பூ - 21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"சிவா எப்ப வர்றான்.... கல்யாண மாப்பிள்ளை ரெண்டு பேரும் இப்படி வீட்டுல இல்லாம கம்பனி வேலை அப்படி இப்படினு இருந்தா எப்படி... ஏங்க... நீங்க அவன் கிட்ட பேசுனீங்களா இல்லையா...." என்று மகா கேட்க அப்பொழுது....

வீட்டிற்குள் நுழைந்தனர் அஸ்வினும் சிவாவும்...

"அம்மா அண்ணா ரெண்டு பேரும் வந்தாச்சு...." என்றாள் அபி...

"டேய் ரெண்டு பேரும் அங்கேயே நில்லுங்கடா..." என்றார் மகா...

"மா... என்ன ஆச்சு... ஏன்..????" என்றான் அஸ்வின்.

"மா நா ரெண்டு நாளாக வராம இருந்தது தப்புதான் அதுக்கு....
இப்படியா... உள்ள விடுங்க மா.... " என்றான் சிவா....

"மகா ரெண்டு பேரும் வேலை விசியமா தானே வெளிய போனாங்க.... விடுமா.... " என்றார் குணா.

"இருங்க இன்னைக்கு ரெண்டு பேருக்கும் இருக்கு.... கனகா அதை கொண்டு வா...." என்றார் மகா. ( கனகா வீட்டில் வேலை செய்யும் பெண். ராமசாமி அவரின் கணவர். அதே வீட்டில் தோட்ட வேலை செய்பவர்.)

"சிவாம்மா இன்னைக்கு தோலஞ்ச.... மாம்ஸ் உங்களுக்கும் தான்.... இன்னைக்கு இருக்கு..." என்றாள் மோனு.

அவரோ கையில் திஸ்டி களிக்க ஆரத்தி தட்டை எடுத்துவர...

"என்ன மாம்ஸ்.... பயந்துட்டிங்களா.... பாவம் சிவாம்மா.... ரொம்ப பயந்துட்டியா...." என மோனு அவர்களை சீன்ட

"ஏய் வாலு.... கொஞ்சம் அமைதியா இப்படியே நில்லு..... இல்ல உனக்கு அப்பென்லிபே கிடைக்காது.... " என்றான் சிவா அவளது கையை எடுத்து வாயில் வைத்த படி....    

அவளோ வாயில் கை வைத்து நிற்க... "நிதா.... ஏன் இப்படி நிக்கிற...." என்றபடி உள்ளே நுழைந்தான் வைணு.

"அண்ணா மோனு ரொம்ப பேசுறான்னு இப்படி சிவாண்ணா தான் நிக்க வச்சாங்க...." என்று சிரித்தபடி அபி கூற...

"அபி எனக்கு ஒரு கப் காபி.... என்று அவளை உள்ளே அனுப்பி வைத்து விட்டு..... அவளிடம் வந்து.... "நல்ல பணிஸ்மேண்ட்.... நேத்து எனக்கு ஒரு ஆல் த பெஸ்ட் கூட சொல்லலைல இப்படியே நில்லு.... " என கூற

"ரொம்ப பண்ண வேணாம்.... ஏதோ பாவம் சிவாம்மா மனசு கஷ்ட படுமெண்ணு நின்னேன்.... நாங்க சொன்னதுக்கே இங்க பதில் இல்ல....  இதுல ஆல் த பெஸ்ட் வேற வழிய விடுங்க..." என நகர அவளது கையை பிடித்தவன்.... "வா காலைல மாறி தூக்கிகிட்டு போறேன்...." என அவளை தூக்க கையை விட "அப்பா சாமி ஆளை விடு..." என கையை கும்மிட்ட படி ஓடியே விட்டாள்.

அந்த பயம் இருக்கட்டும்.... என மனதில் நினைத்தவன் சோபாவில் அமர்ந்தான்....

அனைவருக்கும் அபியும் மகாவும் காபி கொண்டு வர "அத்தை நீங்களும் இங்க உக்காருங்க....' என்றவள் 'மாமா இதுதான் ஸ்டேஜ்....." என ஆரமித்தவள் முழு பிளானையும் சொல்லி  ஏதாச்சும் மாத்தனுமுனா சொல்லுங்க என முடிக்க....

அவரவர் தங்கள் விருப்பத்தை சொல்ல அதனையும் கேட்டு கொண்டாள். "மாமா நானும் அபியும் நாளைக்கு மது அக்கா வீட்டுக்கு  போய் கேட்டுட்டு அவுங்களுக்கு ஓகேனா நாங்க வேலைய ஸ்டார்ட் பண்ணிறோம்.... உங்களுக்கு ஓகே தான... "

"எனக்கு ஓகே டா.... நாளை மறுநாள் பந்த கால் நடுற பங்ஷன்.... அதனால உங்க ரெண்டு பேரோட வேலைய முடிச்சிட்டு.... வீட்டுல இருக்குற செட் பண்ணிருங்க.... குட்டிம்மா பண்ணிருக்க பிளான்க்கு.... நீங்க இல்ல எல்லாரும் வீட்டில தான் இருக்கணும்...." என்றபடி உள்ளே சென்றார்.

"அத்தை எப்படி ஓகே வா...." என்றாள் கண்களாலேயே....

அவரும் ஓகே ஓகே என்றார் முகத்தில் சந்தோசத்துடன்... ஏனெனில் இது அவரது ஆசை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது.... திருமணம் என்பது அனைத்து உறவுகளையும் இணைத்து சந்தோசமாக கொண்டாடவெண்டிய நிகழ்வு.... மகா விரும்பியது அதுவே... தங்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே... அதனை இவளிடம் கூற அனைவரையும் இணைத்து கல்யாண பிளான் பண்ணிட்டா....

"ஏய் வாலு பிளான் சூப்பரா இருக்கு... மா பசிக்குது..!!!" என்றான் சிவா... 

"மா நா போய் ப்ரெஸ் ஆயிட்டு வந்தரேன்... " என மேலே வைணு சொல்லி சென்றான்.

"அப்பா... ஒரு சின்ன பிராப்ளம்" என்றான் அஸ்வின் குனாவிடம்....

"என்ன ஆச்சி தம்பி.... "

"அந்த s.l.g கம்பனி தான்... டீல் கேன்சல் பண்ண முடியாதுனு சொல்லுரானுங்க.... கேன்சல் பண்ணனுமுனா அமவுண்ட் கேக்குறாங்க.... இதுக்கு முன்னாடி நம்ம கிட்ட வாங்கின டாக்குமேண்ட்ல அப்படி சைன் வாங்கி இருக்கானுங்க.... இப்பதான் சந்துருப்பா கிட்ட கேட்டேன்... அவர்தான் சொன்னாரு.... இப்ப நம்ம என்ன பண்ணுறது.... "

"ஏதாச்சும் பண்ணுவோம்... கண்டிப்பா ஏதோ ஒரு பிளான் ஓடதான் நம்மல டார்கேட் பண்ணி இருக்காங்க... அந்த கம்பனி பத்தி சிவாகிட்ட கேளு... அப்பறம் குட்டிமா கிட்டயும் கேக்கலாம்னு எனக்கு தோணுது...."

"வேண்டாம் பா... நா சிவாட்ட கேக்குறேன்... அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்... இதை பத்தி..." என அஸ்வின் கூற... குணா மறுப்பேதும் கூறவில்லை... ஏனெனில் ஏற்கனவே சிலரால் அவளுக்கு ஆபத்து என்பதை உணர்ந்த குணா அவளை இந்த பிரச்சனைக்குள் கொண்டு வர விரும்ப வில்லை.

அனைவரும் இரவு உணவு உண்டு அவரவர் அறைக்கு செல்ல....

"நிதா... மாடிக்கு வா..." என கண்ணசைத்து  சென்றான்  வைணு.

மேலே வந்தவள்...

"சொல்லு நவா... என்ன ஆச்சு.... "

"நாளைக்கு  நியூஸ் வெளிய வந்துரும்.... கோர்ட் ல ஆஜர் பண்ண போறோம்...." என்றான் சந்தோசமாக....

"என்ன ACP சார்.... ரொம்ப ஹேப்பி போல... நா உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்....  அம்மா அப்பா தம்பி எல்லாரும் நாளை மாலை வராங்க.... சோ...." என சிரித்த படி சொல்ல...

"இப்ப தானடி உன்ன கூட்டிட்டு வந்தேன் அதுக்குள்ளையா... அவுங்க வர பத்து நாள் ஆகுமுனு சொன்ன... இப்ப என்ன... "

"வர்றாங்க... அவ்வுளவு தான் எனக்கு தெரியும்.... " என்றாள்.

"நீ அவுங்க வந்தா அங்க போயிடுவியா...???'' என்றான்.
அவளோ அமைதியாக நிற்க

"சரி எத பத்தியும் யோசிக்காம தூங்கு...."  என அவளை அனுப்பி வைத்தவன்... "இனிமே உன்ன என்னைய விட்டு போக விடமாட்டேன்.... என் செல்ல சண்டக்காரி... எத்தனையோ பொண்ணுங்க என் லைஃப்ல வந்திருக்காங்க.. பட் என்னோட 11 வயசுல இருந்தே உன்ன மட்டும் என்னால மறக்கவே முடியல... நீ சொல்லுற அந்த நவா அப்படிங்கிற பேரு... கேட்கும் போதே அதுல ஒரு பீல் செமையா இருக்கும்... உன்ன இனிமே எங்கையும் போக விட மாட்டேன்.... டி என் செல்ல......****"  என்றபடி தூங்க சென்றான்.

"ஏங்க என் அண்ணா கிட்ட இன்னைக்கு பேசினேன்.... அவரு பொன்ன அனுப்பி வைக்கிறேன் என சொல்லுராரு.... அவரு கல்யாணத்தப்போ வற்றாராம்.... நீங்க என்ன சொல்றீங்க... அவள வர சொல்லட்டா...???" என கண்களில் ஆசை மற்றும் ஏக்கத்துடன் கேட்க...

அவரும் சரி என தலை அசைத்தார்.

மறுநாள்....

"அத்தை மாமா... உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் இன்னைக்கு நவா இந்த கேஸ்ஸ முடுச்சுறுவாரு... அதனால...." என அவள் இழுக்க...

"அதனால.... என்ன????" என்றார் மகா சற்று கோவமாக...

"இல்ல அத்தை... அது வந்து... அப்பா அம்மா இன்னைக்கு வந்திருவாங்க...." என்றாள் தயங்கிய படி...

"குட்டிமா... உன்ன இங்க கூட்டிட்டு வந்ததுக்கு அது மட்டும் காரணம் இல்லை... மகா என்கிட்ட சொல்லிகிட்டே இருப்பா.... மோனுவ நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணுமுனு... அவ கூட நா இருக்கணுமுணு... அதுனால தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தோம்... நா கதிர் கிட்ட பேசிட்டேன்.... அவனும் இங்க தான் தங்க போரான் சோ... இங்க தான் இருக்க போற.... ஏன் வைணு உன்கிட்ட சொல்லலை யா....???" என கூற அவளோ கண்களை விரித்து என்ன எப்போ என்பது போல் பார்க்க....

"இல்ல பா நா சொல்லல... சர்ப்ரைஸ்ஸா இருக்குமுணு... சொல்லல... பட் மேடம் எக்பிரசன் சூப்பர்... ஐ லைக் இட்...." என்றான் அவளின் முன்பு கையை நீட்டி....

உன்ன என அவள் துரத்த "இந்த ரெண்டு கொசு தொல்லையும் தாங்கல.... ஒன்னு அவன் இவள தோரத்துறான் இல்ல இது அவன தோரத்துது...." என சலித்துகொண்டு அஸ்வின் கூற சிவாவும் அபியும் சிரிக்க குணாவோ சரி என்பது போல் தலையை ஆட்டி சென்றார்.

''அபி என் அண்ணா பொண்ணு வர்ற.... இன்னைக்கு.... நீங்க அங்க போய்ட்டு இங்க சீக்கிரம் வந்திருங்க.... சரியா..??" என சமயல் அறை சென்றார்.

வாடி என் செல்ல குட்டி... என அவளை வெளியே அழைத்துவர ஓடியவன் அவள் வெளிய வந்ததும் அவளது கையை பிடித்து கொண்டு "இப்ப எதுக்கு என்னை தோரத்துற.... "

"நீ... நீ... ஏன் நேத்தே என்கிட்ட சொல்லல...." என மூக்கு சிவக்க சொண்ணவளின் மூக்கை பிடித்து இழுத்தவன்.... "சும்மா தான் சரி வா உன்ன மது வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்... "

"அட நீங்க வேற ACP சார்.... நேத்து நைட்டு நா கீழ வந்ததுக்கு அப்பறம் என் ரெண்டு மாம்ஸ்களும் சேர்ந்து நாளைக்கு நம்மதான் போறோம்னு சொல்லிருச்சுங்க... நா அபி அப்பறம் அவுங்க ரெண்டு பேரு எல்லாரும் தான் போறோம்... சோ நீங்க கெலம்புங்க...." என்றாள் அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா என்று தெரிய படியே....

"அங்கையெல்லம் ஒன்னும் கிடைக்காது... தேடாத.... சரி கவனமா இருக்கணும்.... ஓகே... அப்பறம் நா கோர்ட்டுக்கு போறேன் ஒரு ஆல் த பெஸ்ட்... கிடைக்குமா...???'' என இழுக்க அவளோ..... புரியாமல் பார்த்தவள் பின் "அத்தை...." என கத்த... அவனோ அவளை அங்கேயே விட்டு விட்டு உள்ளே சென்று விட்டான். இதனை எல்லாம் ஒரு ஜோடி கண்கள் பார்த்து கொண்டிருந்தது.... என்ன மனநிலையில் என்பது அந்த கண்களில் தெரியவில்லை.....

பின் அனைவரும் தங்கள் வேலையை தொடங்க நால்வரும் மது வீட்டிற்கு சென்றனர். இங்கு மகாவின் அண்ணன் மகள் வந்து கொண்டிருந்தாள்.

 

இது என்னோட முதல் கதை... எப்படி எழுதுறேன் உங்களுக்கு பிடிச்சமாதிரி இருக்கா... இல்ல நா ஏதாவது மாத்தனுமா.... கதை ரொம்ப மெதுவாக போகுதா .... இந்தாமாரி எத்தச்சும் சொன்னா எனக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும்.... ஏன்னா எனக்கு எழுதவே தோணல எப்பவுமே எழுதும் போது ரொம்ப ஆர்வமா எழுதுவேன் ஆனா... இன்னைக்கு என்னால எழுதவே முடியல.... இது வரைக்கும் 1000 - 1500 க்கு குறைவான வார்த்தைகளில் நா ஒரே ஒரு தடவை தான் போஸ்ட் பண்ணி இருக்கேன்... அதுக்கு அப்பறம் இன்னைக்கு தான்... நீங்க ஏதாச்சும் சொன்னா எனக்கு எழுத கொஞ்சம் ஆர்வமா இருக்கும் நல்ல இல்லைனு சொன்னாலும் பரவால்ல..... பட் ஏதாச்சும் சொல்லுங்க பா... பிளீஸ்...🙏🙏🙏🙏







Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro