பகுதி 49

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ

வாழ்க்கையில் பல போராட்டங்கள்,இன்னல்கள் சந்தித்து தன் வாழ்க்கை இப்படியே தான் இருக்குமா என வாழ்க்கையை வெறுக்கும் தருணம் அவளுள்ளும் அழகான காதல் பூத்து இறுதியில் அதை வேணாம் என முடிவு செய்து தூக்கி எறிந்த பின்னும் அவன் மேல் கொண்ட காதல் மாறவில்லை ,மறையவில்லை.

ஆனந்தியை வினு மண்டபத்திலிருத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டான்...
இத்தனை நாள் ஏங்கிய அன்பு அவளுக்கு கிடைத்தும் அதை ஏற்கும் மனநிலையில் அவள் இல்லை...
அவளுக்கு ஒரு மாற்றம் கிடைக்கட்டும் என வினு ஆனந்தியை பாரீஸ் அழைத்துச் செல்ல ஏன் அங்கு சென்றோம் என ஆகிவிட்டது வினுவிற்கு.

வீட்டிலிருக்கும் வரை அவளுக்கு என்ன வேண்டும் என்றாலும் அவள் நாடுவது வினுவைத் தான். அவள் எந்தவொரு அன்பிற்கும் அடிமையாக விரும்பவில்லை ,நம்பவும் விரும்பவில்லை.

பாரீஸ் வந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவள் அவனுடன் பேச கூட முயற்சி செய்ய வில்லை.
மண்டபத்திலிருந்து வந்ததிலிருந்து அவள் சிரிக்க கூட முயற்சி செய்ய வில்லை.

இப்போது அபியை பார்த்த அடுத்த நொடி புன்னகைத்துக் கொண்டு அவனைப் பார்த்து ஓடியவளைக் கண்டு கோபம் தலைக்கேற நின்றிருந்தான் வினு.

அவனுக்கு அவன் ஆனந்தி தன்னால் மட்டுமே சிரிக்க வேண்டும், அவள் சிரிப்பிற்கு அவன் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்.

ஏற்கனவே அவளை உயிராக நினைக்கும் அவனுக்கு அவள் வேறு ஒருவரை உயிராக நினைக்கிறாள் எனும் போதே அபியின் மேல் ஏற்பட்ட பொறாமை,கோபம் இப்போது அவள் சிரிக்க கூட அவன் தான் வேண்டுமா எனத் தோன்ற வெறிப்பிடித்தவன் போல் மாறிவிட்டான்.

தன் அருகே மூச்சு வாங்க நிற்பவளைக் கண்டு புன்னகைத்த அபி "மெதுவா நடந்து வந்தா தான் என்ன??" எனக் கூறி தலையில் கொட்ட
அவள் தலையைத் தேய்த்துக் கொண்டே " எப்படி இருக்க அபி?? " எனக் கேட்க

தன்னருகே தியாவை இழுத்தவன் அவளை அணைத்தவாறு தோளில் சாய்த்துக் கொண்டு எப்படி இருக்கேன் நீயே சொல்லு எனக் கூறி கண் சிமிட்ட

"ஹாஹா சூப்பரா இருக்க போல" என்றவள் தியாவிடம் ஹாய் எனக் கூறினாள்.

அவளை நோக்கி நன்றி கலந்த பார்வையை செலுத்தியவள் "நீங்க எப்படி இருக்கீங்க ஆனந்தி" எனக் கேட்க

" அவ எப்பவும் சூப்பரா தான் இருப்பா இந்த வினு கூட இருக்க வரை " என்றவன் ஆனந்தியின் கரங்களை தன்னோடு சேர்த்துக் கொள்ள

அதிலிருந்து தன் கரங்களை விடுவித்தவள் அபியிடம் பேச ஆரம்பிக்க அதில் வேதனை அடைந்தவன் "நீ பேசிட்டு வா நந்து மா நான் போறேன்" எனக் கூறிச் சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்து அவன் அருகே டேபிளில் அமர்ந்தவள் " இன்னும் நான் அபியை மறக்க முடியாம இருக்கேன் ஆனால் அபி ஹேப்பியா இருக்கிறதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு..." அவள் வார்த்தைக்கு வார்த்தை அபி எனக் கூறுவதை கேட்க முடியாமல்
தான் அமர்ந்திருந்த இருக்கையில் தன் கையால் ஓங்கி விடாமல் அடித்தவன் தன்னை நோக்கி அவள் பயந்த பார்வை பார்ப்பதை பார்த்து கையை உதறிக் கொண்டு அவள் காலருகே கீழே அமர்ந்தான்.

ஆனந்தியின் கரங்களை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டவன் " நந்து மா ஒன்னுல்ல டா பயப்படாத சும்மா சும்மா எங்க சிரி பாக்கலாம்" என்றவன் அவளைப் பார்க்க

அவளுக்கு இது ஒன்றும் புதிதல்ல எப்போதுமே அவன் அன்பின் வெளிப்பாடு இப்படி தான் இருக்கும்.
கைகளில் இரத்தம் கன்றி அவன் நிறத்திற்கு அது நன்றாகவே தெரிய
"ஏன் வினு இப்படி பண்ணுற" கண்கள் கலங்கியவாறே கேட்க

அவள் கலங்கிய கண்களை கண்டவன் உடனே எழுந்து நின்று அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவன் தலையை பிடித்துக் கொண்டு மறுபடியும் அதே இடத்தில் அமர்ந்தான்.

" இந்த இரண்டு வாரம் உன்கிட்ட எதையுமே அவங்க எதிர்பார்க்கல,உன்மேல அன்பை மட்டும் தானே காட்டினாங்க.
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்பு டா அவங்களோடது.
நான் உன்கிட்ட என் காதலை சொன்ன அன்றைக்கே வீட்டுல எல்லாரையும் உட்கார வெச்சு நான் ஒரு பெண்ணை லவ் பண்ணுறேன்.அவ கிட்ட இன்றைக்கு தான் என் காதலை சொன்னேனு சொன்னேன்.
அப்போ இருந்தே உன்னை எங்க வீட்டு பொண்ணா தான் நினைக்கிறாங்க வீட்டுல இருக்கவங்களோட அன்பை பொய்னு நினைக்கிறியா??" என்றவன் அவள் அப்படி கூறிட கூடாது என்ற நினைப்புடன் ஏறிட

அவள் எதுவும் கூறாமல் எழுந்து கொள்ள அந்த செய்கையிலே கண்டுகொண்டான் அவள் அப்படி தான் நினைக்கிறாள் என்று.

"நந்து மா நான் உன் மேல வெச்சுருக்க அன்பும் பொய்னு நினைக்கிறியா?" எனக் கேட்க

அவன் வாயை மூடியவள் " இல்லை" எனத் தலையாட்ட

அதில் புன்னகைத்தவன் உடனே கீழே முட்டியிட்டு " நந்து மா வில் யூ மேரி மீ" எனக் கேட்க

அவனை முறைத்தவள் சிரிக்க ஆரம்பித்தாள்.
அவன் இப்படி கேட்பது இது முதல் முறை அல்ல.
எப்போது அவள் மேல் அவன் கொண்ட காதல் அதிகமானாலும் உடனே இப்படி முட்டி போட்டு விடுவான்.
முதலில் முறைத்தாலும் போக போக அவளுக்கு சிரிப்பு தான் வந்தது அவன் செய்கையால்.
நடு ரோடு,வேலை செய்யும் ஆபிஸ்,சினிமா தியேட்டர்,கோவில் என பல இடங்கள்...

அவள் சிரிப்பில் தன்னைத் தொலைத்தவன் அவள் சிரிப்புக் கூட தன்னால் தான் இருக்க வேண்டும் என நினைத்து அதை சாதித்த கர்வத்தில் எழுந்து நின்று அவளுடன் சென்றான்.
அன்றிரவே ரிட்டன் டிக்கெட் புக் செய்து விட்டான்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
ஆனந்தி சென்ற பின் தியாவை அழைத்துச் சென்று அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தவன் " தியா மா நான் இப்போ ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.
நான் மட்டும் தான் ஹேப்பியஸ்ட் பர்சன் இன் தி வேர்ல்ட் ,எல்லாத்துக்கும் காரணம் நீ மட்டும் தான் தியா.
இப்போ என் மனசுல நீ தான் இருக்க நீ மட்டும் தான் இருக்க. லவ் யூ வில் யூ பீ மை பெட்டர் ஹாப் பாரெவர்" என முகத்தை தன் கைகளில் தாங்கி கேட்க

அவன் கண்களையே பார்த்திருந்தவள்
"ம்ம்ம்" வேகமாக தலையாட்ட
அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவன்
விழிகளில் மேல் தன் இதழ்களைப் பதித்தான்.

"அய்யோ அபி" என சிறுவர்கள் கத்திக் கொண்டே தங்களை கண்களை மூட

அவர்களை கண்டு ஈஈஈ என இளித்தவன் அவர்கள் அருகில் சென்று அனைவரையும் அனைத்துக் கொண்டான்.

"அவங்க கண்ணீரை நீ துடைக்கிற இனிமேல் அவங்க கிட்ட அடி வாங்கிட்டு நீ அழுவியே அப்போ உனக்கு யாருப்பா கண்ணைத் துடைப்பா" என அழுவது போல் ஒரு சிறுவன் கூற

" அதையும் தியாவே செஞ்சிருவாங்க" என்ற ஒருவன் அவர்களைப் பார்த்து சிரித்தான்.

"யாருங்க இவங்க எல்லாம் அழகா தமிழ் பேசுறாங்களே" என தியா கேட்க

" இவங்கெல்லாம் தமிழ் பசங்க தான் தமிழ் பேமிலி...நம்ம வீட்டு பக்கத்துல தான் இருக்காங்க நீ டேன்ஸ் ப்ராக்டிஷ் போனதும் இவங்க தான் எனக்கு கம்பெனி" எனக் கூற

"அப்புறம் எல்லாத்தையும் சொல்லுங்க" என சிறுவர்கள் கூற

" என்னது" என தியா கேட்க

திருத்திருவென விழித்தவன் ஒன்னுல்லயே எனக் கூற

"உங்களை ப்ரொப்போஸ் பண்ண ஐடியா கொடுத்ததும் நாங்க தான் அங்க போட்ட சுமார் காபி கூட இதோ இவன் தான் வெச்சான் என ஒரு சிறுவனை காட்டியவன் உங்க ஆளு டம்மி பீஸ் தியா " எனக் கூற

அதில் சிரித்தவள் அவர்களை முறைத்துக் கொண்டே " என் ஆளு இப்படியெல்லாம் ப்ரொப்போஸ்
பண்ணணும்னு அவசியமே இல்லை" என்றவள் " எப்போமே என் ஆளு மாஸ் தான்" எனக் கூறி காலரைத் தூக்கிக் கொள்ள

அவளருகில் வந்தவன் அவளை அணைத்துக் கொண்டான்.

" அய்யய்யோ நாங்க எதையும் பாக்கல" எனக் கூற

" அடேய் போங்களேன் டா அவரே எப்பவாவது தான் ரெமோவா இருப்பாரு" எனக் கூறி அபியைப் பார்த்துக் கண்ணடிக்க

அவள் காதருகே குனிந்தவன் "நான் நைட் ப்ரூவ் பண்ணுறேன் ரெமோவா அம்பியானு" எனக் கூற
அதில் சிவந்தவள் அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

"அடியே குண்டு தக்காளி எழுந்திரு டி காலேஜ் போகணும்" இதோடு அவன் பத்தாவது முறையாக எழுப்பி விட்டான்.

"பைவ் மினிட்ஸ் " என்றவள் மறுபடியும் பெட் சீட்டை மூட

அவளை அப்படியே தூக்கியவன்
"கையில் மிதக்கும் கனவா நீ
கைகால் முளைத்த காற்றா நீ
இப்போ உன்னை நனைக்க போறேனே" என்றவன் அவளை சவர் முன் நிறுத்த

அதில் அலறியடித்து கீழே குதித்தவள் அவனோடு ஒன்றி நின்று அவனைக் கண்டு முறைக்க
தன் அனைத்துப் பற்களையும் காட்டியவன் வெளியே செல்ல முயற்ச்சிக்க அதற்கு மேஹா விட்டால் தானே அவனையும் முழுவதுமாக நனைத்து
இருபது நிமிட குளியல் முப்பது நாற்பது என அதிகரித்துக் கொண்டே செல்ல
ஒரு மணி நேரம் கழித்து தான் வெளியே வந்தனர்.

மணி எட்டு முப்பதைக் காட்ட
இருவரும் ஒருவரையொருவர் பார்த்து முறைத்துக் கொண்டே அடித்து பிடித்து கிளம்ப
அவள் லஞ்ச் பேக் செய்ய அவன் சாப்பிட்டுக் கொண்டே அவளுக்கும் ஊட்டினான்.

அவன் கைகளை வேணும் என்றே கடித்தவள் அவனைப் பார்த்து சிரிக்க அவளை முறைத்தவன் " ஏண்டி என்னை கடிச்ச ஒழுங்கா உன் கை காட்டு நானும் கடிப்பேன்" என ஓடுபவளை துறத்த

அவள் அவனிடம் மாட்டாமல் அங்குப் இங்கும் ஓட(டேய் நீங்க காலேஜ்க்கு போக மாட்டீங்க...)

கடியோடு விட்டால் அவன் மனோ இல்லையே...

💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
" சஜூ மா என்னடா செய்யுது??"
முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அஜூ கேட்க

"அச்சோ என் அழகு" அவனுக்கு நெட்டி முறித்தவள் அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுக்க

ஈஈஈஈ எதுக்குடி வஞ்சனை பண்ணுற இந்த நல்லாவே கொடு என கன்னத்தைக் காட்ட அதைக் கடித்தவள் அவன் முறைப்பதைக் கண்டு சிரித்துக் கொண்டே மறுபடியும் பாத்ரூமிற்கு எழுந்து ஓட
தலையில் கை வைத்தவன் என்ன செய்வது என தெரியாமல் நாற்காலியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் அருகில் சென்றான்.

அவள் முகம் கழுவி வெளியே வர
" இங்கேயே உட்கார்ந்துக்கோ சஜூ மா மறுபடியும் உனக்கு வாமிட் வரும்" என்றவன் அவள் அமர வைத்து சுடு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.

" வா நம்ம டாக்டர் கிட்ட போகலாம் " எனக் கூற

" இதுக்கெல்லாம் போவாங்களா??" என்றவள் சிரித்துக் கொண்டே கேட்க

அவள் வயிற்றைக் கட்டிக் கொண்டவன் " பாப்பு அம்மா பாவம்டா நீங்க இப்படிலாம் அம்மாவை பண்ண கூடாது தானே அப்புறம் உங்க மீசை தாத்தா என்ன தான் அடிப்பாரு.
செல்லம்ல தங்கம்ல சமத்தா இருப்பீங்களாம்" எனக் கூறி முத்தம் வைத்து எழுந்தவன் பொறாமையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் மனைவிக்கும் கொடுத்து சாப்பிட சொல்ல

வாமிட் வரும் என அவள் மறுக்க
வற்புறுத்தி ஊட்டி விட்டான்.

அதன் பிறகு வாமிட் வராமல் அவள் நார்மலாக இருக்க
இதே தினமும் தொடர்ந்தது.
இப்போதே அவர்கள் குழந்தை அப்பா பேச்சை கேட்டு நடக்க அதற்கும் அஜூ தான் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான் அவனின் அன்பு மனைவியிடம்.

💙💙💙💙💙💙💙💙💙💙💙

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro