஞ்சதும் கொஞ்சம் அமைதி ஆகிட்டாங்க. மாசா மாசம் என் சம்பளத்துல பாதிய நான் அவங்களுக்கு அனுப்பனும். அது மட்டும் இல்லாம நான் என்ன முடிவு எடுக்குறதா இருந்தாலும் அவன்கிட்ட கேட்டுத்தான் எடுக்கனும். இதுக்கெல்லாம் நான் ஒத்துக்கிட்டா என்ன தனியா இங்க இருக்க அனுமதிச்சாங்க. எனக்கு எப்படியோ இவங்க எல்லோரையும் விட்டு தனியா இருந்தாத்தான் சந்தோசம். ஆனால் இப்போ நீ பண்ண காரியத்தால இங்கேயே நிரந்தரமா வர்ற மாதிரி ஆகிடிச்சி" என்றாள்.

சாரதா பட்ட கஷ்டங்கள் எதையும் ஜனனியிடம் அவளாக கூறியது இல்லை. சில சில விடயங்கள் மட்டும் அவள் காற்று வாக்கில் கேட்டிருக்கின்றாள். ஆனால் இன்றுதான் சாரதாவின் வாயால் அவளின் முழுக் கதையயும் கேட்டாள். தன் தாயின் கலக்கம் ஜனனியின் மனதை குடைந்தது. சுழியில் மாட்டிக் கொண்டு தத்தளிக்கும் இலை போல அவள் மனது ஒரு நிம்மதி இல்லாமல் சுற்றிக் கொண்டு இருந்தது.

" இட்ஸ் டூ லேட் மா. ஆனா இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. என் பொண்ணு உன்ன கட்டிக்க மாட்டான்னு உன் தம்பிக்கிட்ட சொல்லு. நான் உன்கூடவே கோயம்புத்தூர் வந்துடுறேன்" என்றாள். இதைக் கேட்டதும் சாரதா அப்படியே அமைதியாக நின்றாள். ஜனனிக்கு தெரியும் தன் தாயால் வாய் விட்டு அவள் தம்பியிடம் கேட்க முடியாது என்று. தன் இயலாமையை எண்ணி நொந்து கொண்டவள் ஜனனியின் அறையில் இருந்து வெளியேறினாள்.

திருமன நாள்....

மேடையில் மணப்பெண் கோலத்தில் பதினாழு வயது சிறுமி இருக்க, திருமண சடங்குகள் ஜோராக நடந்து கொண்டிருந்தது. இதை எல்லாம் பார்த்த சாரதாவின் மனம் வெம்பிக் கொண்டிருந்தது. சாஸ்த்திர சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து மனமகனும் மேடையில் வந்து அமரும் நேரம் அங்கு பெரிய போலீஸ் பட்டாளமே வந்திவிட்டது. கூட்டத்தில் இருந்த யாரோ ஒருத்தர் " மணப்பொண்ணு அமைச்சர் திருவாசகத்தோட பொண்ணு ப்ரெண்டாம். அதான் அமைச்சர் வர்றதுக்கு முன்னாடி போலீஸ் வந்திருக்கு" என்றார். இதை கேட்டதும் குமார் ஜனனியை பார்க்க அவள் முகத்தில் ஒரு நக்கல் கலந்த சிரிப்பு தெரிந்தது. அந்த சிரிப்பு குமாருக்கு சரியாக தோன்றவில்லை.

அங்கு வந்து சேர்ந்த அமைச்சர் திருவாசகத்துக்கு பேரதிர்ச்சி. தன் மகள் தனக்கு தெரிந்த யாரோ ஒருவருக்கு திருமனம் என்று கூறினாலேயே அன்றி அது தன் மகளின் வயதை ஒத்த ஜனனிக்குத்தான் என்று அவருக்கு தெரியாது. அவர் கோபமாக தன் மகளை பார்க்க அவள் " அப்பா கொஞ்சம் பொறுமையா இருங்க. எனக்கு என்னமோ இந்த கல்யாணத்துல ஜனனிக்கு இஷ்டமில்லைன்னு தெரியுது. அவள போர்ஸ் பண்ணித்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சிருக்கனும். ஏன்னா அவளோட ப்ரெண்ட் சனாவ கூட கூப்பிடாம என்ன அவ போன் பண்ணி வரச் சொல்லிருக்கான்னா அதுல ஏதோ ஒன்னு இருக்கனும். இருங்க அவ பக்கதுல போய் நான் என்னான்னு கேட்டுட்டு வர்றேன்" என்று கூறிய காவியா ஜனனியிடம் போக முன் அங்கு சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.

" சார் எங்களுக்கு இங்க ஒரு பொண்ணுக்கு சைல்ட் மேரேஜ் பண்ணிவைக்கிறதா இன்பார்மேசன் வந்திருக்கு. இந்த மாப்பிளை, அப்புறம் முன்னின்று நடத்தி வைக்கிற எல்லோரையும் போக்சோ சட்டத்துல அரஸ்ட் பண்ண போறோம். ஆனா நீங்களும் இந்த கல்யாணத்துல இருக்குறதால ஏதும் ப்ராப்ளம் ஆகிடுமோன்னு யோசிக்கிறோம் சார்" என்று அந்த அதிகாரிகள் அமைச்சரை பார்த்து கேட்டனர்.

இப்போதுதான் காவியாவுக்கு ஜனனி ஏன் நேற்றிரவு தனக்கு கால் செய்து ' நாளைக்கு எனக்கு கல்யாணம். கண்டிப்பா அப்பாவையும் கூட்டிட்டு வந்துடு' அப்படின்னு சொன்னா என்று. ஏனென்றால் அமைச்சர் ஒரு இடத்துக்கு வந்தால் அங்கு மீடியாவும் வரும். இதனால் அவள் யார், அவளின் குட்ம்பத்தை யார் யார் ஆட்டுவிக்கின்றார்கள் என்ற விடயத்தை உலகறிய செய்ய அவளுக்கு காவியாவின் உதவி தேவைப்பட்டது. அதை அவள் மிகக் கச்சிதமாகவே செய்தாள். குமார் மற்றும் அவளின் தாயார் இருவரும் போக்சோ சட்டத்தில் அரஸ்ட் செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு இனி விடிவு காலம் என்பதே இல்லாமல் செய்துவிட்டாள் சாரதாவின் தவப் புதல்வி.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro